மேலும் அறிய

11ஆயிரம் காலிப்பணியிடங்களை அறிவித்த டிஎன்பிஎஸ்சி: குரூப் 1 முதல் குரூப் 4 வரை முழு விபரம் இதோ!

டிஎன்பிஎஸ்சியின் முந்தையத் தேர்வுகள் போல் இல்லாமல் 2022 ஆம் ஆண்டு குரூப் 2 தேர்விற்கு குரூப் 4 க்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை விட அதிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குரூப் 1 முதல் குரூப் 4 வரை வருகின்ற 2022 ஆம் ஆண்டில் 11 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படும்  என டிஎன்பிஎஸ்சி  அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இளைஞர்கள் பலரின் கனவு எப்படியாவது தேர்வில் வெற்றிப்பெற்று அரசுப்பணியில் சேர வேண்டும் என்பது தான். இதற்காக ஏதாவது ஒரு டிகிரியை முடித்துவிட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர்  தேர்வாணையம் நடத்தும் குரூப் தேர்விற்கு தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள். இந்த தேர்வுகளில் தேர்ச்சிப்பெற்றால் மட்டுமே அரசுப்பணியில் அவர்கள் சேர முடியும். இதனால் தமிழகத்தைப்பொறுத்தவரை குரூப் 1 ,குரூப் 2, குரூப் 4 என்ற வகையில் நடத்தப்படும் இந்த தேர்வை ஆண்டுதோறும்  லட்சக்கணக்காக மாணவர்கள் மற்றும்  தனியார் நிறுவன ஊழியர்கள் என பலரும் எழுதி வருகின்றனர். ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்படாமல் இருந்தது மாணவர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது. 

  • 11ஆயிரம் காலிப்பணியிடங்களை அறிவித்த டிஎன்பிஎஸ்சி: குரூப் 1 முதல் குரூப் 4 வரை முழு விபரம் இதோ!

இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, டிஎன்பிஎஸ்சி தலைவர் 2022 ஆம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை வெளியிட்டதோடு,  எப்போது தேர்வு என்பது குறித்து பின்னர் முழுமையாக அறிவிப்பு தெரிவிக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 1 தேர்விற்கு 49  இடங்களும், குரூப்2  தேர்விற்கு 101 இடங்களும்,  குரூப்2 A தேர்விற்கு  5730 இடங்கள் மற்றும்  குரூப் 4 தேர்விற்கு 5255 இடங்கள் என மொத்தம் 11 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வை எதிர்நோக்கி இருக்கும் இளைஞர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 2022 ஆம் ஜனவரி மாதம் முதல் தேர்வுகள் நடைபெறும் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்விற்கான தேதி இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தப்போதும் ஒவ்வொருவரும் டிஎன்பிஎஸ்சி தேர்விற்குத் தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக முந்தைய தேர்வுகள் போல் இல்லாமல் 2022 ஆம் ஆண்டு குரூப் 2 தேர்விற்கு குரூப் 4 க்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை விட அதிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • 11ஆயிரம் காலிப்பணியிடங்களை அறிவித்த டிஎன்பிஎஸ்சி: குரூப் 1 முதல் குரூப் 4 வரை முழு விபரம் இதோ!

இதோடு தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த அறிக்கையின்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தமிழில் தாளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் எனவும்,  100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்த தமிழ் தேர்வில் குறைந்த பட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் பதாளில் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே தேர்வரின் மற்ற தாள்கள் திருத்தப்படும் என்றும், தமிழ் தாளிலில் தோல்வியடைந்தால்,மற்ற தாள்கள் திருத்துவதற்கு கணக்கில் எடுத்துக்ககொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வேலை தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என்பதைக்கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
மும்பையை குறிவைக்கும் பயங்கரவாதிகள்? அலர்ட் கொடுத்த உளவு அமைப்பு.. அச்சத்தில் மக்கள்!
மும்பையை குறிவைக்கும் பயங்கரவாதிகள்? அலர்ட் கொடுத்த IB.. அச்சத்தில் மக்கள்!
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
Embed widget