மேலும் அறிய

முதுகலை பட்டதாரியா? ரிசர்வ் வங்கியில் கொட்டிக்கிடக்கும் சூப்பர் வேலைவாய்ப்புகள்.. உடனே அப்ளை பண்ணுங்க..

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு கட்ட தேர்வுகள் மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று படிநிலைகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 294 கிரேபி பி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.

இந்தியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றாக ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவில் காலிப்பணியிட விபரங்கள்:

மொத்த காலிப்பணியிடங்கள் – 294

துறைவாரியான காலிப்பணியிட விபரம்

Officers in Grade ‘B’(DR)- General – 238

Officers in Grade ‘B’(DR)- DEPR – 31

Officers in Grade ‘B’(DR)- DSIM – 25

முதுகலை பட்டதாரியா? ரிசர்வ் வங்கியில் கொட்டிக்கிடக்கும் சூப்பர் வேலைவாய்ப்புகள்.. உடனே அப்ளை பண்ணுங்க..

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2022 அன்று 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இதோடு DEPR மற்றும் DSIM பிரிவுகளுக்கு கணிதம், பொருளாதாரம், புள்ளியியல் போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், https://www.rbi.org.in/ அல்லது https://ibpsonline.ibps.in/rbiofeb22/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி – ஏப்ரல் 18, 2022

விண்ணப்பக் கட்டணம்

பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850ம்,  SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு கட்ட தேர்வுகள் மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று படிநிலைகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக முதல்நிலைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability), பொது அறிவு அல்லது வங்கித் தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இந்த தேர்வானது 2 மணி நேரத்திற்கு நடைபெறவுள்ளது.

மேலும் இரண்டாம் கட்டத்தேர்வானது கொள்குறி வகை மற்றும் விரிவான விடையளித்தல் தேர்வாக நடைபெறவுள்ளது.

மேற்கண்ட இரண்டு தேர்வுகளில் தேர்வாகும் விண்ணப்பதார்கள் மட்டுமே அடுத்தப்படியாக நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். இதிலும் தேர்வாகும் தகுதியான நபர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

சம்பளம் – மாதந்தோறும் ரூ. 1,08,404 என நிர்ணயம்.

எனவே ஆர்முள்ள இளைஞர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTGRBDRDEPRDSIM2022D061270C271048D78D61F523DBA1AD6A.PDF என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

தலைப்பு செய்திகள்

புதிய 125 நாள் ஊரக வேலைத் திட்டம் அமல். மாநில வாரியாக தினக்கூலி எவ்வளவு? முழு பட்டியல்!..
புதிய 125 நாள் ஊரக வேலைத் திட்டம் அமல். மாநில வாரியாக தினக்கூலி எவ்வளவு? முழு பட்டியல்!..
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!.. IBPS மூலம் 6,715 வங்கி வேலைகள். விவரம் இதோ!..
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!.. IBPS மூலம் 6,715 வங்கி வேலைகள். விவரம் இதோ!..
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கேற்ற சூப்பர் அரசு வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கேற்ற சூப்பர் அரசு வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget