மேலும் அறிய

இளைஞர்களே இதான் சான்ஸ் : 8,000 -க்கும் மேல் உதவித்தொகை..! ஆட்சியரின் அசத்தல் அறிவிப்பு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் டிசம்பர் 8 -ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் முன்னேறுவதற்காக, தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் (National Apprenticeship Promotion Scheme), மாபெரும் தொழிற்பழகுநர் பயிற்சி (Apprenticeship) சேர்க்கை முகாம் ஒன்று நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார்.

முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம்

இந்தச் சிறப்புச் சேர்க்கை முகாம் வருகிற டிசம்பர் 8, 2025 ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

நேரம் : காலை 9.00 மணி 

இடம் : ஏழுமலையான் தனியார் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், மயிலாடுதுறை மாவட்டம்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு

இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் பல்வேறு முன்னணி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, தகுதியான இளைஞர்களைத் தொழிற்பழகுநர் பயிற்சிக்காகத் தேர்வு செய்ய உள்ளனர்.

முக்கியமாகப் பங்கேற்கும் நிறுவனங்கள்

* தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்

* மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO)

* ஆவின் (Aavin) உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள்.

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (SME Sector) இந்த நிறுவனங்கள், ஐ.டி.ஐ. (ITI) பயிற்சி முடித்தவர்களை அவர்களின் பயிற்சிப் பிரிவுகளுக்கு ஏற்பத் தேர்வு செய்ய இருக்கின்றனர்.

கல்வித் தகுதிகள் மற்றும் பயிற்சி விவரங்கள்

தொழிற்பழகுநர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவதற்கு இரண்டு வகையான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. ஐ.டி.ஐ. பயிற்சி முடித்தவர்கள்:

ஐ.டி.ஐ. பயிற்சி முடித்தவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் தொழிற்பழகுநர் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்படுவார்கள்.

2. புதிய தொழிற்பழகுநர்கள் (Fresher Apprentices):

ஐ.டி.ஐ. பயிற்சி முடிக்காத, 8, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு கல்வித்தகுதி உடைய இளைஞர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் புதிய தொழிற்பழகுநர்களாக (Fresher Apprentice) சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்குப் பின்வரும் கால அவகாசத்தில் பயிற்சி அளிக்கப்படும்

* அடிப்படைப் பயிற்சி: 3 முதல் 6 மாத காலம்.

* தொழிற்பழகுநர் பயிற்சி: அடிப்படைப் பயிற்சிக்குப் பிறகு ஓராண்டு முதல் ஈராண்டுகள் வரை.

இந்த முழுமையான பயிற்சிக்குப் பிறகு, அவர்களுக்கு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate - NAC) வழங்கப்படும்.

உதவித்தொகை மற்றும் பலன்கள்

* உதவித்தொகை: தொழிற்பழகுநர் பயிற்சியின்போது, நிறுவனம் சார்பில் உதவித்தொகையாக ₹8,000/- முதல் வழங்கப்படும்.

* வேலைவாய்ப்பில் முன்னுரிமை: தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெறுவதன் மூலமாக, அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

* பணி வாய்ப்புகள்: இச்சான்றிதழ் இந்திய அளவிலும், அயல்நாடுகளிலும் பணிபுரிந்திட மிகவும் பயனுள்ளதாக அமையும். இது இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கும் எதிர்கால வேலைவாய்ப்புக்கும் ஒரு வலுவான அடித்தளமாக அமையும்.

தொடர்புக்கு

இந்த அரிய வாய்ப்பினை மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இந்த முகாம் மற்றும் தொழிற்பழகுநர் பயிற்சி குறித்து மேலும் தகவல்கள் தேவைப்பட்டால், கீழ்க்கண்ட அதிகாரியைத் தொடர்புகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

உதவி இயக்குநர்,

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்,

தஞ்சாவூர், மயிலாடுதுறை (பொறுப்பு).

தொலைபேசி எண்: 9499055725

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!
8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!
திண்டுக்கல் காந்தி கிராமத்தில் ரூ.75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கலாம்!
திண்டுக்கல் காந்தி கிராமத்தில் ரூ.75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கலாம்!
அரசு வேலை தேடுபவரா நீங்க? காஞ்சிபுரத்தில் வந்தாச்சு செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க!
அரசு வேலை தேடுபவரா நீங்க? காஞ்சிபுரத்தில் வந்தாச்சு செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க!
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget