மேலும் அறிய

திண்டுக்கல் மாவட்டத்தில் 102 காலி பணியிடங்கள் இருக்காம்: எங்கே என்ன பணி என்ற விபரம் இதோ!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

102 காலி பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிச்சு இருக்காங்க. விண்ணப்பிக்க கடைசி தேதி 1.8.25ங்க. அதனால காலதாமதம் செய்யாம தகுதியானவங்க உடனே விண்ணப்பத்தை தட்டி விடுங்க.

தமிழ்நாட்டில் மாவட்டங்கள் அளவில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது.

செவிலியர் 71

ஆய்வக டெக்னீஷியன் கிரேடு III       17

மருந்தாளுனர்   3

மருத்துவ அதிகாரி    1

ஆடியோலாஜிஸ்ட் மற்றும் பேச்சு தெரபிஸ்ட் 1

ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்  1

பல்துறை சுகாதார ஊழியர்  2

பல்துறை மருத்துவமனை ஊழியர் 6

மொத்தம்  102 பணியிடங்கள்.

வயது வரம்பு

செவிலியர் பதவிக்கு அதிகப்படியாக 50 வயது வரை இருக்கலாம்.  ஆய்வக டெக்னீஷியன் கிரேடு III பதவிக்கு 35 வயது வரை இருக்கலாம். 
மருந்தாளுனர் பதவிக்கு 35 வயது வரை இருக்கலாம்.  மருத்துவ அதிகாரி பதவிக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆடியோலாஜிஸ்ட் மற்றும் பேச்சு தெரபிஸ்ட் பதவிக்கு 35 வயது வரை இருக்கலாம். ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு 16.12.2024 தேதியின்படி 40 வயதைக் கடந்திருக்கக்கூடாது. பல்துறை சுகாதார ஊழியர் பதவிக்கு 35 வயது வரை இருக்கலாம். பல்துறை மருத்துவமனை ஊழியர் பதவிக்கு 45 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி

செவிலியர் பதவிக்கு நர்சிங் டிப்ளமோ அல்லது இளங்கலை நர்சிங் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ஆய்வக டெக்னீஷியன் கிரேடு III பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மருந்தாளுனர் பதவிக்கு D.Pharm/B.Pharm முடித்திருக்க வேண்டும்.

மருத்துவ அதிகாரி பதவிக்கு எம்.பி.பி.எஸ் முடித்து, பதிவு செய்திருக்க வேண்டும்.

ஆடியோலாஜிஸ்ட் மற்றும் பேச்சு தெரபிஸ்ட் பதவிக்கு BASLP முடித்திருக்க வேண்டும்.

ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு இளங்கலை அல்லது முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பல்துறை சுகாதார ஊழியர் பதவிக்கு MPHW அல்லது சுகாதார ஆய்வாளர் ஆகிய சான்றிதழ் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

பல்துறை மருத்துவமனை ஊழியர் பதவிக்கு 8-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்

செவிலியர் பதவிக்கு ரூ.18,000, ஆய்வக டெக்னீஷியன் பதவிக்கு ரூ.13,000, மருந்தாளுனர் பதவிக்கு ரூ.15,000, மருத்துவ அதிகாரி பதவிக்கு ரூ.60,000 சம்பளம் வழங்கப்படும். ஆடியோலாஜிஸ்ட் மற்றும் பேச்சு தெரபிஸ்ட் பதவிக்கு ரூ.23,000, ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு ரூ.23,000, பல்துறை சுகாதார ஊழியர் பதவிக்கு ரூ.14,000 வழங்கப்படும். பல்துறை மருத்துவமனை ஊழியர் பதவிக்கு ரூ.8,500 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்களுக்கு விரும்பமுள்ளவர்களிடம் இருந்து தேவையான ஆட்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை
 
திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://dindigul.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்பித்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 1.8.25 மாலை 5 மணி வரை. அதனால காலதாமதம் செய்யாம விருப்பம் உள்ளவர்கள், தகுதியுடையவர்கள் உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.

திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget