மேலும் அறிய

+2 தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? CISF ல் தலைமை காவலர் பணிக்கு உடனடியாக விண்ணப்பிக்கவும்!

சிஎஸ்ஐஎப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு Physical standard test, Documentation/ Trial Test & Proficiency Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள 249 தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் வருகின்ற மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

இந்தியாவின் அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதானச் சின்னங்கள் போன்ற முக்கிய தொழிற்நிலையங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப்படை தான் சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், முன்னதாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2800 படை வீரர்களுடன், மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து 1983 ஆம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தும் உரிமை இந்த வீரர்களுக்கு வழங்கப்பட்டது. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படைப்பணிக்கு சேர வேண்டும் என இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். அவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக சி.ஐ.எஸ்.எபில் தலைமை காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.

+2 தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? CISF ல் தலைமை காவலர் பணிக்கு உடனடியாக விண்ணப்பிக்கவும்!

CISFயில் தலைமை காவலர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள்: 249

கல்வித்தகுதி:

தலைமைக்காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

மத்திய தொழிற்பாதுகாப்பு படை தலைமை காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில், https://www.cisf.gov.in/cisfeng/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் செல்ல வேண்டும்.

பின்னர் அப்பக்கத்தில் உள்ள தலைமை காவலர் பணிக்கான விண்ணப்படிவத்தை டவுன்லோடு செய்து அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து வருகின்ற மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் ரூ.100 செலுத்தி இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு Physical standard test, Documentation/ Trial Test & Proficiency Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விபரம்:

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000 முதல் ரூ. 81,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள உள்ள நபர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுக்குறித்த கூடுதல் விபரங்களை https://drive.google.com/file/d/1U2BPFhAJXSyHtwzIzk5Uwk0RBqobhl8A/view என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

 

தலைப்பு செய்திகள்

மதுரையில் ஆகஸ்ட் 28 அன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. தவறவிடாதீர்கள் !
மதுரையில் ஆகஸ்ட் 28 அன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. தவறவிடாதீர்கள் !
1,000 அரசு பணியிடங்கள்... விரைவில் எழுத்துத் தேர்வு! புதுவை இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!
1,000 அரசு பணியிடங்கள்... விரைவில் எழுத்துத் தேர்வு! புதுவை இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!
விழுப்புரத்தில் மெகா வேலைவாய்ப்பு முகாம்! 150+ நிறுவனங்கள்... 8-ம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் வரை அனைவருக்கும் வாய்ப்பு!
விழுப்புரத்தில் மெகா வேலைவாய்ப்பு முகாம்! 150+ நிறுவனங்கள்... 8-ம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் வரை அனைவருக்கும் வாய்ப்பு!
UPSC APFC: பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை! முழு தகவல் இதோ!
UPSC APFC: பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை! முழு தகவல் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Vs Iran: இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
Rajmohan:
Rajmohan: "மக்கு மாணவன் நான்.. அமைச்சர் ஆவேன்னு நினைக்கல.." மனம் திறந்த அமைச்சர் ராஜ்மோகன்!
Nepal Flood: பேரழிவை ஏற்படுத்திய நேபாள திடீர் வெள்ளம்; பரபரப்பு வீடியோ; சிக்கிய 57 தமிழர்களின் கதி என்ன.?
பேரழிவை ஏற்படுத்திய நேபாள திடீர் வெள்ளம்; பரபரப்பு வீடியோ; சிக்கிய 57 தமிழர்களின் கதி என்ன.?
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போனுக்கு தடை! செப்டம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடு...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போனுக்கு தடை! செப்டம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடு...
Minister Anand : ’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
Kia Sonet on EMI: ரூ.1.3 லட்சம் முன்பணம் கொடுத்தா அசத்தலான கியா சோனெட் கார வாங்கலாம்; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ.1.3 லட்சம் முன்பணம் கொடுத்தா அசத்தலான கியா சோனெட் கார வாங்கலாம்; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
Tata Sierra EV with 5G: டெக்னாலஜியில் தட்டித் தூக்கிய டாடா.! நாட்டின் முதல் 5G இணைப்புள்ள காராகும் சியரா EV; முழு விவரம்
டெக்னாலஜியில் தட்டித் தூக்கிய டாடா.! நாட்டின் முதல் 5G இணைப்புள்ள காராகும் சியரா EV; முழு விவரம்
Suzuki e SKY Mini EV: 310 கிமீ ரேஞ்ச்.! WagonR போன்றே ஜப்பானில் சுஸுகி அறிமுகம் செய்யும் இ ஸ்கை; இந்தியாவுக்கு வருமா, வராதா.?
310 கிமீ ரேஞ்ச்.! WagonR போன்றே ஜப்பானில் சுஸுகி அறிமுகம் செய்யும் இ ஸ்கை; இந்தியாவுக்கு வருமா, வராதா.?
Embed widget