மேலும் அறிய

+2 தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? CISF ல் தலைமை காவலர் பணிக்கு உடனடியாக விண்ணப்பிக்கவும்!

சிஎஸ்ஐஎப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு Physical standard test, Documentation/ Trial Test & Proficiency Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள 249 தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் வருகின்ற மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

இந்தியாவின் அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதானச் சின்னங்கள் போன்ற முக்கிய தொழிற்நிலையங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப்படை தான் சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், முன்னதாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2800 படை வீரர்களுடன், மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து 1983 ஆம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தும் உரிமை இந்த வீரர்களுக்கு வழங்கப்பட்டது. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படைப்பணிக்கு சேர வேண்டும் என இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். அவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக சி.ஐ.எஸ்.எபில் தலைமை காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.

+2 தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? CISF ல் தலைமை காவலர் பணிக்கு உடனடியாக விண்ணப்பிக்கவும்!

CISFயில் தலைமை காவலர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள்: 249

கல்வித்தகுதி:

தலைமைக்காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

மத்திய தொழிற்பாதுகாப்பு படை தலைமை காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில், https://www.cisf.gov.in/cisfeng/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் செல்ல வேண்டும்.

பின்னர் அப்பக்கத்தில் உள்ள தலைமை காவலர் பணிக்கான விண்ணப்படிவத்தை டவுன்லோடு செய்து அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து வருகின்ற மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் ரூ.100 செலுத்தி இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு Physical standard test, Documentation/ Trial Test & Proficiency Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விபரம்:

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000 முதல் ரூ. 81,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள உள்ள நபர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுக்குறித்த கூடுதல் விபரங்களை https://drive.google.com/file/d/1U2BPFhAJXSyHtwzIzk5Uwk0RBqobhl8A/view என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

 

தலைப்பு செய்திகள்

பதிவறை எழுத்தர் வேலை: ரூ.58,500 வரை சம்பளம் – முழு விவரங்கள் உங்களுக்காக!
பதிவறை எழுத்தர் வேலை: ரூ.58,500 வரை சம்பளம் – முழு விவரங்கள் உங்களுக்காக!
அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு: 37 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! 
அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு: 37 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! 
TN Govt Job: 4,724 செவிலியர் காலிப்பணியிடங்கள் - தகுதி, வயது வரம்பு, ஊதியம் - முழு விவரங்கள் இதோ
4,724 செவிலியர் காலிப்பணியிடங்கள் - தகுதி, வயது வரம்பு, ஊதியம் - முழு விவரங்கள் இதோ
SBI வங்கியில் 12,000 காலி பணியிடங்கள்? வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அப்டேட்
SBI வங்கியில் 12,000 காலி பணியிடங்கள்? வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அப்டேட்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Asia Cup: மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
TN Weather News: கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (14-09-2026): விநாயகரின் அருளால் லாபம் பெறும் ராசி எது? - மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!
Rasi Palan Today (14-09-2026): விநாயகரின் அருளால் லாபம் பெறும் ராசி எது? - மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!
MK Stalin's Plan: ராகுலுக்கு எதிராக 3-ம் அணி; ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்; தூதாக போன கனிமொழி; திட்டம் என்ன.?
ராகுலுக்கு எதிராக 3-ம் அணி; ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்; தூதாக போன கனிமொழி; திட்டம் என்ன.?
NTK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
Pezeshkian Vs America: “உயிரோடு இருக்கும் வரை பதிலடி..“ அமெரிக்காவுக்கு உறுதியான, இறுதியான மெசேஜ்; ஈரான் அதிபர் அதிரடி
“உயிரோடு இருக்கும் வரை பதிலடி..“ அமெரிக்காவுக்கு உறுதியான, இறுதியான மெசேஜ்; ஈரான் அதிபர் அதிரடி
Tamil Nadu By Election : விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்.! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் .! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
Embed widget