மேலும் அறிய

ஐடிஐயில் படித்தவர்களுக்கு காரைக்குடி CECRIல் வேலைவாய்ப்பு: சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஐடிஐயில் படித்தவர்களுக்கு காரைக்குடி CECRIல் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பாணை வெளியாகி இருக்கிறது.

ஐடிஐயில் படித்தவர்களுக்கு காரைக்குடி CECRIல் வேலைவாய்ப்பு டெக்னீஷியன் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு இருப்பதாக அறிவிப்பாணை வெளியாகி இருக்கிறது.

மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (Central Electro Chemical Research Institute, CECRI) இந்தியாவில் உள்ள 40 தேசிய ஆய்வுக் கூடங்களில் ஒன்றும், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) கீழ் இயங்கும் ஒரு முதன்மையான ஆய்வுக் கூடமுமாகும். இது 1948ல் நிறுவப்பட்டது.

இங்கே வேலை பார்ப்பது இத்துறை சார்ந்தவர்களின் லட்சியமகாவே இருக்கிறது. அத்தகைய பெருமைமிகு நிறுவனம் சிக்ரி. அரசு நிறுவனமான CECRIல் டெக்னீஷியன் மற்றும் டெக்னீகல் அசிஸ்டன்ட் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

31.08.2021 அன்று இந்த அறிவிப்பை சி.இ.சி.ஆர்.ஐ நிறுவனமானது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி 2021 ஆம் ஆண்டிற்கான சிக்ரி ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 54 காலியிடங்கள் உள்ளன. 
தொழில்நுட்ப வல்லுநர் என்ற பதவிக்கான காலிப் பணியிடங்கள் இவை.

இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் https://cecri.res.in/ என்ற சிக்ரியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பெறலாம்.

இந்தப் பணியில் சேர கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது இரண்டு வருடங்களாவது வேறு ஏதேனும் நிறுவனத்தில் பணி அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் காரைக்குடியில் உள்ள சிக்ரி மையத்தில் தான் பணியமர்த்தப்படுவார்கள். மொத்தம் 13 காலிப்பணியிங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்களுக்கு 28 முதல் 38 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். பணியில் சேர்வோருக்கு ரூ 28,216 மாத சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி (31.08.2021) முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 27 (27.09.2021) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனே பெருந்தொற்று இந்தியாவில் இரண்டாவது அலைக்குப் பின்னர் வேலையிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இப்போதுதான் இந்தியப் பொருளாதாரம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. ஆகையால் அரசு அங்கங்களும் வேலையமர்த்துதல் போன்ற பணிகளைத் தொடங்கியுள்ளன.

காரைக்குடி CECRIல் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பாணை ஐடிஐ இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

தொழில்நுட்ப உதவியாளர் பணி:

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பையும் சிக்ரி வெளியிட்டுள்ளது. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ தொழில்நுட்பம் துறையில் டிப்ளமோ பெற்றிருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 41 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்களுக்கு 28 முதல் 38 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். 2 வருடம் பணி அனுபவம் இருத்தல் சிறப்பு. மாதம் ரூ.ரூ 50,448 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கும் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி (31.08.2021) முதல் விண்ணப்பன்ங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 27 (27.09.2021) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget