மேலும் அறிய

Govt Fertility Center: நாட்டிலேயே முதல்முறை..இனி லட்சங்களை கொட்ட வேண்டாம்.. தமிழக அரசு சார்பில் கருத்தரிப்பு மையங்கள்

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அரசு சார்பில் கருத்தரிப்பு மையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளதாக, அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அரசு சார்பில் கருத்தரிப்பு மையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளதாக, அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி:

சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில், கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் 2022 பங்களிப்புடன், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.5.89 கோடி மதிப்பில் பெற்றோர் காத்திருப்பு அறை மற்றும் உணவக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிடோர் பங்கேற்ற்னர்.

அதிமுகவை சாடிய அமைச்சர்:

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் “நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள்  மற்றும் அரசின் பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதிமுக ஆட்சியில் ஒரு பத்தாண்டு காலம் இந்த நடைமுறை இல்லாமல் போனது. மீண்டும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தை தொடங்குவதற்காக புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதனடிப்படையில் 5 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் இந்த கட்டடம் கட்டப்பட உள்ளது. அதில் 12 குளியலறைகள், 16 கழிப்பறைகள் இரண்டு மின் தூக்கி வசதிகளோடு தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் கருத்தரிப்பு மையங்கள்:

ஃபெர்டிலிட்டி சென்டர் எனப்படும் கருத்தரிப்பு மையங்களை தமிழ்நாட்டில் ஏராளமாக தனியார் நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. அரசின் சார்பிலும் கருத்தரிப்பு மையம் அமைய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த வகையில் எழும்பூரிலும், மதுரையிலும் இரண்டு கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்பட உள்ளன. 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட அந்த இரண்டு மருத்துவ கருத்தரிப்பு மையங்களும்  கட்டுமான பணிகள் நிறைவுற்று அதற்கான பரிசோதனை ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்தியாவிலேயே முதன்முறை..!

சென்னையில் உள்ள மையம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், மதுரையிலும் வெகு விரைவில் பரிசோதனை தொடங்கி மிக விரைவில் அந்த கருத்தரிப்பு மையமும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும். நாட்டிலேயே அரசின் சார்பில் கருத்தரிப்பு மையங்கள் கட்ட எடுக்கப்படுகிற நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும். இந்த பணிகள் ஆகஸ்ட் மாத இறுதியில் முடிவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்கப்படும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

பொதுமக்கள் மகிழ்ச்சி:

குழந்தை இல்லாத திருமணமான தம்பதியினர் பலர் தனியார் கருத்தரிப்பு மையங்களில் லட்சங்களை கொட்டி குழந்தைக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். நடுத்தர மக்களுக்கு இந்த வாய்ப்பு என்பது மிகவும் ஆடம்பரமானதாக உள்ளது. இந்த நிலையில், அரசு சார்பில் அமைக்கப்படும் கருத்தரிப்பு மையங்கள் மூலம், பலரது குழந்தை கனவு நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget