மேலும் அறிய

சிவகங்கை மாவட்டத்தில் தெரு நாய்கள் பிரச்சனைக்கு தீர்வு: தடுப்பூசி, கருத்தடை மையம், காப்பகம் - ஆட்சியர் தகவல்!

வளர்ப்பு நாய்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி ரேபீஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

சமூக நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில்  தற்போது வரை மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் 12,144 எண்ணிக்கையிலான சமூக நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கும் ARV தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சிவகங்கை மாவட்ட  ஆட்சித்தலைவர் தகவல்.
 
சமூக நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை பணிகள்
 
தமிழக அரசினால் அறிவிக்கப்பட்ட சமூக நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள்  கால்நடை மருத்துவக்குழுக்கள் இணைந்து ஆதரவற்ற சமூக நாய்களுக்கு ARV தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தற்போது வரை மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் 12,144 எண்ணிக்கையிலான சமூக நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கும் ARV தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், காரைக்குடி மாநகராட்சி சார்பில் கருத்தடை மையம் துவங்கப்பட்டு  தற்போது நடைபெற்று வருகிறது.
 
உபகரணங்கள் பெறப்பட்டவுடன்  முழுமையாக கருத்தடை மையங்கள் செயல்படும்
 
சிவகங்கை, திருப்பத்தூர் கால்நடை மருத்துவமனைகள் மற்றும் தேவகோட்டை கால்நடை மருந்தம் ஆகிய மூன்று இடங்களில் கருத்தடை மையங்கள் அமைக்கப்பட்டு உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது.  இந்நிலையில் கருத்தடை அறுவை சிகிச்சை பணிகளுக்கான உபகரணங்கள் கொள்முதல் பணி நடைபெற்று வருகின்றன. உபகரணங்கள் பெறப்பட்டவுடன்  முழுமையாக கருத்தடை மையங்கள் செயல்படும். மேலும் ஒவ்வொரு கருத்தடை மையங்களுக்கும் அறுவை சிகிச்சை பணிகள் மேற்கொள்ள ஏதுவாக தலா 5 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு நாமக்கல், ஒரத்தநாடு மற்றும் திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
 
இதன்படி, தெருக்களில் சுற்றித்திரியும் மற்றும் ஆதரவற்ற தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணி தனியார் பங்களிப்புடன் விலங்குகள் நலவாரியம் மூலம் விரிவுபடுத்துதல் திட்டம் அறிவிக்கப்பட்டு முடிகண்டம் கிராமத்தில் 50 செண்ட் நிலத்தில் கால்நடை கிளை நிலையத்துடன் கூடிய கருத்தடை மைய கட்டிடம் கட்டப்படவுள்ளது. நோய் வாய்ப்பட்ட மற்றும் தனித்து செயல்பட இயலாத விலங்குகளை  பாதுகாத்திட தேவகோட்டை பகுதியில் விலங்குகள் காப்பகம் அமைத்திட உரிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
அணுகி ரேபீஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்
 
இத்திட்டத்தில் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் தன்னார்வ அமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அடையாளம் கண்டு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் குழு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், வளர்ப்பு நாய்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி ரேபீஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
Embed widget