மேலும் அறிய
மதுரையில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: ஜெர்மனி அதிரடி வெற்றி! ஆட்டநாயகன் யார் தெரியுமா? #Hockey #Madurai #TamilNadu
போட்டியில் சிறப்பாக விளையாடி 2 கோல்களை அடித்த ஜெர்மனி வீரர் WARWEG JUSTUS ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

ஹாக்கிப் போட்டி
Source : whatsapp
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி தொடர் இன்று மதுரையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்யினான ஜெர்மனி அணி 4 புள்ளிகள் பெற்று தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தியது.
மதுரையில் துவங்கிய ஹாக்கிப் போட்டி
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஜூனியர் அணிகளுக்கான 14ஆவது சீசன் உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று மதுரையில் உள்ள ரேஸ்கோர்ஸ் ஹாக்கி மைதானத்தில் கோலகலமாக தொடங்கியது. இந்த உலக கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, 2 ஆம் இடத்தில் உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி, பி பிரிவில் சிலி, ஓமன், சுவிட்சர்லாந்து ஆகிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. முதன்முறையாக மதுரை ஹாக்கி மைதானத்தில் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான முதல் லீக் போட்டியானது நடப்பு சாம்பியனான ஜெர்மனி - தென் ஆப்ரிக்கா இடையே நடைபெற்றது. இப்போட்டியினை இந்திய ஹாக்கி இந்திய பொதுச்செயலாளர் போலோநாத் சிங் மற்றும் அமைச்சர் மூர்த்தி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் இரு அணி வீரர்களுக்கும் கை குலுக்கி போட்டியை தொடங்கி வைத்தனர்.
அயர்லாந்து - கனடா
இதில் 4 கால் சுற்றுகளாக நடைபெற்ற முதல் லீக் போட்டியில் முதல் கால் சுற்றில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி 4 புள்ளிகளுடன் (கோல்களுடன்) தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதில் 2 பீல்ட் கோல்களும், ஒரு பெனாலிட்டி கார்னர் மற்றும் ஒரு பெனாலிட்டி ஸ்ட்ரோக் என்ற முறையில் 2 கோல்கள் என 4 கோல்கள் அடித்தனர். தென் ஆப்ரிக்க அணி புள்ளிகள் இன்றி போட்டியில் தோல்வியடைந்தது. முதல் லீக் போட்டியில் சிறப்பாக விளையாடி 2 கோல்களை அடித்த ஜெர்மனி அணி வீரர் WARWEG JUSTUS ஆட்டநாயகன் விருதை பெற்றார். இவருக்கு அமைச்சர் மூர்த்தி ஆட்ட நாயகன் விருதை வழங்கினார். இதைத்தொடர்ந்து காலை 11.15 அயர்லாந்து - கனடா இடையே 2 ஆவது போட்டி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியினை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
பலத்த சோதனைக்கு பின் அனுமதி
இதை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு ஸ்பெயின் - எகிப்து விளையாடி வருகிறது. மதியம் 3.45 பெல்ஜியம் - நமிபியா அணிகளுக்கான லீக் போட்டிளும் நடைபெறவுள்ளது. உலக கோப்பை ஹாக்கி தொடர் முதன் முறையாக இந்தியாவில் மதுரை சென்னை என இரு ஹாக்கி மைதானங்களில் நடைபெறுகின்றன. சென்னையில் 41, மதுரையில் 31 என மொத்தம் 72 போட்டிகள் நடைபெறவுள்ளது. மதுரை ரேஸ்கோர்ஸ் புதிய ஹாக்கி மைதானத்தில் புதிய செயற்கை டர்ப், ரசிகர்கள் அமர்வதற்கு புதிய மேற்கூரை, இரவு நேரப் போட்டிகளுக்காக நவீன விளக்குகள், வீரர்களுக்கான அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சொந்தமண்ணில் களமிறங்கும் இந்திய அணியினர், சிறப்பாக செயல்பட்டு, 9 ஆண்டுக்குப் பின் கோப்பை வெற்றிபெறும் என இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு போட்டியான ஹாக்கி போட்டியில் உலக கோப்பை லீக் போட்டியை காண ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகிய பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்களும், இந்திய ஹாக்கி ரசிகர்கள் மற்றும் மதுரையை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணாக்கர்களும் போட்டியை கண்டு மகிழ்ந்து வருகின்றனர். ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக் செய்த பார்வையாளர்கள் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். உலக கோப்பை போட்டியில் விளையாட வருகைதரும் வீரர்கள், பார்வையாளர்கள், ஊடகத்தினர் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் 4 கால் சுற்றுகளாக நடைபெற்ற முதல் லீக் போட்டியில் முதல் கால் சுற்றில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி 4 புள்ளிகளுடன் (கோல்களுடன்) தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதில் 2 பீல்ட் கோல்களும், ஒரு பெனாலிட்டி கார்னர் மற்றும் ஒரு பெனாலிட்டி ஸ்ட்ரோக் என்ற முறையில் 2 கோல்கள் என 4 கோல்கள் அடித்தனர். தென் ஆப்ரிக்க அணி புள்ளிகள் இன்றி போட்டியில் தோல்வியடைந்தது. முதல் லீக் போட்டியில் சிறப்பாக விளையாடி 2 கோல்களை அடித்த ஜெர்மனி அணி வீரர் WARWEG JUSTUS ஆட்டநாயகன் விருதை பெற்றார். இவருக்கு அமைச்சர் மூர்த்தி ஆட்ட நாயகன் விருதை வழங்கினார். இதைத்தொடர்ந்து காலை 11.15 அயர்லாந்து - கனடா இடையே 2 ஆவது போட்டி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியினை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
பலத்த சோதனைக்கு பின் அனுமதி
இதை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு ஸ்பெயின் - எகிப்து விளையாடி வருகிறது. மதியம் 3.45 பெல்ஜியம் - நமிபியா அணிகளுக்கான லீக் போட்டிளும் நடைபெறவுள்ளது. உலக கோப்பை ஹாக்கி தொடர் முதன் முறையாக இந்தியாவில் மதுரை சென்னை என இரு ஹாக்கி மைதானங்களில் நடைபெறுகின்றன. சென்னையில் 41, மதுரையில் 31 என மொத்தம் 72 போட்டிகள் நடைபெறவுள்ளது. மதுரை ரேஸ்கோர்ஸ் புதிய ஹாக்கி மைதானத்தில் புதிய செயற்கை டர்ப், ரசிகர்கள் அமர்வதற்கு புதிய மேற்கூரை, இரவு நேரப் போட்டிகளுக்காக நவீன விளக்குகள், வீரர்களுக்கான அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சொந்தமண்ணில் களமிறங்கும் இந்திய அணியினர், சிறப்பாக செயல்பட்டு, 9 ஆண்டுக்குப் பின் கோப்பை வெற்றிபெறும் என இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு போட்டியான ஹாக்கி போட்டியில் உலக கோப்பை லீக் போட்டியை காண ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகிய பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்களும், இந்திய ஹாக்கி ரசிகர்கள் மற்றும் மதுரையை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணாக்கர்களும் போட்டியை கண்டு மகிழ்ந்து வருகின்றனர். ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக் செய்த பார்வையாளர்கள் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். உலக கோப்பை போட்டியில் விளையாட வருகைதரும் வீரர்கள், பார்வையாளர்கள், ஊடகத்தினர் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















