மேலும் அறிய

Eye Care: இந்த 5 விஷயங்களை உடனே நிறுத்துங்க..! இல்லனா உங்கள் பார்வை பறிபோகும் அபாயம்..!

நாம் அன்றாடம் செய்யக்கூடிய ஐந்து விஷயங்களினால் கண் பார்வையே பறிபோகும் அபாயம் ஏற்படும் என்றால் நம்ப முடிகிறாதா? இந்த கட்டுரையை முழுமையாக வாசியுங்கள்.

உலகில் உள்ள பார்வையற்றவர்களில் கால் பகுதியினர் இந்தியாவில் வசிக்கின்றனர். பார்வை இழப்பை கட்டுப்படுத்துவதற்கான தேசியத் திட்டம் (NPCB) தயாரித்த ஆய்வின்படி, உலகில் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் சுமார் 12 மில்லியன் மக்கள் உள்ளனர்,  இது உலகில் அதிகபட்சமாக 39 மில்லியனாக உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தைப் போலவே, நீங்கள் வயதாகும்போது உங்கள் பார்வை திறனும்  மோசமடைகிறது. அதுமட்டுமின்றி, நாம் அன்றாடம் செய்து வரும், நம் வாழ்வில் ஒன்றிப்போன  பழக்கவழக்கங்கள் நமது பார்வைக்கு தீங்கு விளைவிக்கும். நமது பார்வையை பாதிக்கக்கூடிய ஐந்து தினசரி பழக்கங்கள் குறித்து இங்கு காணலாம்:.

1. அதிகப்படியான திரை நேரம்

உலகம் திரைகளால் நிரம்பியுள்ளது. அவை தொலைக்காட்சிகள், கணினிகள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் என எல்லா இடங்களிலும் உள்ளன. திரை நேரம் என்பது மக்கள் ஒவ்வொரு நாளும் திரைகளைப் பார்க்க செலவிடும் நேரத்தைக் குறிக்கிறது. அதிகப்படியான திரை நேரம் பார்வையை பாதிக்கலாம் குறிப்பாக குழந்தைகளுக்கு பார்வையில் சிரமத்தை ஏற்படுத்தும், திரையில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் சுறுசுறுப்பாகவும், எந்த விதமான உடற்பயிற்சியிலும் ஈடுபடுவதற்கும் குறைவான நேரத்தினை செலவிடலாம். எனவே, குழந்தைகள் திரையில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

2. அதிக அளவில் புகைபிடித்தல்

புகைபிடிப்பதை நிறுத்துங்கள் அல்லது தொடங்கவே வேண்டாம். புகைபிடித்தல் என்பது புகைப்பிடிப்பவரின் நுரையீரல் மற்றும் இதயத்திற்கு தீங்கு விளைவிப்பதைப் போலவே கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும். புகைபிடித்தல் வயது தொடர்பான மாகுலர் சிதைவு, கண்புரை மற்றும் பார்வை நரம்பு சேதம் ஆகியவற்றை உருவாக்கும் அபாயத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தும் பார்வை இழப்பை ஏற்படுத்தும். மேலும், இதனால் ஏற்படும் புற்றுநோயானது 50 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களில் பார்வை இழப்பினையோ அல்லது குறைபாடையோ ஏற்படுத்துகிறது. 

3. மற்ற சுகாதார நிலைமைகளை ஒழுங்குபடுத்தாதது

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், தைராய்டு போன்ற நாட்பட்ட மருத்துவ நிலைகளை நீங்கள் கவனித்துக் கொள்ளாவிட்டால் உங்கள் கண்பார்வை படிப்படியாக மோசமடையும். 

4. போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சியை பராமரிக்காதது

சரியான போதுமான தூக்கம் இல்லாதது கண்கள் வறட்சி, சிவப்பு கண்கள், இருண்ட வட்டங்கள், கண் பிடிப்புகள் மற்றும் ஒளி உணர்திறன் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும். தூக்கமின்மையால் உடலில் ஏற்படும் ஹார்மோன் மற்றும் நரம்பியல் மாற்றங்கள் போன்ற உடலியல் மாற்றங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் மோசமான பார்வையை மேலும் அதிகரிக்கலாம். அதேபோல வீட்டுக்குள்ளேயே இருப்பதும், உடல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பதும் கண்பார்வையை பலவீனப்படுத்துகிறது. தொலைநோக்கு பார்வையின்மை ஓரளவுக்கு மரபியல் சார்ந்தது என்றாலும், தினசரி வெளியில் செல்பவர்களுடன் ஒப்பிடுகையில், வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் குறுகிய பார்வை கொண்டவர்களாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

5. நீரேற்றமாக இருக்காமல் இருப்பது

உடலின் வெப்பநிலை மற்றும் பிற உயிரியல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு நமது செல்கள், உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. கண்ணீரின் வடிவில் இருக்கும் நீர், நம் கண்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. வளிமண்டலத்தில் உள்ள தூசி, அசுத்தங்கள் மற்றும் பிற துகள்கள் நம் கண்களை அடைவது இயற்கையானது. கண்களில் ஈரப்பதம் போதுமான அளவுக்கு இல்லை என்றால், ஒருவருக்கு வறண்ட, சிவப்பு அல்லது வீங்கிய கண்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் உட்கொள்வதன் மூலம் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
சிறுநீர் கழிப்பதில் சிரமம்.. ஏசியில் வேலை செய்தால் இப்படி ஒரு பிரச்னையா? - தீர்வு இதோ!
சிறுநீர் கழிப்பதில் சிரமம்.. ஏசியில் வேலை செய்தால் இப்படி ஒரு பிரச்னையா? - தீர்வு இதோ!
தொடர் கந்துவட்டி கொடுமை... மதுரையில் நடந்தது என்ன? - மனநல ஆலோசகர் சொல்வது என்ன !
தொடர் கந்துவட்டி கொடுமை... மதுரையில் நடந்தது என்ன? - மனநல ஆலோசகர் சொல்வது என்ன !
இரவு உணவுக்குப் பின் 10 நிமிஷம் நடங்க.. அப்பறம் உடலில் நடக்கும் அதிசயம் பாருங்க
இரவு உணவுக்குப் பின் 10 நிமிஷம் நடங்க.. அப்பறம் உடலில் நடக்கும் அதிசயம் பாருங்க

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 30-ம் தேதி எக்கச்சக்கமான இடங்கள்ல மின் தடை இருக்கு; இந்த லிஸ்ட்ட பாருங்க
சென்னை மக்களே.! ஜூலை 30-ம் தேதி எக்கச்சக்கமான இடங்கள்ல மின் தடை இருக்கு; இந்த லிஸ்ட்ட பாருங்க
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Embed widget