மேலும் அறிய

Breakthrough infections : தடுப்பூசிக்குப் பிந்தைய கொரோனா; உருமாறிய டெல்டா வகையே காரணம்! ஐ.சி.எம்.ஆர்., ஆய்வு!

2021 ஏப்ரல் மாதத்தில், கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்தபோது, நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட மரபணு வரிசை சோதனையில், 99% மாதிரிகளில் டெல்டா வகை தொற்று கண்டறியப்பட்டது.

தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் (Breakthrough infections) வெறும் 10% பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தீவிர அறிகுறிகள் காணப்பட்டதாக ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.       

"Clinical characterization and Genomic analysis of COVID-19 breakthrough infections during second wave in different states of India" என்ற இந்த ஆய்வுக் கட்டுரை கடந்த ஜூலை 15ம் தேதி medRxiv என்ற சுகாதார அறிவியல் நாளிதழில் 'preprint' ( மற்ற  ஆய்வாளர்களால் இன்னும் சக மதிப்பாய்வு செய்யப்படவில்லை) வெர்ஷனில் வெளியானது. 

 ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள்:

இந்தியாவின் 17 மாநிலங்களில் தடுப்பூசி டோஸ்கள் போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 677 பேரின் மாதிரிகள் சார்ஸ்-கோவிட் – 2 மரபணு வரைபட ஆய்வகங்களுக்கு அனுப்பி பகுப்பாய்வு  செய்யப்பட்டன .    Breakthrough infections : தடுப்பூசிக்குப் பிந்தைய கொரோனா; உருமாறிய டெல்டா வகையே காரணம்! ஐ.சி.எம்.ஆர்., ஆய்வு!

முடிவுகள்: 

கொரோனா இரண்டாவது அலையில் 86% தடுப்பூசிக்குப் பிந்தைய கொரோனா பாதிப்புகளுக்கு (Breakthrough Infections) புதிய உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று காரணமாக அமைந்துள்ளது. 

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு பாதிக்கப்பட்டவர்களில், 10% பேர் (71 பேர்) மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தீவிர அறிகுறிகளை உருவாக்கியுள்ளனர். இருப்பினும், கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவ ஆக்ஸிஜன் உதவி மற்றும் அவசர சிகிச்சை உதவி யாருக்கும் தேவைப்படவில்லை.  

தடுப்பூசிக்குப் பிந்தைய கொரோனா பாதிப்பு காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் (3/641).  


Breakthrough infections : தடுப்பூசிக்குப் பிந்தைய கொரோனா; உருமாறிய டெல்டா வகையே காரணம்! ஐ.சி.எம்.ஆர்., ஆய்வு!

புதிய உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்றின் தீவிரத் தன்மையை கொரோனா தடுப்பூசி டோஸ்கள் குறைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தடுப்பூசிக்குப் பின்பு பாதிக்கப்பட்டவர்களில் கடுமையான நுரையீரல் பாதிப்பு அறிகுறிகள், இறப்பு விகிதம் குறைத்து காணப்படுகிறது. இது,  நாட்டின் மருத்துவ உட்கட்டமைப்பு பாதுக்காக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர். 

இரண்டாவது அலையும் - உருமாறிய கொரோனாவும்:  

இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வகை( B.1.1.7-Alpha), தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகை (B.1.351- Beta),  பிரேசிலில் முதன்முறையாக கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் (P.1- gamma), இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட (B.1.617.2- டெல்டா வகை)  ஆகிய நான்கு மாறுபட்ட வைரஸ்கள் மிகவும் கவலையளிக்கக் கூடியதாக (Variation Of Concern) வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலைக்கு  புதிய உருமாறிய B.1.617 மற்றும் B.1.617.2 வகை கொரோனா தொற்று முதன்மையாக காரணமாக இருந்தன. மேலும், அம்மாநிலத்தில்  ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட மரபணு வரிசை சோதனையில், 60% மாதிரிகளில் B.1.617.1(கப்பா) பாதிப்பும், B.1.617.2 (டெல்டா) பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது.

2021 ஏப்ரல் மாதத்தில், கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்தபோது, நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட மரபணு வரிசை சோதனையில், 99% மாதிரிகளில் டெல்டா வகை தொற்று கண்டறியப்பட்டது. புதிய டெல்டா வைரஸ் வகைகள் அதிகம் பரவக் கூடியதாகவும், நுரையீரலை பாதிக்கக் கூடியதாக இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தில் உள்ள T478K, P681R and L452R மாற்றங்கள் டெல்டா வகையாகும். இந்த மாற்றம் வைரசை மனிதர்களிடையே அதிகமாகவும், மிக எளிதாகவும் பரவச் செய்யலாம் என்று கணிக்கப்படுகிறது. எனவே, இத்தகையை சூழலில் ஐசிஎம்ஆர்-ன் ஆய்வு கட்டுரை தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.         

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget