மேலும் அறிய

"பூஸ்டர் தடுப்பூசி டோஸ் தேவையில்லை" - 'Going Viral' புத்தக வெளியீட்டில் எய்ம்ஸ் இயக்குனர்!

மூன்றாவது டோஸ் தடுப்பூசிக்கான அவசியம் எதிர்காலத்தில் வராது என்று கோயிங் வைரல் புத்தக விழாவில் எய்ம்ஸ் இயக்குனர் குலேரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனாவை இன்னும் எந்தவொரு நாடும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. இருப்பினும், சில நாடுகள் சிறப்பான வேக்சின் பணிகள் மூலம் வைரஸ் பாதிப்பைக் குறைத்துள்ளன. தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை 100 கோடிக்கும் அதிகமானோருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 18+ அனைவருக்கும் வேக்சின் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாட்டில் தற்போது பெரும்பாலும் கோவாக்சின் தடுப்பூசியே 12-16 வாரக் கால இடைவெளியில் போடப்பட்டு வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பூஸ்டர் டோஸ் எப்போது என்பது குறித்து கேள்விகள் எழுந்தன. அதேபோல பூஸ்டர் டோஸ் குறித்தும் உலகின் பல்வேறு நாடுகளும் முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே சில ஐரோப்பிய நாடுகளில் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவிலும் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதே கருத்தைத் தான் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் குலேரியா கோயிங் வைரல் என்னும் கோவாக்சின் தடுப்பூசி கண்டுபிடித்த பயணம் குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசும்போது தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களை காணும்போது அதிக மக்களை பாதிக்கும் அளவுக்கான இன்னொரு அலை வராது என்ற நம்பிக்கை நாட்கள் செல்ல செல்ல அதிகரிக்கிறது என்று கூறினார். மேலும் பேசிய அவர், "முதல் இரண்டு அலைகள் அளவிற்கான பாதிப்புகளை 3வது அலை கொண்டிராது என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது. அதன்மூலம் இந்த தொற்றுநோய் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று தோன்றுகிறது. நம் நாட்டில் இன்னமும் கொராணா நோய் பாதித்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் பாதிப்பின் வீரியம் வெகுவாக குறைந்து விட்டது. அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களை விகிதம் 118 கோடியை நேற்று கடந்தது. செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி வரையில் அன்று மட்டும் 64 லட்சம் தடுப்பூசிகள் போட்டுள்ளனர். இந்த விகுதாசார்த்தை காணுகையில் வெகு விரைவில் முழுமையாக தடுப்பூசி போட்ட நாடாக மாறும் வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.

தற்போது வரை 2 டோஸ் வேக்சினே உயிரிழப்பையும் தீவிர பாதிப்பையும் தடுப்பதால் பூஸ்டர் டோஸ்கள் தற்போதைய சூழலில் தேவையில்லை என்றும் அனைத்து நாடுகள் உள்ள மக்களுக்கும் 2 டோஸ் தடுப்பூசியைச் செலுத்துவதில் உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் சில ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் இதுவரை பூஸ்டர் டோஸ் குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், பூஸ்டர் டோஸ் குறித்தும் இன்னும் 2 வாரங்களில் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இறுதி முடிவை எடுக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், பூஸ்டர் டோஸை காட்டிலும் சிறார்களுக்கு வேக்சின் செலுத்தும் பணிகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
Embed widget