மேலும் அறிய

Anocovax: விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி: உங்களுக்கு என்னவெல்லாம் தெரிஞ்சிருக்கணும்?

நாட்டில் முதன்முறையாக விலங்குகளுக்கான கோவிட்-19 தடுப்பூசியை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசிக்கு அனகோவாக்ஸ் (Anocovax) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நாட்டில் முதன்முறையாக விலங்குகளுக்கான கோவிட்-19 தடுப்பூசியை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசிக்கு அனகோவாக்ஸ் (Anocovax) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வேளாண் ஆய்வு கழகம் ICAR (Indian Council of Agricultural Research) இந்தத் தடுபூசியை உருவாக்கியுள்ளது.

இந்தியாவும் கொரோனா தடுப்பூசியும்:

கடந்த 2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தான் முதல் கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் 2020 மார்ச்சில் இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்தது. மே மாதத்துக்குள் நாட்டை ஆட்டிப்படைத்தது. 2021 ஜனவரி 16 ஆம் தேதி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. கோவாக்சின், கோவிஷீல்டு என்று இரண்டு மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இப்போது 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தொடங்கி நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக முதல் இரண்டு அலைகளில் இந்தியாவை ஆட்டிப்படைத்த கொரோனாவால் மூன்றாம் அலையில் மேலோங்க முடியவில்லை. அது லேசாக தாக்கி கடந்து சென்றது. இப்போது மீண்டும் கொரோனா தொற்று அன்றாடம் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, கேரளா, உபி, தமிழ்நாடு என கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் கூட உயிரிழப்புகள் அதிகமாகவில்லை. இந்தியாவில் ஜூலையில் கொரோனா 4வது அலை வரும் என சில அமைப்புகள் கணித்துக் கூறியிருந்தாலும் கூட இந்தியாவில் இதுவரை 195 கோடிக்கும் அதிகமான அளவு டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் இனி பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என சுகாதாரத் துறை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி:

இந்நிலையில் தான், நாட்டில் முதன்முறையாக விலங்குகளுக்கான கோவிட்-19 தடுப்பூசியை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசிக்கு அனகோவாக்ஸ் (Anocovax) எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

அனகோவாக்ஸ் என்ற இந்த தடுப்பூசி டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகை கோவிட் தொற்றுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படும், பெரும்பாலான கோவிட் தொற்று அனைத்திற்கு எதிராகவும் நோய் எதிர்ப்பு சக்தியை இது உருவாக்கும் எனவும் ஐசிஏஆர்(ICAR - Indian Council of Agricultural Research) கூறியுள்ளது. இந்த தடுப்பூசியை நாய், பூனை, சிங்கம், சிறுத்தை, எலி, முயல் என பல விலங்குகளுக்குச் செலுத்தலாம் எனத் தெரிகிறது. பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விஞ்ஞானிகள் தங்களின் தனித்துவமான திறமையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக நாட்டிலேயே முதல் விலங்குகளுக்கான கோவிட் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் தற்சார்பு இந்தியா என்ற கனவை இவர்கள் நனவாக்கியுள்ளனர். தடுப்பூசிக்காக வெளிநாடுகளின் உதவியை நாம் சார்ந்திருக்க தேவையில்லை. இது மாபெரும் சாதனை என்று பெருமிதம் பொங்கக் கூறினார்.


Anocovax: விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி: உங்களுக்கு என்னவெல்லாம் தெரிஞ்சிருக்கணும்?

 

இந்த தடுப்பூசியுடன் இரு பரிசோதனை கருவிகளையும் ஐசிஏஆர் நேற்று அறிமுகம் செய்தது. விலங்குகளிடம் காணப்படும் SARS-CoV-2, Surra என இரு நோய் தொற்றுகளை கண்டறியும் திறனை இந்த பரிசோதனை கருவிகள் மூலம் முறையே கண்டறியலாம்.

கொன்று குவிக்கப்பட்ட மிங்க்:

விலங்குகளிடமிருந்து கொரோனா உருமாறி அது மனிதர்களுக்குப் பரவினால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அந்த அவசரத்தை கருத்தில் கொண்டே இந்த தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவல் ஆரம்பித்தபோது டென்மார்க்கில் மிங்க் வகை கீரி உயிரினங்களில் கொரோனா கண்டறியப்பட்டது. எங்கே அவை உருமாறி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என அஞ்சி ஆயிரக்கணக்கான மிங்க் உயிரினங்கள் அழிக்கப்பட்டன. இவற்றை அந்த நாட்டினர் ஃபர் ஆடைகள் தயாரிக்க ரோமங்களை எடுக்க பண்ணைகளில் வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் இந்தியாவில் அனகோவாக்ஸ் (Anocovax) தடுப்பூசி தயாரிப்பு ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
 

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget