Coronavirus LIVE Updates: கேரளாவில் இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE

Background
கேரளாவில் இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு
கேரளாவில் இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் RT-PCR பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
TN Corona Daily Bulletin: கோயம்பத்தூரில் அதிகபட்சமாக 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1929 (நேற்று- 1,956) பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,77,237 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 235 பேரும், சென்னையில் 182 பேரும்,ஈரோடில் 178 பேரும், செங்கல்பட்டில் 107 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கூடுதலாக 8,39,780 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன - மத்திய அரசு
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 52.40 கோடிக்கும் அதிகமான (52,40,60,890) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 8,39,780 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
இவற்றில், இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 50,51,29,252 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2.33 கோடி (2,33,55,890) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
அகில இந்திய அளவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விவரம்
புதுச்சேரியில் மேலும் 63 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை கூறியுள்ளது. மொத்த பாதிப்பு 1,21,665 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,19,031 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

