Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் புதிதாக 1,969 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE

Background
3.24 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன
மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டிற்கு 3.24 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
மொத்தம் 49,74,90,815 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 51.66 கோடிக்கும் அதிகமான (51,66,13,680) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது. மேலும், கூடுதலாக 55,52,070 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 49,74,90,815 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 2.29 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியுள்ளது. அவசர கால தேவைக்காக ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா கூறியுள்ளார்.
புதுச்சேரியில் மேலும் 102 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் மேலும் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 1,21,532 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்ததால் பலியானோர் எண்ணிக்கை 1800 ஆக உயந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

