Coronavirus LIVE Updates: கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்தாலும், பரவல் ஓயவில்லை - குடியரசுத் தலைவர்
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,933 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,84,969 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 236 பேரும், சென்னையில் 211 பேரும், ஈரோட்டில் 117 பேரும், செங்கல்பட்டில் 108 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்பாக, சென்னையின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கோயம்புத்தூரை விட அதிகரித்திருந்த நிலையில், நேற்று கோயம்பத்தூர் மாவட்டம் மீண்டும் முதலிடத்தில் வந்துள்ளது.
குணமடைவோர் எண்ணிக்கை: 1,887 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,30,096 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98% என்றளவில் குணமடைந்துள்ளனர்.
தொற்று உறுதி விகிதம்: தமிழ்நாட்டில் தினசரி தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 1.2 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 2 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்படுகிறது.
தமிழகத்திற்கு நேற்று வந்துள்ள தடுப்பூசிகள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு விவரம்:
மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 18 நபர்களுக்கு தொற்று பாதிப்பு
மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 18 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73786 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 26 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 72416 -ஆக அதிகரித்துள்ளது. இன்று வரையில் மதுரையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்புகள் இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1148 இருக்கிறது. இந்நிலையில் 222 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது




















