குஷ்புவை ரவி மோகன் இவ்வளவு மோசமாக திட்டியது ஏன் ? பின்னணி இதோ
நடிகர் ரவி மோகன் இன்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடிகை குஷ்புவை கடுமையாக விமர்சித்து பேசியதற்கான முக்கிய காரணம் இதுதான்

தனது விவாகரத்தை அறிவித்த பின் நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் நட்பு பாராட்டி வந்தார். இதனால் ஆர்த்தியின் ஆதரவாளர்கள் கெனிஷாவின் சமூக வலைதள பக்கத்தில் அவரை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வந்தார்கள். இதனால் கெனிஷா தற்போது சென்னையை விட்டே சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ரவி மோகன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து தனது மனைவி ஆர்த்தி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஆர்த்திக்கு தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்த நடிகை குஷ்புவையும் ரவி மோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்
குஷ்புவை சரமாரியாக விமர்சித்த ரவி மோகன்
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரவி மோகன் " என்னைப் பற்றிய என் முன்னாள் மனைவியின் எல்லா பதிவுகளிலும் என்னை மறைமுகமாக தாக்கி அந்த மூன்றெழுத்து இட்லி நடிகை பதிவிட்டு வருகிறார். அவருடைய தலைமுறையைச் சேர்ந்த மூன்று நடிகர்கள் தங்களது குடும்பத்தை அந்த பெண் கெடுக்க வந்ததாக கூறினார்கள். அடுத்தவர்களின் குடும்பத்தை கெடுக்க வந்த அந்த பெண் என் குடும்பத்தைப் பற்றி பேசுகிறார். ஆனால் வேற பிரச்சனை வந்தால் உடனே ஃபெமினிஸ்ட் வேடம் அணிந்து கொள்வார். என்ன டிராமா இது. என்ன பத்தி பேசுறதுக்கு ஏதாவது துப்பு இருக்கா. நான் யார் நீ யார். என்ன விட நல்லா நடிப்பியா நானே உன் கால்ல விழுவேன். ஆனால் என் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட உனக்கு என்ன அருகதை இருக்கு" என ரவி மோகன் குஷ்பு குறித்து பேசினார்.
குஷ்புவை திட்டியது ஏன் ?
ரவி மோகன் குஷ்பு குறித்து இவ்வளவு கடுமையாக பேசியதற்கு காரணம் உள்ளது. ரவி மோகனின் மாமியாரான சுஜாதா மற்றும் குஷ்பு நெருங்கிய நண்பர்கள். ரவி மோகனும் ஆர்த்தியும் சந்தித்து இருவரும் காதலிக்க காரணமாக அமைந்ததே குஷ்பு என்றும் சொல்லப்படுகிறது. ரவி மோகன் விவாகரத்து அறிவித்ததில் இருந்து ஆர்த்திக்கு குஷ்பு தனது ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார். ஆர்த்தி ரவியின் பதிவுகளில் இரண்டு குழந்தைகளை வைத்து போராடும் ஆர்த்திக்கு தைரியம் கொடுக்கும் விதமாக குஷ்பு கமெண்ட் செய்து வந்தார். இதுவே ரவி மோகன் அவரை விமர்சித்ததற்கு முக்கிய காரணம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















