மேலும் அறிய

Captain Vijayakanth: ”வாழும்போதே கடவுளாக வாழ்ந்தவர்” விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்த விஷால், ஆர்யா அஞ்சலி

நடிகரும் தேமுதிக தலைவரும் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானர்.

நடிகரும் தேமுதிக தலைவரும் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானர். இது தமிழ்நாடு திரைத்துறையினர் மத்தியில் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது மறைவின் போது அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் பலர் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்திற்குச் சென்று தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், “ நடிகர் விஜயகாந்த் வாழும்போதே கடவுளாக வாழ்ந்தவர். நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும். நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவரது பெயரைச் சூட்ட யாரும் ஆட்சேபனை தெரிவிக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன். நடிகர் சங்கத்தில் இது குறித்து பரிசீலனை செய்யப்படும்” என குறிப்பிட்டு பேசியுள்ளர். 

மேலும், “ கலையுலகில் மட்டும் இல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல மனம் கொண்ட மனிதன் என பெயரெடுத்தவர் நடிகர் விஜயகாந்த். நல்ல தைரியமான அரசியல்வாதி என பெயரெடுத்தவர். பொதுவாகவே மறைந்தவர்களை நாம் கடவுள் என கூறுவோம். ஆனால் கேப்டன் விஜயகாந்தினை உயிருடன் இருக்கும்போதே பலர் சாமி என கூறியுள்ளனர். அவர் செய்த நல்ல காரியங்கள் அவருக்கு இந்த பெயரை பெற்றுத் தந்தது. அவர் ஏதே ஓரிரு வருடங்கள் மட்டும் அந்த நல்ல காரியத்தினை செய்துவிட்டு இருக்கவில்லை. அவரது படங்கள் வெளியாகும்போது, படம் தொடங்குவதற்கு முன்னர் அவர் மக்களுக்கு செய்த நல்ல காரியங்கள் போடப்படும். அப்படியான கடவுள் நடிகர் சங்க கட்டிடத்தின் பத்திரத்தினை மீட்டுக்கொண்டு வந்தார்.

அந்த நடிகர் சங்கத்தில் நான் இப்போது பொதுச் செயலாளராக இருப்பது எனக்கு பெருமை. நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று அவரது வீட்டிற்குச் சென்றோம். அப்போது ’அவர் நடிகர் சங்க பத்திரத்தை மீட்டுக்கொண்டு வந்தபோது, வீட்டு லாக்கரில் இருந்த எனது நகைகளை அனைத்தையும் வெளியே எடு நான் பத்திரத்தை மீட்டுக்கொண்டு வந்திருக்கின்றேன் என கண்ணீரோடு சொல்லி பத்திரத்தை லாக்கரில் வைத்தார்’ என பிரேமலதா அம்மா அவர்கள் எங்களிடம் கூறினார். அவரை நேரில் சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவரது அலுவலகத்தில் எப்போதும் நான்கு பேர் சமைத்துக்கொண்டே இருப்பார்கள் எனவும், அங்கு வரும் அனைவருக்கும் குறிப்பாக காசு இல்லாமல் தவித்து வந்த உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் கேப்டன் ஐயா அலுவலகத்திற்கு வந்தால் யாரும் பசியுடன் வெளியே போகக் கூடாது என ஒருநாள் இரண்டு நாள் இல்லை பல ஆண்டுகள் செய்தார். இதுதான் எனக்கு முன்னுதாரணம். அனைவரையும் சரி சமமாக பார்த்த ஒரு நடிகர் கேப்டன் ஐயாதான். படப்பிடிப்பின்போது அங்கு பணிபுரியும் 250 பேர்களுக்கும் அவர் என்ன சாப்பிடுகின்றாரோ அதுதான் சாப்பிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் மறைந்தபோது என்னால் வரமுடியாத சூழலில் இருந்தேன். அவரின் குடும்பத்திற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்” என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
Embed widget