மேலும் அறிய

மிலாவுக்கும் ஷகிலாவுக்கும் என்ன பிரச்சனை! அம்மா பாசமும், மிலா ஷேரிங்ஸும்..

”அவங்களுக்கு மனசு உருத்தல..மனசுக்குள்ள கேவலமான ஃபீல் இல்லைனா என்னை பார்த்து ஹாய்னு சொல்லலாமே.”

கவர்ச்சி நடிகையாக இருந்து புகழ்பெற்றவர் நடிகை ஷகிலா. அதுவரையில் ஷகிலா மீது பலருக்கு இருந்த பிம்பம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அடியோடு மாறியது. மீதமிருக்கும் சிலர் அவரை பற்றி இப்போதும் அவதூறு பரப்பத் தவறுவதில்லை. பலரும்  அம்மா என அன்போடு அழைக்க துவங்கினர்.  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது மகள் என திருநங்கை  மிலா என்பவரை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார் ஷகிலா. திருநங்கைகளுக்கு ஆதரவு அளித்து வந்த ஷகிலாவை பார்த்து பலரும் வியந்து பாராட்டினர்.  பழகுவதற்கு அத்தனை இயல்பாகவும் அன்பாகவும் இருந்த திருநங்கை மிலாவிற்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் குவிய தொடங்கியது. ஷகிலாவும் மிலாவும் ஒன்றாகவே பல மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தனர்.

இப்படியான சூழலில்தான் மிலா மற்றும் ஷகிலா இருவருக்கும் இடையில் விரிசலை உணர முடிந்தது. இது குறித்து மிலா பங்கேற்ற நேர்காணல்களில் தொடர்ந்து கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விளக்கியிருக்கிறார் மிலா.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Shakila (@imshakila_official)


மிலா பகிர்ந்ததாவது :

“ஷகிலா அம்மாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் கிடையாது. அவங்களுடை ஃபேன் பேஜ்தான் இருந்தது. நான்தான் முதன் முதலாக அவங்களுக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் துவங்கினேன். நான் ஷகிலா அம்மாக்கூட ஒரு புகைப்படம் எடுத்து பதிவேற்றியிருந்தேன் அந்த புகைப்படத்தை யாரோ ஒருவர் நீக்கிட்டாங்க. அதை பற்றி ஷகிலா அம்மாவிடம் கேட்டபொழுது அப்படியா கண்ணா நான் பார்க்குறேன்..என்றார். இதிலிருந்து அவர் அந்த பக்கத்தில் ஆக்டிவாக இல்லை என்பது தெளிவாக புரிந்துவிட்டது.

இன்னைக்கு அது  ஷகிலா அம்மாவுடைய அக்கவுண்டா அல்லது ஷாசாவுடைய அக்கவுண்டானே தெரியவில்லை. நான் ஷகிலா அம்மா வீட்டிலிருந்து தானாக வெளியேறவில்லை. வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டேன். எப்போதும் ஒரு குழந்தையை நான் தத்தெடுக்கவே மாட்டேன். ஏனென்றால் என்றாவது ஒருநாள் நிச்சயம் நான் அந்த குழந்தையை காயப்படுத்திவிடுவேன். ஷாசா சீசனுக்கு சீசன் வேற வேற ஆள் கூட இருப்பாங்க. காரியம் ஆகுறவங்க கூடத்தான் இருப்பாங்க. ஆரம்பத்துல வீட்டுக்கு சோத்துக்கு எதுக்குமே வழி இல்லாம இருந்தாங்க. அப்போ என்கூட ஒருவருடம் இருந்தாங்க. அதன் பிறகு அப்சரா ரெட்டி கூட இருந்தாங்க. அதன் பிறகு திருமணம் ஆனதும் மார்கெட் போச்சு. அதன் பிறகு மிலா அவங்க சொந்த அம்மா அப்பா கூட இருக்குறா அப்படிங்குற காரணத்தை வச்சுக்கிட்டு ஷகிலா அம்மாக்கிட்ட நான் உங்களோட பொண்ணு ஃபிரண்டுனு சொல்லி சேர்ந்துக்கிட்டாங்க.

இப்போ நானும் சாஷாவும் பேசுறது கிடையாது.அவங்க பொது இடத்துல பார்த்தா ஒரு ஹாய் கூட சொல்லுறது கிடையாது. அவங்களுக்கு மனசு உறுத்தல..மனசுக்குள்ள கேவலமான ஃபீல் இல்லைனா என்னை பார்த்து ஹாய்னு சொல்லலாமே. நான் சொல்லுறேன்னே நீ ஏன் சொல்லவில்லை. அவங்க என்னையும் ஷகிலா அம்மாவையும் பிரிச்சுடலாம்னு நினைக்குறாங்க . அது ஒருபோதும் நடக்காது. ஆயிரம் திருநங்கைகளை ஷகிலா அம்மா வளர்க்கலாம். நான்தான் அவங்க பொண்ணு “ என தெரிவித்துள்ளார் மிலா.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Premalatha : ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு சட்டம் போல் எதிர்கட்சிகளை முடக்கும் விஜய் அரசு.! இறங்கி அடித்த பிரேமலதா
ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு சட்டம் போல் எதிர்கட்சிகளை முடக்கும் விஜய் அரசு.! இறங்கி அடித்த பிரேமலதா
Embed widget