ஓவியாவுக்கு விஜய் மேல என்ன காண்டு...இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் சர்ச்சை
வேலூர் அரசியல் பரப்புரையில் விஜய் நேற்று பேசிய நிலையில் நடிகை ஓவியாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றன. கரூன் கூட்ட நெரிசலைத் தொடர்ந்து சிறைய இடைவெளிக்குப் பின் விஜய் மீண்டும் களத்தில் மக்களை தொடர்ச்சியாக சந்தித்து பேசி வருகிறார். புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு, ஈரோடு, சேலம் தொடர்ந்து நேற்று வேலூரில் விஜய் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நடத்தினார். ஜல்லிக்கட்டைப் பற்றிய குட்டி கதை சொன்ன விஜய் வழக்கம் போல ஆளும் கட்சி திமுக , எதிர்கட்சி அதிமுகவை விமர்சித்தார்.
திரண்ட ரசிகர்கள்
விஜயைப் பார்க்க இந்த முறையும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். பரப்புரை நடக்கும் இடத்திற்கு விஜய் வருவதற்கு முன்பே ரசிகர்கள் சாலைகளில் கூட்டமாக நின்று விஜயின் வாகனத்தை வழிமறித்தனர். மேலும் நிகழ்ச்சிக்கு அனுமதி சீட்டு இல்லாதபோதும் பேரிகேட்களை தாவி குதித்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆர்பாட்டம் செய்தனர். தான் போகும் போது தனது வாகனத்தை பின் தொடர வேண்டாம் என விஜய் கேட்டுக்கொண்ட பின்னரும் அவரது வாகனத்தை ஏராளமானோர் பின் தொடர்ந்தார்கள். வழக்கம்போல இந்த பரப்புரையைத் தொடர்ந்து விஜய் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் மீதான விமர்சனம் தொடர்ந்து வருகிறது
ஜூலி விமர்சனம்
பிக்பாஸ் ஜூலி விஜய் ஜல்லிக்கட்டு பற்றி பேசியதை கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார். விஜயின் கதையைக் கேட்டு தவெகவில் இருக்கும் மைனர்கள் ஜல்லிகட்டு காளையை அடக்க முயற்சித்து ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் இதனால் தன் இஷ்டத்திற்கு பேசாமல் பொறுப்புடன் பேசும்படி ஜூலி இந்த வீடியோவில் பேசினார்.
ஓவியா இன்ஸ்டாகிராம் பதிவு
விஜய் மீது தொடர்ச்சியான விமர்சனங்களை வைத்து வரும் பிரபலங்களில் ஓவியாவும் ஒருவர். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தபோது விஜயை சிறையில் அடைக்கும்படி ஓவியா தனது இஸ்டாகிராமி பதிவிட்டிருந்தார். தவெக ஆதரவாளர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும் அந்த பதிவை அவர் நீக்கினார். தற்போது ஓவியா தனது இன்ஸ்டாகிராமில் பிரான்ஸ் காஃப்காவின் வாக்கியம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் " ஒரு முட்டாள் என்பது ஒரு முட்டாள். இரண்டு முட்டாள்கள் என்பர்கள் இரண்டு முட்டாள்கள். 10 அயிரம் முட்டாள்கள் சேர்ந்தால் ஒரு அரசியல் கட்சி' என்று ஓவியா பகிர்ந்துள்ளார். மற்றொரு பதிவில் 'சிலர் பிறக்கும்போதே மகத்தானவர்களாக பிறக்கிறார்கள். சிலர் மகத்தானவர்களாக மாறுகிறார்கள். இன்னும் சில பி.ஆர் வைத்துக்கொள்கிறார்கள்.' என்று அவர் பதிவிட்டுள்ளார். தவெக விஜயை குறிப்பிட்டே ஓவியா இப்படி பதிவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது






















