மேலும் அறிய

Flashback: ‛பேர் வெச்சாலும் வைக்காமல் போனாலும்’ வாசுதேவன்... மலேசியா வாசு தேவனான கதை!

இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்து, தனக்கான அடையாளத்தை அவர் பதிவு செய்து கொண்டிருந்த சமயம் அது. அவருடன் இருந்தவர்களும் வாய்ப்புகளை பெற்று வந்தனர்.

‛பேர் வெச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்...’ இந்த பாடல் தான் எங்கு பார்த்தாலும் ஒளிக்கிறது, ஒலிக்கிறது. இசை புதிதல்ல, பாடியவர்களும் புதிதல்ல. ஆனால் அதை நினைவூட்டிய விதம் தான் புதிது. அந்த பாடலுக்கு இசையமைத்த இளையராஜாவை நமக்கு தெரியும். அந்த பாடல் பிறந்த கதையையும் அவர் கூறியிருந்தார். ஆனால் அந்த பாடலை பாடிய மறைந்த மலேசியா வாசுதேவனை பற்றி உங்களுக்குத் தெரியுமா... அவர் பாடகரானதே ஒரு கதை... இதோ வாசு தேவன் என பெயர் வெச்சு ‛பேர் வெச்சாலும் வைக்காம போனாலும்...’ மலேசியா வாசுதேவன் ஆன கதை இதோ...!


Flashback: ‛பேர் வெச்சாலும் வைக்காமல் போனாலும்’ வாசுதேவன்... மலேசியா வாசு தேவனான கதை!

மலேசியா டூ தமிழ்நாடு

இளையராஜாவின் அறிமுகங்களில், வாசு சாருக்கு தனி இடம் உண்டு. மலேசியாவின் சிலாங்கூரில் ராஜகிரி எஸ்டேட்டில் பிறந்தவர் தான் வாசு. இயற்பெயர் சாத்து ஆறுமுகம் நாயர். பூர்வீகம் கேரளா என்றாலும், மலேசியாவில் செட்டில் ஆன குடும்பம். இளமையில் இசை ஆர்வம் இருந்ததால் அங்குள்ள தமிழர் இசைக் குழு ஒன்றில் பாடகராக இருந்தார். நாடகம், நடிப்பு, இசை என போய் கொண்டிருந்த சாத்து ஆறுமுகத்தின் இசை தாகம். தாய் தமிழ்நாட்டில் அரங்கேற்ற வேண்டும் என்கிற மோகம். அதுவே அவரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தது. இளையராஜாவின் பாவலர் பிரதர்ஸ் குழுவில் இணைந்து மேடைக்கச்சேரிகளில் பாடி வந்தார். இங்கு வந்த பின் சாத்து அறிமுகம், வாசுவாக மாறினார். வாசு என்கிற பெயரில் பலர் இருந்ததால், மலேசியா என்கிற அடைமொழியோடு மலேசியா வாசுதேவன் ஆனார். ஜி.கே.வெங்கடேஷ் இசையில் பொல்லாத உலகில் ஒரு போராட்டம் படத்தில் ‛பாலு விக்கிற பத்தம்மா...’ என்ற பாடல் தான் அவரது முதல் பாடல். இதை எத்தனை பேர் கேட்டிருப்பீர்கள் என்று கூட தெரியாது. அன்றே அவருக்கும் அது தோன்றியிருக்க கூடும். நல்ல வாய்ப்புக்கு காத்திருந்தார்.


Flashback: ‛பேர் வெச்சாலும் வைக்காமல் போனாலும்’ வாசுதேவன்... மலேசியா வாசு தேவனான கதை!

சொதப்பிய எஸ்.பி.பி., இன்ஸ்டண்ட் காபியாக வாசு!

இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்து, தனக்கான அடையாளத்தை அவர் பதிவு செய்து கொண்டிருந்த சமயம் அது. அவருடன் இருந்தவர்களும் வாய்ப்புகளை பெற்று வந்தனர். எஸ்.பி.பி.,-இளையராஜா-ஜானகி கூட்டணி , இசையில் வேறு சம்பவம் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது 16 வயதினிலே படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா. ‛செவ்வந்தி பூ எடுத்த சின்னக்கா... சேதி என்னக்கா...’ என்கிற பாடல் பதிவு செய்ய வேண்டும். எஸ்.பி.பி.,-ஜானகி பாடுவதாக இருந்த பாடல், ஸ்டூடியோவில் எல்லாம் ரெடி. பாலுக்காக வெயிட்டிங். பாலு வருகிறார். எனக்கு தொண்டை சரியில்லை என கூறுகிறார். ஒட்டுமொத்த ஸ்டூடியோவும் அதிர்ந்து நிற்கிறது. எல்லாரும் தயாராக இருக்கிறார்கள். ஜானகி வந்தாச்சு. இப்போ எப்படி மாற்றுவது.... என ஒரே குழப்பம். ராஜாவும் கடிந்து கொள்கிறார். என்ன செய்யலாம் என யோசித்த போது, ‛வாசு இருக்கான்ல... அவனை வெச்சு சமாளிப்போம்... அப்புறம் ஏதாவது பண்ணி மேக்கப் பண்ணிக்கலாம்,’ என முடிவு செய்கிறார்கள். வாசு எப்போதும் ஸ்டூடியோவில் இருப்பவர். ராஜா வருகிறார்... ‛வாசு... பாலு சொதப்பிட்டான்... நீ பாடு; கமலுக்கு பாடப்போற... இதுல நீ ஜெயிச்சுட்டா... எங்கேயோ போயிடுவ... இல்லைன்னா பாத்துக்கோ..’ என, கூறிவிட்டு, ரிக்கார்டிங் தியேட்டருக்குள் சென்று விடுகிறார். திடீர் வாய்ப்பு. பாலு முடியாது என்பதால் கிடைத்த வாய்ப்பு. எந்த முன் தயாரிப்பும் இல்லாமல், இன்ஸ்டண்ட் வாய்ப்பு. போதாக்குறைக்கு ராஜா சொன்ன வார்த்தைகள் வேறு, என உடல் முழுக்க பதட்டத்தோடு ஸ்டூடியோ உள்ளோ போகிறார்.


Flashback: ‛பேர் வெச்சாலும் வைக்காமல் போனாலும்’ வாசுதேவன்... மலேசியா வாசு தேவனான கதை!

‛தந்தானே தானே தனே தந்தானா... ஹோய்..’

அங்கு அதை விட இன்னொரு பதட்டம் காத்திருந்தது. ஜானகி பாட தயாராக நிற்கிறார். ‛என்னது... ஜானகி கூட பாடப்போறோமா...’ என, மனிதருக்கு இரட்டை பதட்டம் வந்துவிட்டது. ஒரு வழியாக அவரை தேற்றி, மைக் முன் நிறுத்திவிட்டனர். ‛தந்தானே தானேதனே தந்தானா... ஹோய் தந்தானா...’ என கோரஸ் துவங்கியதுமே, முடிவு செய்துவிட்டார் வாசு, இதை விடக்கூடாது என்று. ‛செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா... சேதி என்னக்கா... நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்க... முத்து பல்லக்கா...’ என பாடலை பாடி முடித்து வெளியே வந்த வாசுக்கு ஒரே கிளாப்ஸ். ஜானகியே வாசுவை அழைத்து, ‛ நல்லா பாடுனீங்க... நல்லா வருவீங்கனு,’ வாழ்த்தியிருக்காங்க. இப்போ தான் மனுசனுக்கு கான்பிடண்ட் வந்துருக்கு. அதே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலும் வாசு பாடியதே.


Flashback: ‛பேர் வெச்சாலும் வைக்காமல் போனாலும்’ வாசுதேவன்... மலேசியா வாசு தேவனான கதை!

ஓப்பனிங், தத்துவம், சோகம்... வாசுவை கூப்பிடுங்க!

அதுக்கப்புறம் வாசுக்கு வாய்ப்புகள் குவிந்தன. அந்த குரலில் இருந்த வேறு விதமான உணர்வு, குறிப்பாக கிராமிய கதைக் களங்களுக்கு பெரிதும் எடுபட்டது. அதனால் வாசு ஹிட்ஸ் வரத்துவங்கின. இப்போதும் மலேசியா ஹிட்ஸ் பிரபலமானது. அதிலும் டூயட் வேற ரகம். இசைஞானிக்கு எஸ்.பி.பி-சித்ரா எப்படியோ, அப்படி தான் வாசு-ஜானகி ஜோடி. அவர்களின் டூயட்டுகள் எப்போதும் பிரசித்தமானது. ரம்யமானது. வாசு தான் மலேசியாவிலேயே பாடகர் என்றில்லாமல், நாடகங்களிலும் ஆர்வம் காட்டியவராச்சே. இப்போது பேர், புகழ் இருக்கிறது. நடிகராகாமல் இருப்பாரா? வில்லன், நகைச்சுவை, குணசித்திரம் என அவர் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை. அதிலும் அவரது குரல் தனிக்கவனம் பெற்றது. டயலாக் உச்சரிப்பில் உயிர்ப்பு இருந்தது. பாடகராகவும், நடிகராகவும் தன் பயணத்தை தண்டவாள ரயில் போல நகர்த்தினார். இடையில் சாமந்திப்பூ, பாக்கு வெத்தலை, ஆயிரம் கைகள் போன்ற படங்களுக்கு இசையமைக்கவும் செய்தார். எஸ்.பி.பி., மாதிரியே பல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்டோருக்கு ஓப்பனிங் பாடல்கள் பாடிய பெருமை வாசுவுக்கு உண்டு. அவரது ஹிட்டில் ரஜினி பாடல்கள் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஓப்பனிங் சாங்கா, தத்துவ பாட்டா, சோக கீதமா... கூப்பிடுங்க வாசுவ... என்று தான் இருந்தது. 


Flashback: ‛பேர் வெச்சாலும் வைக்காமல் போனாலும்’ வாசுதேவன்... மலேசியா வாசு தேவனான கதை!

விடைபெற்றார் மலேசியா வாசுதேவன்!

திடீரென பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மலேசியா வாசுதேவன், அதற்கான சிகிச்சையில் இருந்தார். அந்த இடைப்பட்டகாலம், நிறைய வேதனைகளை அனுபவித்தார். 2011 பிப்ரவரி 20ம் தேதி ஞாயிற்று கிழமையன்று பகல் 1 மணியளவில் இந்த மண்ணை விட்டு மறைந்தார் மலேசியா வாசுதேவன். தன்னுடைய 66வது வயதில் அவர் தன்னுடைய கலைப்பணியை நிறைவு செய்து விடைபெற்றார். இன்று அவர் நம்மிடம் இல்லை என்றாலும், அவர் விட்டுச் சென்ற முத்தான பாடல்கள், என்றும் அவரை நம்முடன் பயணிக்க வைக்கின்றன. ‛பூங்காற்று திரும்புமா...’ என்கிற பாடல் கேட்கும் போதெல்லாம்.... வாசு சார் நியாபகம் வருவதை தவிர்க்கவே முடியாது. பூங்காற்று வருமா என தெரியாது... வாசு சார் வருவார்... இசையின் வழியே... நம் இதயத்திற்குள்! வாசு என்கிற இசை பயணியின் இந்த பயணம், கோடிக்கணக்கான இசைப்பிரியர்களை மகிழ்வித்திருக்கிறது . அவர் மறைந்த பிறகும் அவரது வெண்கல குரல் தான் ‛பேர் வெச்சாலும்...’ பாடலை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்க்கிறது. 

மேலும் படிக்க: ‛நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா...’ டாப் 5 வாசு ஹிட்ஸ்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

LIK Trailer : என்னடி டிசைன் டிசைனா யோசிக்கிறீங்க...பொங்கிய பிரதீப்..லவ் இன்சூரன்ஸ் கம்பேனி டிரெய்லர்
LIK Trailer : என்னடி டிசைன் டிசைனா யோசிக்கிறீங்க...பொங்கிய பிரதீப்..லவ் இன்சூரன்ஸ் கம்பேனி டிரெய்லர்
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
அப்பா இறந்தபின் தம்பி ராமையா எங்கள் வீட்டிற்கு வந்து சொன்ன வார்த்தை...எமோஷ்னலாக்கிய ரோபோ சங்கர் மகள்
அப்பா இறந்தபின் தம்பி ராமையா எங்கள் வீட்டிற்கு வந்து சொன்ன வார்த்தை...எமோஷ்னலாக்கிய ரோபோ சங்கர் மகள்
பாடகராக அறிமுகமாகும் நடிகர் இளவரசு...அட இந்த படத்துலயா!
பாடகராக அறிமுகமாகும் நடிகர் இளவரசு...அட இந்த படத்துலயா!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
Tirumavalavan: “நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
Embed widget