மேலும் அறிய

Baakiyalakshmi serial August 7 : பாக்கியாவை பழிவாங்க கோபிக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்... எழிலை காயப்படுத்தி பேசும் ஈஸ்வரி... 

Baakiyalakshmi Today : எழில் சினிமாவை நம்பி ஏமாந்து விடக்கூடாது என ஈஸ்வரி அட்வைஸ் செய்ய அது எழிலுக்கு சங்கடமாக இருக்கிறது. பாக்கியாவை பழிவாங்க கோபிக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. 

Baakiyalakshmi serial August 7 :  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய (ஆகஸ்ட் 7) எபிசோடில் பாக்கியாவும் பழனிச்சாமியும் பேசி கொண்டு இருக்கிறார்கள். இனியா லெட்டர் எழுதி வைத்துவிட்டு தப்பான முடிவு எடுக்க நினைத்ததை பற்றி பழனிச்சாமியிடம் சொல்லி வருத்தப்படுகிறாள். "நல்ல வேளை நான் அப்போ எழுந்துட்டேன், இல்லனா என்ன நடந்து இருக்கும்" என பாக்கியா சொன்னதும் அதை கேட்டு ஷாக்கான பழனிச்சாமி "ஏன் இந்த இனியா பாப்பா இப்படி எல்லாம் நடந்துக்குது. நீங்க அவ கிட்ட பேசி புரிய வைச்சுடீங்க இல்ல. இனிமே அவ எந்த தப்பான முடிவும் எடுக்க மாட்டா" என சமாதானம் செய்கிறார்.  

 

Baakiyalakshmi serial August 7 : பாக்கியாவை பழிவாங்க கோபிக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்... எழிலை காயப்படுத்தி பேசும் ஈஸ்வரி... 


எழில் மிகவும் சோகமாக வீட்டுக்கு வருகிறான். அவனிடம் போன விஷயம் என்ன ஆச்சு என தாத்தா விசாரிக்கிறார். புரொடியூசரை பார்க்க முடியாத விஷயம் பற்றி சொல்லி வருத்தப்படுகிறான். "இவரு இல்லாட்டி வேற யாரவது கிடைப்பாங்க. நீ கவலைப்படாத" என சொல்லி தாத்தா சமாதானம் செய்கிறார். அப்போது அங்கே வந்த ஈஸ்வரி நடந்ததை பற்றி கேட்டு எழிலுக்கு அட்வைஸ் செய்கிறார். "நான் சொல்றேன் என தப்ப எடுத்துக்காத எழில். சினிமா தான் உன்னோட கனவுனு எனக்கு தெரியும். ஆனா அது நடக்கலைனா வேற என்ன பண்ணலாம் என யோசிக்கணும். அது தான் எதார்த்தம். நல்லா படிச்சு இருக்க. உன்னோட படிப்புக்கு ஏத்த வேலையை தேடிகிட்டு குழந்தை பெத்துக்கிட்டு வாழ்க்கையில செட்டில் ஆகுற வழியை பாரு" என ஈஸ்வரி சொல்ல எழில் கோபமாக அங்கிருந்து எழுந்து சென்று விடுகிறான். அவன் பின்னாலேயே அமிர்தாவும் போகிறாள்.

 

Baakiyalakshmi serial August 7 : பாக்கியாவை பழிவாங்க கோபிக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்... எழிலை காயப்படுத்தி பேசும் ஈஸ்வரி... 

 

ராமமூர்த்தி ஈஸ்வரியை திட்டுகிறார். "அவனே நொந்து போய் வந்து உட்கார்ந்தான். அவனை இப்போ போய் இதை எல்லாம் பேசி காயப்படுத்தணுமா?" என திட்டுகிறார். "இதை நீங்க எல்லாரும் சொல்லி இருக்கணும். அதை சொல்லாம அவனை ஏத்திவிட்டு கிட்டே இருந்தா அவன் இப்படியே தான் இருப்பான்" என சொல்லிவிட்டு செல்கிறாள்.

ரூமுக்கு சென்ற எழில் பாட்டி பேசிடியதை நினைத்து கண்கலங்குகிறான். அப்போது அமிர்தா உள்ளே வரவும் எந்த கவலையும் இல்லாதது போல சமாளிக்கிறான் எழில். பாட்டி பேசியதை நினைத்து எனக்கு எந்த கவலையும் இல்லை. அதை நினைத்து நான்  வருத்தப்படவும் இல்லை. நான் சோம்பேறி தனமாக எல்லாம் வேலைக்கு போகாம இல்லை. சின்ன வயசுல இருந்தே எனக்கு டைரக்டர் ஆகணும் என்பது தான் கனவு. நான் முயற்சி பண்ணிகிட்டே தான் இருக்கேன். ஆனால் என்னால் சாதிக்க முடியவில்லை" என எழில் சொல்ல "நான் மட்டும் உங்க கல்யாணத்தை வந்து நிறுத்தாமல் இருந்து இருந்தா நீங்க அந்த வர்ஷினியை கல்யாணம் பண்ணி இன்னிக்கு உங்கள் இலட்சியத்தை அடைந்து இருக்கலாம்" என்கிறாள்.

"என்னை நானே ஏமாத்துக்கிட்டு, அந்த பொண்ணு, உன்னை எல்லாரையும் ஏமாத்திட்டு சந்தோஷமா வாழ்ந்து இருக்க முடியுமா? அப்படி ஒரு வாழ்க்கைக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. நிச்சயம் ஒரு நாள் நான் ஜெயிப்பேன். அப்போ பாட்டி என்னை நினைத்து பெருமையாக சொல்லுவாங்க. அதுக்கு அப்புறம் நம்ம ஒரு குழந்தை இல்ல பத்து குழந்தை கூட பெத்துக்கலாம்" என்கிறான் எழில்.

 

Baakiyalakshmi serial August 7 : பாக்கியாவை பழிவாங்க கோபிக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்... எழிலை காயப்படுத்தி பேசும் ஈஸ்வரி... 


கோபியும் செந்திலும் பாரில் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தார்கள். பாக்கியாவை எப்படியாவது பழிவாங்கிய தீருவேன் என செந்திலிடம் சொல்லிக்கொண்டு இருகிறார் கோபி.  அப்போது எதேச்சையாக செந்தில் தன்னுடைய பழைய நண்பர் ஒருவரை சந்திக்கிறார். கோபிக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் செந்தில். பேசி கொண்டே இருக்கும் போது செந்திலின் அந்த நண்பரும் ரெஸ்டாரண்ட் வைத்து இருந்ததை பற்றி சொல்கிறான். தன்னால் ரெஸ்டாரண்டை சரியாக பார்த்துக் கொள்ள முடியாததால் அதை வாடகைக்கு விட்டதை பற்றி சொல்கிறார். 

பேச்சு வாக்கில் அது தான் பாக்கியா நடத்தும் ரெஸ்டாரண்ட் என்பது கோபிக்கு தெரியவருகிறது. எப்படியாவது பாக்கியாவிடம் இருந்து அந்த ரெஸ்டாரெண்ட்டை பறிக்க வேண்டும் என செந்திலின் நண்பரை குழப்பி விடுகிறார். ஆனால் அவரோ என்னால் முடியாது என சொல்லிவிடுகிறார். கோபி அவருடைய போன் நம்பரை வாங்கி கொண்டு பின்னர் நிறைய விஷயங்கள் பேசலாம் என சொல்கிறார். செந்திலுக்கு கோபியின் பிளான் புரிந்துவிட்டது. கோபி சந்தோஷத்தில் கிளம்பி விடுகிறார். இது தான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் கதைக்களம்.  

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget