மேலும் அறிய

Siragadikka Aasai : முத்துவை வாழ்த்தி பேசும் தருணம்... யார், என்ன சொன்னாங்க தெரியுமா? சிறகடிக்க ஆசை அப்டேட்

Siragadikka Aasai : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

'சிறகடிக்க ஆசை' (Siragadikka Aasai) சீரியல் இன்றைய (மே 20) எபிசோடில் மீனா முத்து திருமண நாள் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஸ்ருதியும் ரவியும் சேர்ந்து மீனா முத்துவுக்கு பரிசு ஒன்று கொடுக்கிறார்கள். இரண்டாவது முறையாக மீனா முத்து கோயிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பரிசாக கொடுத்ததை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்.

Siragadikka Aasai : முத்துவை வாழ்த்தி பேசும் தருணம்... யார், என்ன சொன்னாங்க தெரியுமா? சிறகடிக்க ஆசை அப்டேட்

மீனா முத்துவின் இந்த முதல் ஆண்டு திருமண வாழ்க்கை குறித்து அனைவரும் என்ன நினைக்கிறார்கள் என அவர்களை வாழ்த்தி பேச சொல்லி ஸ்ருதி சொல்கிறாள். முதல் மனோஜ் தான் பேசுகிறான். "என்னால தான் இவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தது. இல்லைனா இவனுக்கு எல்லாம் யார் பொண்ணு கொடுத்து இருப்பா. எனக்கு தான் நீங்க இரண்டு பெரும் நன்றி சொல்லணும்" என்கிறான். அடுத்ததாக பேசிய ரோகிணி "ஒரு கணவனை மாற்ற வேண்டிய கடமை மனைவிகிட்ட தான் இருக்கு. முத்து மரியாதையா பேசினதே கிடையாது. அதை மீனா கண்டிப்பதும் இல்ல. அடுத்த வருஷமாவது அவர் திருந்தி இருப்பாரான்னு பார்க்கலாம்" என்கிறாள்.

மீனா முத்து பற்றி ரவி பேசுகையில் " இத்தனை வருஷம் நான் பார்த்த முத்துவுக்கும் இப்போ நான் பாக்குற முத்துவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இது எல்லாத்துக்குமே அண்ணிதான் காரணம். அவங்க இரண்டு பேரும் சரியான ஜோடி" என்கிறான். ஸ்ருதி பேசுகையில் "எனக்கும் ரவிக்கும் கல்யாணம் நடந்ததுக்கு முக்கியமான காரணம் மீனா தான். முத்து மாதிரி கோபப்படறவரோட வாழறது ரொம்ப கஷ்டம். ஆனா மீனா அவரை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்குறாங்க. அவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்" என சொல்லி மீனாவை போய் கட்டிப்பிடித்து கொள்கிறாள் ஸ்ருதி.

Siragadikka Aasai : முத்துவை வாழ்த்தி பேசும் தருணம்... யார், என்ன சொன்னாங்க தெரியுமா? சிறகடிக்க ஆசை அப்டேட்
அடுத்ததாக பேசிய விஜயா "ஜாதிக்கு ஏத்த மூடி. முதல நான் இவளை என்னாவொன்னு நினைச்சேன் ஆனா மீனா சரியான ஆளு தான். எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அதை எல்லாம் தாண்டி மேல போயிட்டே இருக்கா. ஒரு நாள் ஸ்கூல் பசங்க போல அடிச்சுப்பாங்க உடனே காந்தம் போல ஒட்டிக்குவாங்க" என தன்னையே அறியாமல் மீனாவை பற்றி பெருமையாக பேசுகிறாள் விஜயா.

அண்ணாமலை பேசுகையில் "பிடிக்காத இரண்டு பேருக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்துது. ஆனா நான் செய்த நல்ல விஷயமா இவங்க கல்யாணத்தை பார்க்குறேன். பொருத்தமான ஜோடி. கணவன் மனைவி இவர்களை போல தான் வாழ வேண்டும்" என்கிறார். முத்துவும் மீனாவும் இன்று போல் என்றும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என பாட்டி வாழ்த்துகிறார்.

அடுத்ததாக மீனா பற்றி முத்து பேசுகையில் "முதலில் எங்க இரண்டு பேருக்கும் செட் ஆகவே இல்லை. என்னை முரடன் குடிகாரன் இப்படி தான் சொல்லுவாங்க. ஆனா மீனா தான் என்னை வித்தியாசமா பார்த்தா. அவளுக்காக என்னை மாறவைச்சா. அவளுடன் வாழ்வது புது அனுபவமாக இருக்கிறது. நல்ல விஷயம் சொன்ன கேட்டுக்குவேன்" என்கிறான்.

மீனா முத்து பற்றி பேசுகையில் "கோபத்தில் பேசுவாரே தவிர மனசில் எதுவுமே வைச்சுக்கமாட்டார்.  பாசம் வைச்சவங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். நான் நினைச்சதை விட ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு அவர் தான் ஒரு அடையாளம் கொடுத்தார்.

இந்த கோபம் சில பழக்கம் எல்லாம் பாதியில வந்தது. அதுக்கு பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்கு. அதனால தான் அவர் வாழ்க்கை மாறி இருக்கு. அது என்னனு இதுவரைக்கும் அவர் என்கிட்ட சொல்லல. அதை என்னைக்கு எனக்கு சொல்றாரோ அன்னிக்கு தான் அவர் என்னை முழுசா பொண்டாட்டியா ஏத்துக்கிட்டார் என அர்த்தம்" என மீனா சொல்ல முத்து, மனோஜ் மற்றும் விஜயா முகமே மாறி விடுகிறது.

மீனாவோட அம்மா மீனா முத்து பற்றி பேச வர அந்த நேரத்தில் சத்யா வருகிறான். அவனை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இதுதான் இன்றைய எபிசோடுக்கான கதைக்களம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
Embed widget