Thalapathy Vijay: விஜயின் முதல் ரசிகர் மன்ற தலைவரின் பரிதாப நிலைமை.. பாலாஜி பிரபு பகிர்ந்த தகவல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நாளில் இருந்தே அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது

விஜயின் ஆரம்ப காலக்கட்டத்தில் அவருடன் பயணித்த யாருமே இப்போது இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டார்கள் என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நாளில் இருந்தே அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. சினிமாவில் யாருக்கும் உதவாதவர், தன் உதவியாளரை அடிப்பவர் என அடுத்தடுத்து குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, நான் தயாரித்த விஷ்ணு படத்தில் நடிக்கும்போது விஜய்க்கும் அவருடைய அப்பாவுக்கும் நிறைய பிரச்னை வரும். 1994 காலக்கட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு விஷயத்தை சொன்னால் விஜய் அதை வேறு மாதிரி கையாள்வார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விடுவார். இதெல்லாம் ரொம்ப ஆணவத்தின் உச்சம் என சொல்லலாம். இதெல்லாம் ஒரு தயாரிப்பாளராக எங்களுக்கு பெரிய தலைவலி. எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜய்க்கும் ஏகப்பட்ட பிரச்னை வரும் என்ற நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரச்னையை தீர்ப்பவராக அவரின் அம்மா ஷோபா வருவார்.
அவர் தான் விஜயை சமாதானப்படுத்தி அழைத்து வருவார். விஜய் யாரிடமும் பெரிதாக பேச மாட்டார் என சொல்வார்கள். ஆனால் தனக்கு ஒரு விஷயம் உடன்படவில்லை என்றால் அவரின் பழக்க வழக்கம் எல்லாம் வேறு மாதிரி இருக்கும். சமீபத்தில் கூட விஜயின் உதவியாளராக இருந்த செல்வம் என்பவர் விஜய் தன்னை அடித்ததாக வேதனையுடன் குறம் சாட்டியிருந்தார்.
திமிர்த்தனமான ஆட்கள் தான் இப்படி பண்ணுவாங்க. அதேபோல் விஜய்யின் முதல் ரசிகர் மன்றத்தின் தலைவராக விஜய் ராகவன் என்பவர் இருந்திருக்கிறார். ரசிகர் மன்ற தலைவராக இருந்த அவர் விஜயை ஊர் ஊராக கூட்டிச்சென்று விழா நடத்தியவர். ஒரு கட்டத்தில் காரணமே இல்லாமல் வெளியே அனுப்பிச்சிட்டாங்க. அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இப்போது டீக்கடை வச்சிருக்கார்.
அதன்பிறகு ரவிராஜா ரசிகர் மன்றத்தின் செயலாளர், ஏசி ராஜா என்பவர் இணை செயலாளராக இருந்தார். அவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை. ரசிகர் மன்றத்தில் மூத்த நிர்வாகிகளுக்கு விஜய் வீடு இருந்த காவேரி தெரிவில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் ஏசி ராஜாவின் அப்பா, அம்மா, மனைவி மற்றும் கைக்குழந்தையை வழக்கறிஞரை வைத்து விஜய் விரட்டியடித்தார்.
அதில் அஜித், ரஜினி போன்றோர் தங்கள் உதவியாளர்களுக்கு தேவையானவற்றை செய்தி கொடுத்திருக்கிறார்கள். விஜய்க்கு இது நன்றாகவே தெரியும். அந்த வகையில் தனிப்பட்ட உதவியாளராக இருந்த பி.டி.செல்வகுமார் கூட வெளியேற்றப்பட்டார். அவர் விஜயை பற்றி சொல்ல பல ரகசியங்கள் இருக்கு. ஆனால் எதையும் வெளியே சொல்லக்கூடாது என கூறுகிறார்.
விஜய் யாருன்னே தெரியாத ஆரம்ப காலக்கட்டத்தில் அவருடன் இருந்தவர்கள் இப்போது இல்லை. தன்னுடைய உதவியாளர் செல்வம் தன் மகள் திருமணத்திற்கு பத்திரிக்கை வைத்து அழைத்தும் கூட ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஆனால் நடிகர் கிங்காங் தன் மகள் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க கன்னட நடிகர் சிவராஜ்குமார் வீட்டிற்கு சென்றபோது அப்போதே அவர் ரூ.50 ஆயிரம் கொடுத்து உதவினார். விஜய்க்கு நம்மிடம் பணம் இருக்கு. அதனால் இப்படியெல்லாம் செய்யலாம் என்கிற மனப்பான்மை காரணமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.























