அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
காதல் உறவு தனது சினிமா பயணத்திலும் தலையீடு செய்ததாகவும், ‘டிராகன்’ படத்தை புரமோட் செய்ய முடியாதது குறித்தும் அனுபமா பரமேஸ்வரன் பேசியுள்ளார்.

காதல் உறவில் தான் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் தொடர்ந்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த உறவு தனது தொழிலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அதிலிருந்து மீண்டு வந்த பிறகே தனது அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டிராகன் படத்தை ப்ரோமோட் செய்யவிடவில்லை
தனது தொழிலில் ஏற்பட்ட தாக்கம் குறித்து அனுபமா, “என்னுடைய தொழிலில் நான் பல விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. ‘Dragon’ படத்தை ஏன் புரமோட் செய்யவில்லை? அது என்னுடைய கேரியரில் மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்று. நான் பல திட்டங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது.
என்னுடைய தொழிலில் எனக்கிருந்த கட்டுப்பாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையீடு இருந்தது. எல்லாவற்றிலும் தலையீடு இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
அந்நியன் கூட இருக்க மாதிரி இருக்கும்
நார்சிஸிஸ்டிக் நபருடன் இருப்பது எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கும் என்பதை விளக்கிய அனுபமா, “ இதை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அந்நியன் கூட இருக்க மாதிரி இருக்கும். ஒரு நாள் அவர்கள் ரெமோ மாதிரி இருப்பார்கள். இன்னொரு நாள் அந்நியன் மாதிரி இருப்பார்கள். ஒரு நாள் அந்த நபர் என் வாழ்க்கையில் இருப்பது எவ்வளவு அதிர்ஷ்டம் என்று நினைப்பேன். ‘இது உண்மையா? இது கனவா?’ என்று கூட தோன்றும். அடுத்த நாளே, அதே நபர் உங்களை காயப்படுத்தும்போது, நீங்கள் எவ்வளவு வேதனையில் இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பார். அதன்பிறகு அடுத்த நாளே மன்னிப்பு கேட்டு, அழுது, கெஞ்சி, மீண்டும் இதுபோல் நடக்காது என்று உறுதியளிப்பார். பின்னர் மீண்டும் அதே லவ் பாம்பிங் தொடங்கும். இப்படியே அந்தச் சுழற்சி மீண்டும் மீண்டும் நடக்கும். ஆரம்பத்தில் அது காதல் போலத் தெரியும். ஆனால் பின்னர் அந்த நபரை உங்கள் முன்னுரிமையாக மாற்றுவார்கள். அது attachment ஆகி, இறுதியில் addiction ஆகிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















