மேலும் அறிய

Neethiyin Marupakkam: விஜயகாந்த்-எஸ்.ஏ.சி.,யின் மறுபக்கத்தை காட்டிய நீதியின் மறுபக்கம் வெளியான நாள் இன்று!

Neethiyin Marupakkam: ஒரே இயக்குனரிடம் 17 படங்கள் நடித்த பெருமையும், எஸ்.ஏ.சி-விஜயகாந்த் கூட்டணிக்கே சேரும். அந்த வகையில் 37 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வெளியான திரைப்படம் ‛நீதியின் மறுபக்கம்’

புரட்சி இயக்குனர் என்கிற அடைமொழியில் இருந்து, விஜய்யின் அப்பா என்கிற பெயர் வந்ததால், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முந்தைய படைப்புகளை இன்றைய தலைமுறை மறந்திருக்கும். தன் கருத்துக்களை அழுத்தமாக கூறும் வெகுசில இயக்குனர்களில் எஸ்.ஏ.சி.,யும் ஒருவர், அதனால் தான் அவர் புரட்சி இயக்குனர் என்று அழைக்கப்பட்டார். 

ராமேஸ்வரத்தில் பிறந்து, சினிமா மோகத்தில் சென்னை வந்து , உதவியாளராகி, உதவி இயக்குனராகி, இயக்குனராகி, தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவின் தந்தையாகிய எஸ்.ஏ.சி,யின் ஆரம்ப கால பயணங்கள், புரட்சி கலைஞர் விஜயகாந்த் உடனே இருந்தது. ஒரே இயக்குனரிடம் 17 படங்கள் நடித்த பெருமையும், எஸ்.ஏ.சி-விஜயகாந்த் கூட்டணிக்கே சேரும். 

புரட்சி இயக்குனர்-புரட்சி கலைஞர் கூட்டணியில் குற்றம் குறைகளை தெறிக்க தெறிக்க பேசிய படங்கள் வேறு எதுவுமே இல்லை. அப்படி, அந்த இருவரின் கூட்டணியில் 1985 செப்டம்பர் 27 இதே நாளில் வெளியானது நீதியின் மறுபக்கம். எஸ்.ஏ.சி.-விஜயகாந்த் கூட்டணியில் பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படம். அதே போல, இளையராஜாவின் இசையில் இன்றும் கேட்கப்படும் சுவையான பாடல்களை கொண்ட திரைப்படம். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KTVTamil (@ktvtamil_offl)

ராதிகா, வடிவுக்கரசி, வி.கே.ராமசாமி உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம், 2 மணி நேரம் 1 நிமிடங்கள் ஓடும் திரைப்படமாகும். அத்திரைப்படத்தில் இடம் பெற்ற ‛மாலைக்கருக்கலில்...’ பாடல், கேட்க கேட்க இனிமையானது. விவி கிரியேஷன்ஸ் சார்பில், ஷோபா சந்திரசேகர் தயாரித்த இத்திரைப்படம், ரசிகர்களாலும் திரைபிரபலங்களாலும் பாராட்டு பெற்றது. 

நீதியின் மறுபக்கம் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பகிர்ந்திருந்தார். இதோ அந்த பேட்டி...

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deeya Sashi Rekha (@deeyasashirekha)

"அப்போது ராதிகா, விஜயகாந்த் நடித்த 'நீதியின் மறுபக்கம்' திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து மேட்டுப்பாளையத்தில் தங்கியிருந்தோம். எப்போதும் ஷூட்டிங்கின் போது பகல் நேரத்தில் அவர்களை பயங்கரமாக வேலை வாங்கிக்கொண்டிருப்பேன், திட்டிக்கொண்டிருப்பேன். ஏன்னா 81ல இயக்குனர் ஆகுறேன், 90ல 55 படம் இயக்கிவிட்டேன். சராசரியாக வருடத்திற்கு 5,6 படங்கள் இயக்குவேன், அதற்கெல்லாம் காரணம் இவங்கதான். இவங்கள அப்படி வேலை வாங்கித்தான் அவ்வளவு படங்கள் சாத்தியம் ஆனது. அப்படி இருக்கும்போது சாயும்காலம் ஆனால் கொஞ்சம் ஜாலியா இருப்போம். ஜாலின்னா நீங்க புரிஞ்சிக்கணும்…(மது பார்ட்டி) அப்போ விஜயகாந்த் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கலாட்டா பண்ணுவாரு. ஷூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் உள்ள ஒரு வாழ்க்கை எங்களுக்கெல்லாம் ரொம்ப ஜாலியா இருக்கும். இதுல செந்தில(உதவி இயக்குனர்) ரொம்ப திட்டுவேன், அதை எல்லாம் மனசுல வச்சுக்கிட்டு, அன்னைக்கு இரவு கொஞ்சம் அதிகமா போயிடுச்சு… அதிகமானதும் விஜயகாந்த் அவரிடம் கேட்கிறார், 'எப்புட்றா இவர்ட்ட வேலை செய்யுற?'ன்னு… அப்போது செந்தில் என்னை திட்ட ஆரம்பிக்கிறார், அதில் இல்லாத கெட்டவார்த்தை இல்லை. 'அவன் கெடக்குறான் ஒருத்தன்… ஒருநாள் நான் டைரக்டர் ஆகி, அவன அசிஸ்டண்டா வச்சு நான் வங்குறேன்டா வேலை' ன்னு என்னென்னமோ வார்த்தைகள் எல்லாம் பேசுகிறார். அந்த வார்த்தைகள் எல்லாம் சொல்ல கூடாது, சென்சார் ஆகிடும்… அவர் அப்போது பேசியதை எல்லாம் சிறிய விடியோ கேமரா வைத்து விடியோ எடுத்துவிட்டோம். அடுத்தநாள் ஷூட்டிங், மானிட்டர் வருது, விஜயகாந்த் என்ன பண்ராருன்னா, அந்த மானிட்டர்ல முன்னாடி நாள் எடுத்த கேசட்ட போட்றாரு. போட்டுட்டு, செந்தில் இங்க வா, இப்படிதான் இந்த பாட்டு ஷூட் பண்ண போறோம், இத பாத்துக்கன்னு கூப்புடறாரு. அவர் வந்ததும் எல்லாரும் சேர்ந்து அவர் தோளை பிடிச்சு அழுத்தி உக்கார வைக்குறோம். உக்கார வச்சா விடியோ ஆரம்பிக்குது, செந்தில் அய்யோ அய்யோ ன்னு கத்துறார். அப்படி ஒரு நட்பு முறையில் தான் நாங்கள் பழகினோம், அப்படிதான் இவ்வளவு திரைப்படங்கள் செய்தோம். அவர் மீது கோபம் எதுவும் வரவில்லை, அது அந்த மூட்ல பேசுனது அவ்வளவுதான்"

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு ஆதரவாக பேசிய ரவி மோகன்..இன்ஸ்டாகிராமில் பொளந்து கட்டிய ஆர்த்தி
விஜய்க்கு ஆதரவாக பேசிய ரவி மோகன்..இன்ஸ்டாகிராமில் பொளந்து கட்டிய ஆர்த்தி
அரசன் படத்திற்கு இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவில்லை..விஜய் சேதுபதி கொடுத்த ஷாக்
அரசன் படத்திற்கு இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவில்லை..விஜய் சேதுபதி கொடுத்த ஷாக்
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
Made In Korea Review : பிரியங்கா மோகன் நடித்துள்ள மேட் இன் கொரியா படம் எப்படி இருக்கு...இதோ விமர்சனம்
Made In Korea Review : பிரியங்கா மோகன் நடித்துள்ள மேட் இன் கொரியா படம் எப்படி இருக்கு...இதோ விமர்சனம்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget