மேலும் அறிய

Vishal | "நீதி வென்றுவிட்டது" : விஷால் போட்ட எமோஷ்னல் போஸ்ட்..!

நடிகர் விஷால் மீது லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம், மருது. இந்த படத்தைத் தயாரிப்பதற்காகக் கோபுரம் பிஸிமிஸ் நிறுவனத்திடம் விஷால் கடனாக 21 கோடியே 29 லட்சம் ரூபாய் பெற்றிருந்தார். அந்த கடனை திருப்பி தர முடியாததால் விஷால், லைகா நிறுவனத்தை அணுகி,  தன்னுடைய கடனை அடைக்குமாறு, கோரிக்கை வைத்திருந்தார். 

அவரது கோரிக்கை ஏற்ற லைகா நிறுவனம், கோபுரம் பிஸிமிஸ் நிறுவனத்திற்கு, கடனை அடைத்தது. மேலும் தங்களது கடன் தொகையான 21 கோடியே 29 லட்சத்திற்கு, 30 விழுக்காடு வட்டியை செலுத்துமாறு விஷாலிடம் தெரிவித்திருந்தது. இதனை ஏற்ற விஷால் 7 கோடி ரூபாய் செலுத்திவிட்டு மீதமுள்ள பணத்தை 2020 ஆம் ஆண்டு துப்பறிவாளன் 2, திரைப்படம் வெளியானவுடன் செலுத்தி விடுவதாகக் உறுதி அளித்துள்ளார். 

ஆனால் சொன்ன நேரத்தில் விஷால் பணத்தைக் கொடுக்காததால் வட்டியுடன் சேர்த்து, 30 கோடியே 5 லட்சத்து 68 ஆயிரத்து 137 ரூபாய் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என கூறி லைகா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று (ஆக.18) நீதிபதி ஜி.ஜெயசந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, துப்பறிவாளன் 2 படம் வெளியாகும் முன்பே லைகா நிறுவனம் விஷாலிடம் முழு தொகையையும், கேட்டது செல்லாத ஒன்று. ஆகையால் லைகா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து, விஷாலுக்கு அபராதத்துடன் 5 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் கூறி
வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் . அதில், "நீதி வெல்லும். உண்மை வெல்லும் என்பதை நான் எப்போதும் நம்புவேன். லைகா நிறுவனம் எனக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு பொய் என்பதால்,  சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபது செய்துள்ளது. ஒரு பொய்யான வழக்கை முன்வைத்து என்னைத் துன்புறுத்தியதற்காக, லைகா நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி வெளியான திரைப்படம், சக்ரா. இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய  ஆனந்தன் இப்படத்தை இயக்கி உள்ளார். விஷால் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரித்து, நடித்தி இருந்தார். இந்த படத்தை வெளியிடக் கூடாது என லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash Video: கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
Ahmedabad Plane Crash: குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. 242 பயணிகளின் நிலை என்ன?
Ahmedabad Plane Crash: குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. 242 பயணிகளின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash Video: கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
Ahmedabad Plane Crash: குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. 242 பயணிகளின் நிலை என்ன?
Ahmedabad Plane Crash: குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. 242 பயணிகளின் நிலை என்ன?
NEET UG 2025: திட்டமிட்டபடி வெளியாகுமா நீட் தேர்வு முடிவுகள்? எப்போது? காண்பது எப்படி?
NEET UG 2025: திட்டமிட்டபடி வெளியாகுமா நீட் தேர்வு முடிவுகள்? எப்போது? காண்பது எப்படி?
என்னது… 90 டிகிரியில் பாலமா? இனி டிராபிக்கே இருக்காது- 3 லட்சம் பேர் பயன்! எங்கே?
என்னது… 90 டிகிரியில் பாலமா? இனி டிராபிக்கே இருக்காது- 3 லட்சம் பேர் பயன்! எங்கே?
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
Embed widget