மேலும் அறிய

Jacqueline Fernandez : 200 கோடி பணமோசடி வழக்கு.. நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..

அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜாக்குலின் , வழக்கறிஞர்களைப்போலவே வெள்ளை சட்டையும் , கருப்பு பேண்ட்டும் அணிந்துகொண்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்.

200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு நீதிமன்றம் 50,000 பிணையில் இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்தது அம்பலமானது. இந்த நிலையில் தொழிலதிபர் ஒருவரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதில் ஒரு குற்றவாளியாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் சேர்க்கப்பட்டர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குடும்பத்தை சேர்ந்தவர் என கூறிக்கொண்டு சுகேஷ் ஜாக்குலினுடன் பழகியிருக்கிறார். அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், சுகேஷ் தனது இன்னொரு காதலியான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ52 லட்சம் மதிப்புள்ள குதிரையையும், ரூ9 லட்சம் மதிப்புள்ள பாரசீக பூனையையும்,  10 கோடி ரூபாயையும்  கொடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடிகைக்கு பிடிவாரண்ட் எதுவும் வழங்காத நிலையில் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த இந்த வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் பணமோசடி தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் ஒரு துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதற்கிடையில், அதே வழக்கை விசாரிக்கும் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) சார்பாக ஒரு வழக்கறிஞர் ஆஜரானார், ஜாக்குலின் பெர்னாண்டஸ்  ஆகஸ்ட் 29, 2022 அன்று ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார், ஆனால் அவர் ஆஜராகவில்லை, எனவே அவர்களை விசாரணையில் சேருமாறு அவருக்கு  நீதிமன்றம் புதிய சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் ஜாக்குலினின் வழக்கறிஞர், அவர் விசாரணையில் கலந்து கொள்வதாகவும், விசாரணை நிறுவனத்திற்கு ஒத்துழைப்பதாகவும் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து குற்றப்பத்திரிகையை கவனத்தில் கொண்ட நீதிமன்றம், ஜாக்குலினை செப்டம்பர் 26ம் தேதி ஆஜராகுமாறு கூறியிருந்தது. அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜாக்குலின் , வழக்கறிஞர்களை போலவே வெள்ளை சட்டையும் , கருப்பு பேண்ட்டும் அணிந்துக்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்.


Jacqueline Fernandez : 200 கோடி பணமோசடி வழக்கு.. நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..
வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிற்கு 50 ஆயிரம் ரூபாய் பிணையில் , இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டு , அடுத்தகட்ட விசாரணையை இந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. 

Gucci, Hermes, Louis Vuitton ஆகிய விலை உயர்ந்த பிராண்ட்களின் பல்வேறு சொகுசுப் பொருள்களை நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் பரிசளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சுகேஷ் ஜாக்குலிக்கு மினி கூப்பர் கார் ஒன்றையும் வாங்கி பரிசாகத் தந்துள்ளார். மேலும் ஜாக்குலினுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடம் இருந்து ஜாக்குலினுக்குக் கடிதம் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகைகள் மீதான தன் அன்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த சுகேஷின் மாய வலையில் ஜாக்குலினைத் தவிர வேறு யாரும் விழவில்லை எனக் கூறப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Neelira Movie Review : ஈழப்போருக்கு நடுவில் திருமணத்தை நடத்த போராடும் தமிழ் குடும்பம்...நீளிரா திரைப்பட விமர்சனம் இதோ
Neelira Movie Review : ஈழப்போருக்கு நடுவில் திருமணத்தை நடத்த போராடும் தமிழ் குடும்பம்...நீளிரா திரைப்பட விமர்சனம் இதோ
யூத் பட வெற்றிக்காக தயாரிப்பாளர் கருப்பையா கென்னிற்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?
யூத் பட வெற்றிக்காக தயாரிப்பாளர் கருப்பையா கென்னிற்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?
TVK ELECTION CAMPAIGN SONG : மெரள போகுது ஸ்டேட்டு...தவெக பிரச்சார பாடல் லிரிக்ஸ் இதோ
TVK ELECTION CAMPAIGN SONG : மெரள போகுது ஸ்டேட்டு...தவெக பிரச்சார பாடல் லிரிக்ஸ் இதோ
Ramayana Glimpse : 4000 கோடி செலவில் ஹாலிவுட் தரத்தில் வெளியான ராமாயணா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ
Ramayana Glimpse : 4000 கோடி செலவில் ஹாலிவுட் தரத்தில் வெளியான ராமாயணா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget