மேலும் அறிய

Jacqueline Fernandez : 200 கோடி பணமோசடி வழக்கு.. நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..

அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜாக்குலின் , வழக்கறிஞர்களைப்போலவே வெள்ளை சட்டையும் , கருப்பு பேண்ட்டும் அணிந்துகொண்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்.

200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு நீதிமன்றம் 50,000 பிணையில் இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்தது அம்பலமானது. இந்த நிலையில் தொழிலதிபர் ஒருவரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதில் ஒரு குற்றவாளியாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் சேர்க்கப்பட்டர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குடும்பத்தை சேர்ந்தவர் என கூறிக்கொண்டு சுகேஷ் ஜாக்குலினுடன் பழகியிருக்கிறார். அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், சுகேஷ் தனது இன்னொரு காதலியான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ52 லட்சம் மதிப்புள்ள குதிரையையும், ரூ9 லட்சம் மதிப்புள்ள பாரசீக பூனையையும்,  10 கோடி ரூபாயையும்  கொடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடிகைக்கு பிடிவாரண்ட் எதுவும் வழங்காத நிலையில் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த இந்த வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் பணமோசடி தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் ஒரு துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதற்கிடையில், அதே வழக்கை விசாரிக்கும் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) சார்பாக ஒரு வழக்கறிஞர் ஆஜரானார், ஜாக்குலின் பெர்னாண்டஸ்  ஆகஸ்ட் 29, 2022 அன்று ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார், ஆனால் அவர் ஆஜராகவில்லை, எனவே அவர்களை விசாரணையில் சேருமாறு அவருக்கு  நீதிமன்றம் புதிய சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் ஜாக்குலினின் வழக்கறிஞர், அவர் விசாரணையில் கலந்து கொள்வதாகவும், விசாரணை நிறுவனத்திற்கு ஒத்துழைப்பதாகவும் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து குற்றப்பத்திரிகையை கவனத்தில் கொண்ட நீதிமன்றம், ஜாக்குலினை செப்டம்பர் 26ம் தேதி ஆஜராகுமாறு கூறியிருந்தது. அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜாக்குலின் , வழக்கறிஞர்களை போலவே வெள்ளை சட்டையும் , கருப்பு பேண்ட்டும் அணிந்துக்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்.


Jacqueline Fernandez : 200 கோடி பணமோசடி வழக்கு.. நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..
வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிற்கு 50 ஆயிரம் ரூபாய் பிணையில் , இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டு , அடுத்தகட்ட விசாரணையை இந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. 

Gucci, Hermes, Louis Vuitton ஆகிய விலை உயர்ந்த பிராண்ட்களின் பல்வேறு சொகுசுப் பொருள்களை நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் பரிசளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சுகேஷ் ஜாக்குலிக்கு மினி கூப்பர் கார் ஒன்றையும் வாங்கி பரிசாகத் தந்துள்ளார். மேலும் ஜாக்குலினுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடம் இருந்து ஜாக்குலினுக்குக் கடிதம் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகைகள் மீதான தன் அன்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த சுகேஷின் மாய வலையில் ஜாக்குலினைத் தவிர வேறு யாரும் விழவில்லை எனக் கூறப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Made In Korea Review : பிரியங்கா மோகன் நடித்துள்ள மேட் இன் கொரியா படம் எப்படி இருக்கு...இதோ விமர்சனம்
Made In Korea Review : பிரியங்கா மோகன் நடித்துள்ள மேட் இன் கொரியா படம் எப்படி இருக்கு...இதோ விமர்சனம்
Parijatham Serial: கண்ணாமூச்சி ஆடிய காதலன்.. வர்ஷினியை கொல்ல முயற்சித்த ஸ்ரீஜா அப்பா
Parijatham Serial: கண்ணாமூச்சி ஆடிய காதலன்.. வர்ஷினியை கொல்ல முயற்சித்த ஸ்ரீஜா அப்பா
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
மீண்டும் எஞ்சாய் எஞ்சாமி பாடல் சர்ச்சை...ஓப்பனாக திட்டிக்கொள்ளும் சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு
மீண்டும் எஞ்சாய் எஞ்சாமி பாடல் சர்ச்சை...ஓப்பனாக திட்டிக்கொள்ளும் சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Embed widget