மேலும் அறிய

Jacqueline Fernandez : 200 கோடி பணமோசடி வழக்கு.. நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..

அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜாக்குலின் , வழக்கறிஞர்களைப்போலவே வெள்ளை சட்டையும் , கருப்பு பேண்ட்டும் அணிந்துகொண்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்.

200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு நீதிமன்றம் 50,000 பிணையில் இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்தது அம்பலமானது. இந்த நிலையில் தொழிலதிபர் ஒருவரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதில் ஒரு குற்றவாளியாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் சேர்க்கப்பட்டர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குடும்பத்தை சேர்ந்தவர் என கூறிக்கொண்டு சுகேஷ் ஜாக்குலினுடன் பழகியிருக்கிறார். அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், சுகேஷ் தனது இன்னொரு காதலியான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ52 லட்சம் மதிப்புள்ள குதிரையையும், ரூ9 லட்சம் மதிப்புள்ள பாரசீக பூனையையும்,  10 கோடி ரூபாயையும்  கொடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடிகைக்கு பிடிவாரண்ட் எதுவும் வழங்காத நிலையில் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த இந்த வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் பணமோசடி தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் ஒரு துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதற்கிடையில், அதே வழக்கை விசாரிக்கும் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) சார்பாக ஒரு வழக்கறிஞர் ஆஜரானார், ஜாக்குலின் பெர்னாண்டஸ்  ஆகஸ்ட் 29, 2022 அன்று ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார், ஆனால் அவர் ஆஜராகவில்லை, எனவே அவர்களை விசாரணையில் சேருமாறு அவருக்கு  நீதிமன்றம் புதிய சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் ஜாக்குலினின் வழக்கறிஞர், அவர் விசாரணையில் கலந்து கொள்வதாகவும், விசாரணை நிறுவனத்திற்கு ஒத்துழைப்பதாகவும் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து குற்றப்பத்திரிகையை கவனத்தில் கொண்ட நீதிமன்றம், ஜாக்குலினை செப்டம்பர் 26ம் தேதி ஆஜராகுமாறு கூறியிருந்தது. அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜாக்குலின் , வழக்கறிஞர்களை போலவே வெள்ளை சட்டையும் , கருப்பு பேண்ட்டும் அணிந்துக்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்.


Jacqueline Fernandez : 200 கோடி பணமோசடி வழக்கு.. நடிகை ஜாக்குலினுக்கு  இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..
வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிற்கு 50 ஆயிரம் ரூபாய் பிணையில் , இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டு , அடுத்தகட்ட விசாரணையை இந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. 

Gucci, Hermes, Louis Vuitton ஆகிய விலை உயர்ந்த பிராண்ட்களின் பல்வேறு சொகுசுப் பொருள்களை நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் பரிசளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சுகேஷ் ஜாக்குலிக்கு மினி கூப்பர் கார் ஒன்றையும் வாங்கி பரிசாகத் தந்துள்ளார். மேலும் ஜாக்குலினுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடம் இருந்து ஜாக்குலினுக்குக் கடிதம் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகைகள் மீதான தன் அன்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த சுகேஷின் மாய வலையில் ஜாக்குலினைத் தவிர வேறு யாரும் விழவில்லை எனக் கூறப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Embed widget