மாட்டிக்கிட்டாரு மாதம்பட்டி ரங்கராஜ்...டி.என்.ஏ பரிசோதனையில் தெரியவந்த உண்மை
Madhampatty Rangaraj : ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் உண்மையான தந்தை என டி.என்.ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளது

பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா கடந்த ஆண்டு புகாரளித்திருந்தார். தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றியதாக ஜாய் கிரிஸில்டா மகளிர் ஆணையத்தில் புகாரளித்திருந்தார். ஏற்கனவே திருமணமான மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவின் குற்றசாட்டை மறுத்தார். இப்படியான நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜாய் கிரிஸில்டாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஜாய் ராஹா ரங்கராஜ் என பெயரிட்டார். தற்போது ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் உண்மையான தந்தை என டி.என்.ஏ பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா சர்ச்சை
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பாக்கி ஏமாற்றியதாக ஜாய் கிரிஸில்டா பரபரப்பான குற்றசாட்டை முன்வைத்தார். மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி அவருடன் இரண்டு குழந்தைகள் உள்ளன. இப்படியான நிலையில் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜூடன் தனது திருமண புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வீடியோ பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜின் கேடரிங் நிறுவனமான மாதம்பட்டி பாகசாலாவை டேக் செய்து அவர் தொடர்ச்சியாக பதிவுகள் வெளியிட்டு வந்தார். இதனால் தங்களது நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக மாதம்பட்டி தரப்பில் இருந்து ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கவும் இருதரப்பினரிடம் மத்தியஸ்தம் செய்துவைக்க உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி பி.என் பிரகாஷை நியமித்தது.
மரபனு பரிசோதனை முடிவு
தனது வயிற்றில் வளரும் குழந்தை மாதம்பட்டி ரங்கராஜூடையது என்றும் இதனை நிரூபிக்க மாதம்பட்டி ரங்கராஜூக்கு மரபனு பரிசோதனி செய்ய வேண்டும் என ஜாய் கிரிஸில்டா கோரிக்கை வைத்தார். மரபனு பரிசோதனைக்கு மாதம்பட்டி சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜூக்கு மரபனு பரிசோதனை செய்ய சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தடயவியல் துறை மற்றும் ஆயவகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. மாதம்பட்டி ரங்கராஜூக்கு நடத்தப்பட்ட மரபனு பரிசோதனையின் முடிவுகள் இந்த வழக்கில் மத்தியஸ்தம் செய்ய நியமிக்கப்பட்ட பி.என் பிரகாஷிடம் சீல் வைக்கப்பட்ட கவரில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி செந்தில்குமார் தெரிவித்தார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















