மேலும் அறிய

Jailer: எல்லாமே அடமானம்.. தற்கொலை பண்ண தோணுது.. ரஜினி ப்ளீஸ் உதவுங்க.. குமுறும் ஜெயிலர் பட இயக்குநர்..

ஜெயிலர் பட தலைப்பு பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய நிலையை புரிந்து கொள்வார் என தான் நம்புவதாக மற்றொரு ஜெயிலர் படத்தின் இயக்குநர் சக்கிர் மடத்தில் தெரிவித்துள்ளார். 

ஜெயிலர் பட தலைப்பு பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய நிலையை புரிந்து கொள்வார் என தான் நம்புவதாக ஜெயிலர் படத்தின் இயக்குநர் சக்கிர் மடத்தில் தெரிவித்துள்ளார். 

ஜெயிலர் பட தலைப்பில் பிரச்சினை

ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் என்னும் பெயரில் 2 படங்கள் வெளியாகவுள்ளது ரசிகர்களிடையே ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சினை தமிழ் சினிமாவில் அல்ல, மலையாள சினிமா உலகில் எழுந்துள்ளது. 

  • ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 
  • பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் மகன் தியான் சீனிவாசன் நடித்துள்ள படத்திற்கும் `ஜெயிலர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சக்கிர் மடத்தில் இயக்கியுள்ள இப்படம் 1957 காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் ஒருவரை கொல்லத் துடிக்கும் கிரிமினல்களைப் பற்றிய கதை இதுவாகும். 

இதனிடையே கேரளாவில் மட்டும் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என மலையாள ஜெயிலர் படக்குழு கோரிக்கை விடுத்தது. ஆனால் இவர்களின் கோரிக்கையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நிராகரித்ததாக சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் இயக்குநர் சக்கிர் மடத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள நேர்காணலில் ரஜினி தன்னுடைய நிலையை புரிந்து கொள்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

அதே நாள்.. அதே நிகழ்ச்சி 

என்னுடைய ஜெயிலர் பட தலைப்பு 2021 ஆம் ஆண்டு, ரஜினியின் ஜெயிலர் பட தலைப்பு 2022 ஆம் ஆண்டும் பதிவு செய்யப்பட்டது. தமிழில் ஜெயிலர் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்த போது  எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

5 மாதங்களுக்கு முன் நான் ஒரு பிரதிநிதியை அனுப்பி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின்னர் சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த், தென்னிந்திய திரைப்பட சங்கத்திற்கு கடிதம் எழுதினேன். நான் ஒட்டுமொத்தமாக் ஜெயிலர் பட தலைப்பை மாற்ற வேண்டும் என சொல்லவில்லை. கேரளாவில் மட்டும் மாற்றி வெளியிடும்படி கேட்டுக் கொண்டேன். 

என்னுடைய ஜெயிலர் படம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. எங்கள் படம் கேரளாவில் மட்டும் தான் வெளியாகிறது. ரஜினிக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு எல்லோரும் அவரின் படம் பார்க்க தான் செல்வார்கள். இந்த பிரச்சினையால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. நான் தான் படத்தை தயாரித்து இயக்குகிறேன். இதற்காக என் மகள்களின் நகைகள், வீடு உள்ளிட்டவற்றை அடமானம் வைத்துள்ளேன். வெளியிலும் கடன் வாங்கியுள்ளேன். 

முதலில் செப்டம்பரில் தான் படம் வெளியாக முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்டில் ரஜினி படம் வந்தால் நம் படத்துக்கு யார் வருவார்கள் என விநியோகஸ்தர்கள் கேள்வி எழுப்பினர். இது நியாயமான ஒன்று தான். அதனால் தான் ஜெயிலர் படம் இசை வெளியீடு, ரிலீஸ் தேதி அன்றே எனது ஜெயிலர் படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளேன். எனது எதிர்காலமே இதில் தான் அடங்கியுள்ளது, சில நேரங்களில் தற்கொலை செய்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. 

ரஜினி மற்றவர்களின் கஷ்டத்தை புரிந்து கொள்பவர். என்னுடைய நிலைமையையும் புரிந்து கொள்வார் என நினைக்கிறேன்” என சாக்கிர் மடத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Vengenance Review : புகழ்போதை அடிப்படையாக கொண்ட பொலிட்டிக்கல் த்ரில்லர்...வென்ஜன்ஸ் திரைப்பட விமர்சனம்
Vengenance Review : புகழ்போதை அடிப்படையாக கொண்ட பொலிட்டிக்கல் த்ரில்லர்...வென்ஜன்ஸ் திரைப்பட விமர்சனம்
நடிகை ராஷ்மிகா மந்தனா அதிரடி அறிக்கை..இணையத்தில் கசிந்த ஆடியோவால் பரபரப்பு..என்ன அது?
நடிகை ராஷ்மிகா மந்தனா அதிரடி அறிக்கை..இணையத்தில் கசிந்த ஆடியோவால் பரபரப்பு..என்ன அது?
டிக்கெட் போட கூட ஆர்த்திகிட்டதான் காசு கேட்பேன்..மனைவியை மேடையில் புகழ்ந்த சிவகார்த்திகேயன்
டிக்கெட் போட கூட ஆர்த்திகிட்டதான் காசு கேட்பேன்..மனைவியை மேடையில் புகழ்ந்த சிவகார்த்திகேயன்
Lavanya Tripathi: குடும்பத்தை தப்பா பேசுறாங்க.. போலீசுக்கு சென்ற சசிகுமார் பட நடிகை!
Lavanya Tripathi: குடும்பத்தை தப்பா பேசுறாங்க.. போலீசுக்கு சென்ற சசிகுமார் பட நடிகை!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Embed widget