மேலும் அறிய

Mari Selvaraj: "நான் படம் பண்றது யாருக்காக?" மனம் உருகி பேசிய மாரி செல்வராஜ்!

இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய திரைப்படங்கள் யாருக்கானது? அதன் கதைக்களம் என்ன? என்பது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர் கர்ணன், மாமன்னன், வாழை படங்கள் மூலமாக முன்னணி இயக்குனராக முன்னேறியுள்ளார்.

யாருக்காக இந்த படம்?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வாழை படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வாழை படத்தின் வெற்றி விழாவில் பேசிய மாரி செல்வராஜ், “ ஒவ்வொரு படத்திலும் நான் சொல்கிறேன். நான் படம் பண்ணுவதே எனது ஊர்க்காகத்தான் பண்றேன். என் ஊர் மக்களை அங்கிருந்து வெளிய கொண்டுவரத்தான் பண்றேன். எல்லா மேடையிலும் என் ஊர் மக்கள் கொண்டாடப்படுவதும், எல்லா படத்துலயும் அவங்க விருது வாங்குவதை காட்டிலும் எனக்கு என்ன சந்தோஷம் இருக்கப்போது. இது மிகப்பெரிய சந்தோஷம் எனக்கு.

பரியேறும் பெருமாள் அங்கதான் பண்ணேன். கர்ணன் அங்கதான் பண்ணேன். மாமன்னன் அங்கதான் பண்ணேன். வாழை அங்கதான் பண்ணேன். இப்போ பண்ணிக்கிட்டு இருக்குற பைசன் அங்கதான் பண்ணிகிட்டு இருக்கேன். அவ்ளோ கதைகள் இருக்குது. ஏன் இவன் அங்கயே போறானா? அவ்ளோ கதைகள் இருக்குது. அந்த கதையில அவங்க எனக்கு சப்போர்ட் பண்றாங்க.

எளிமையான உண்மை:

பெருசா எல்லாம் ப்ளான் பண்ணல.. எளிமையான உண்மை எங்ககிட்ட இருக்குது. எளிமையான உண்மையை கலையாக்க கஷ்டப்பட்றேன். எளிமையான உண்மையை எடுத்து வைக்குறேன். நான் எடுப்பது எளிமையாதான் எடுப்பேன். ஒரு எளிமையான உண்மை தமிழ் சமூகத்தை எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துது என்பதை படம் ரிலீசான பிறகு புரிஞ்சுக்குறேன். வலியதை விட எளியது மிகப்பெரிய மதிப்பு இருக்கு அப்படிங்குறதை ஒவ்வொரு படத்துல இருந்தும் புரிஞ்சுகுறேன்.

அப்படி எளிமையான கதையை எனக்கு கொடுத்துக்கொண்டே இருக்கக்கூடிய என் ஒட்டுமொத்த மக்களுக்கு, என் கிராம மக்களுக்கு கொடியங்குளம் மக்களுக்கு பக்கத்தில் உள்ள கொல்வராய குறிச்சி, கருங்குளம் என எல்லா மக்களுக்கும் நன்றி சொல்லிக்குறேன். என்னுடைய எல்லா படைப்புலயும் அவங்க இருப்பாங்க.. அவங்கதான் நான். நான்தான் அவங்க. அதுனால ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்றி சொல்லிக்குறேன்”

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்தார். மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படத்தை பொதுமக்கள், ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் பாராட்டினர். தற்போது மாரி செல்வராஜ் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன்  படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், அழகம்பெருமாள், பசுபதி, லால் என பலர் நடிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
IND vs SA  3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
IND vs SA 3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Embed widget