மேலும் அறிய

Director Atlee: ஜவான் படத்தை விட பெரிய சம்பவம் இருக்கு - இயக்குநர் அட்லீ கொடுத்த அப்டேட்

Director Atlee: ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அட்லீ ஜவான் படத்தை விடவும் ப்ளாக் பஸ்டர் படம் தயாராகவுள்ளது எனக் கூறினார்.

ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஜவான் படத்தை விடவும் மிகவும் பிரமாண்டமான படம் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றது. அதற்கான பணிகள் போய்க்கொண்டு உள்ளது என தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அட்லீ, “ அடுத்த தலைமுறைக்கு எது தவறு என்பதைக் சொல்வதற்காகத்தான் எனது படங்களில் வன்முறைக் காட்சிகளை வைக்கின்றேன். ஒரு மருத்துவர் ஊசி போடும்போது நமக்கு வலிக்கத்தான் செய்யும் ஆனால் அது நமது உடலில் இருக்கும் நோயை குணப்படுத்த உதவுவதைப் போல் எனது படங்களில் அடுத்த தலைமுறையினருக்கு எது தவறு எனச் சொல்வதற்காகத்தான் சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட வன்முறைக் காட்சிகளை நான் படமாக்குகின்றேன்.

நான் பான் இந்தியா சினிமா அல்லது தனிப்பட்ட மொழியில் வெளியாகும் சினிமா என நான் எதையும் பார்ப்பது கிடையாது. ஒரே இந்தியாதான். அதேபோல் தென்னிந்திய சினிமா, பான் இந்தியா சினிமா எனவும் நான் பிரித்துப் பார்ப்பதில்லை. கே.ஜி.எஃப் திரைப்படம் ஒரு பான் இந்தியா திரைப்படம் கிடையாது. ஆனால் அந்த படத்திற்குப் பின்னர் நடிகர் யாஷ் குறித்து இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அதேபோல்தான் புஷ்பா திரைப்படத்திற்குப் பின்னர் அல்லு அர்ஜுன் குறித்து இந்தியா முழுவதும் பேசப்பட்டது. லியோ படத்திற்குப் பின்னர் நடிகர் விஜய் குறித்து பேசப்பட்டது. 

நான் ஹிந்தி திரை உலகில் நுழைந்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது. எனது தயாரிப்பில் உருவாகிவரும் பேபி ஜான் திரைப்படம். இந்த படம் கட்டாயம் அனைவருக்கும் பிடிக்கும். இந்த படம் பெற்றோர்களுக்கானது. பெற்றோர்கள் எப்படி குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதை மைய்யப்படுத்தியதாக இருக்கும். 

எனது வாழ்க்கையில் அதிகப்படியான அதிசயங்கள் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த இயக்குநரான ஷங்கரிடம் நான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். நான் அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் உடன் பணியாற்றி உள்ளேன். இப்போது ஷாருக்கானுடன் பணியாற்றி உள்ளேன். 

நீங்கள் ஒரு விஷயத்திற்காக எதாவது மெனக்கெடுகிறீர்கள் என்றால் ஒருநாள் உங்களால் அதனை அடையமுடியும். நான் இப்போது இந்திய சினிமாவில் இயக்குநராக உள்ளேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் அதுதான். எல்லா சூழலிலும் நாம் எதாவது சவாலை எதிர்கொண்டுதான் வருகின்றோம். ஆனால் நாம் அதனை கடந்து வரவேண்டும். சவால் நாம் பிறந்த கணத்தில் இருந்து நம்முடன் இருக்கின்றது. 

ஒரு சாதாரண மனிதன் 300 ரூபாய் செலவு செய்து ஒரு படத்தை பார்க்க வருகிறார். படம் மட்டும் இல்லாமல் அவர் வீட்டில் இருந்து திரையரங்கிற்கு வந்து செல்வதற்கு என மொத்தம் 6 மணி நேரம் ஆகின்றது. இந்த நேரத்திற்கும் அவர் செலுத்தும் 300 ரூபாய்க்கும் நான் உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன் “ இவ்வாறு பேசினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
Embed widget