மேலும் அறிய

பாட்டியோட முடிஞ்சுது.. பாக்யராஜ் சாரை பார்த்தேன்.. அழகன் துரை என்ன செய்கிறார்?

குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ராஜேஷ் குமார் இன்று மிகவும் கஷ்டமான ஒரு சூழலில் சினிமாவில் நடித்த சுவடே இல்லாமல் அல்லல்படுகிறார். 

குழந்தை நட்சத்திரங்களாக மிகவும் பிரபலமாக இருந்த பலருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைந்துவிட்டதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. அந்த வகையில் 80ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு சுட்டி பையனாக மம்மூட்டி, பாக்யராஜ், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் ராஜேஷ்குமார். 
 
'அழகன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நான்கு சிறுவர்கள் நடித்து இருப்பார்கள். இன்று மிகவும் பிரபலமான செலிபிரிட்டிகளாக இருக்கும் ராபர்ட் மாஸ்டர், சுஜிதா, விக்ராந்த் உள்ளிட்டோருடன் மற்றுமொரு சிறுவனாக துரை என்ற கேரக்டரில் நடித்திருந்தவர் ராஜேஷ் குமார். "நம்ம வேற வீட்ல பொறந்து இருக்கலாம் டா..." என அவர் அப்படத்தில் பேசும் வசனம் இன்று வரை மீம் கிரியேட்டர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. 
 
பாட்டியோட முடிஞ்சுது.. பாக்யராஜ் சாரை பார்த்தேன்.. அழகன் துரை என்ன செய்கிறார்?
 
மல்லுவேட்டி மைனர், தாலாட்டு கேக்குதம்மா, கேளடி கண்மணி, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குழந்தை ஆர்டிஸ்டாக கலக்கிய ராஜேஷ் குமார் நடிப்பு பயணம் 10 வயதுடன் முடிந்து விட்டது. அவருடைய பாட்டி தாலாட்டு கேக்குதம்மா, ரோஜா உள்ளிட்ட பாடல் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரின் மூலம்  சினிமா துறையில் நுழைந்த ராஜேஷுக்கு பாட்டியின் இறப்பு சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. 
 
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ராஜேஷ் குமார் தான் சினிமாவில் இருந்து வந்த பிறகு அவர் பட்ட கஷ்டங்கள் குறித்து மிகுந்த மனவேதனையுடன் பேசி இருந்தார். அவர் பேசுகையில் பத்து வயசுடன் சினிமா வாழ்க்கை முடிந்தது. சென்னையை விட்டு கோவைக்கு வந்துவிட்டோம். பாட்டி இருந்து இருந்தா என்னோட லைஃப் வேற மாதிரி இருந்து இருக்கும். அதுக்கு அப்புறம் சினிமாவில் நடிக்க நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அப்போது எனக்கு அந்த வயசும் இல்லை. ஒரு வேலை நான் அவர்களை தொடர்புகொள்ள முயற்சி செய்து இருந்தால் வாய்ப்பு கிடைத்து இருக்கலாம் என தோணும். நடிக்கணும் என்ற ஆசை எல்லாம் இருக்கிறது ஆனா அதெல்லாம் இப்போ நடக்குமா என எனக்குள் ஒரு யோசனை அதனால நானே என்னை தேத்திக்கிட்டேன். 
 
பாக்யராஜ் சாரை ஒரு முறை தெரிந்தவர் மூலம் போய் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு என்னை ஞாபகம் இருக்காது என நினைச்சேன் ஆனா  ஞாபகம் வைத்திருந்தார். பாட்டி பத்தி, கல்யாணம் பத்தி எல்லாம் விசாரிச்சார். கல்யாணம் ஆகாம இருந்திருந்தா சென்னையிலேயே உனக்கு ஒரு வேலை கொடுத்து இருப்பேன். உன்னோட நம்பர் கொடுத்துட்டு போ. உன்னை கூப்பிடுறேன் அப்படின்னு சொன்னார். அதோட அவ்வளவுதான். 
 
பாக்யராஜ் சாரை போய் பார்த்ததுக்கு காரணமே வாய்ப்பு கிடைக்குமா? என எதிர்பார்த்துதான். ஆனா நான் அவரை சும்மா பார்க்க தான் வந்திருப்பதாக நினைத்து கொண்டார். எனக்கு மீண்டும் நடிக்க ஆசை இருக்கும் என்பது  பற்றி அவருக்கு ஐடியாவே இல்லை. எனக்கும் கேட்க கஷ்டமா இருந்துச்சு. அதனால நானும் அமைதியா வந்துட்டேன் என்றார் ராஜேஷ் குமார். 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker: 2வது முறையாக மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு - பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து..!
2வது முறையாக மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு - பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து..!
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Breaking News LIVE: ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
Breaking News LIVE: ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
Whatsapp Update: வாட்ஸ்-அப் திரையில் திடீரென வந்த வட்டம் - மெட்டா AI தொழில்நுட்பத்தின் பயன்கள் என்ன?
Whatsapp Update: வாட்ஸ்-அப் திரையில் திடீரென வந்த வட்டம் - மெட்டா AI தொழில்நுட்பத்தின் பயன்கள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker: 2வது முறையாக மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு - பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து..!
2வது முறையாக மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு - பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து..!
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Breaking News LIVE: ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
Breaking News LIVE: ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
Whatsapp Update: வாட்ஸ்-அப் திரையில் திடீரென வந்த வட்டம் - மெட்டா AI தொழில்நுட்பத்தின் பயன்கள் என்ன?
Whatsapp Update: வாட்ஸ்-அப் திரையில் திடீரென வந்த வட்டம் - மெட்டா AI தொழில்நுட்பத்தின் பயன்கள் என்ன?
Kakka Muttai Ramesh: அப்பாவின் மரணம்.. ரயில் பயணத்தில் அழுகை.. “காக்கா முட்டை” ரமேஷ் சோகக்கதை!
அப்பாவின் மரணம்.. ரயில் பயணத்தில் அழுகை.. “காக்கா முட்டை” ரமேஷ் சோகக்கதை!
நாடகமாடும் தமிழக அரசு; சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லையா?- அன்புமணி கேள்வி
நாடகமாடும் தமிழக அரசு; சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லையா?- அன்புமணி கேள்வி
CM Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர்  ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்
CM Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்
MR Vijayabaskar: ரூ.100 கோடி நில அபகரிப்பு : போலி ஆவணங்கள், தலைமறைவான எம்.ஆர். விஜயபாஸ்கர் - வடமாநிலம் விரைந்த போலீசார்
தலைமறைவான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் : வடமாநிலத்திற்கு விரைந்த சிபிசிஐடி போலீசார்
Embed widget