Vanangamudi Teaser: அர்விந்த்சாமி, ரித்திகா சிங், சிம்ரன்.. அதிரடியாக வெளியானது வணங்காமுடி டீசர்!
நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கும் நவரசா குறும்படத்தொகுப்புகளில் ஒன்றை அர்விந்த்சாமி இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேஜிக் பாக்ஸ் ஃபிலிம் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் செல்வா இயக்கத்தில் அர்விந்த்சாமி, ரித்திகா சிங், சிம்ரன், நந்திதா நடிப்பில் உருவாகிவரும் ‘வணங்காமுடி’ படத்தின் முதல் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இமான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். கோகுல் இந்த படத்தினை ஒளிப்பதிவு செய்கிறார்.
முன்னதாக, நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கும் ’நவரஸா’ குறும்படங்களின் தொகுப்பில் ஒன்றை அர்விந்த் சாமி இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் கோபத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள குறும்படத்தை நடிகர் அரவிந்த் சாமி இயக்கியுள்ளார். நடிகராக மட்டுமே அறியப்பட்ட அரவிந்த்சாமி இந்த ஆந்தாலஜி மூலமாக இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இது சற்று கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் ஹீரோ , சாக்லேட் பாய் என அறியப்பட்ட அரவிந்த் சாமி சமீபத்தில் வில்லனாக நடித்து பலரை வியப்பில் ஆழ்த்தினார். தற்போது உருவாகியுள்ள ஆந்தாலஜி தொடரில் 'ரெளத்திரம்' எனப் பெயரிடப்பட்டுள்ள பகுதியை இயக்குகிறார் . இதில் ரித்விகா, ஸ்ரீராம், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கொரோனா முதல் அலையின்போது திரைத்துறை தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்ய நவரசா என்னும் ஆந்தாலஜி வெப் தொடர் வெளியிடப்பட உள்ளது. மகிழ்ச்சி, கோவம்,காதல் என மனிதர்களுக்கே உரித்தான ஒன்பது உணர்வுகளை அடிப்பைடையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஒன்பது இயக்குநர்கள் இயக்க, மணிரத்தினம் மற்றும் ஜெயேந்தர் ஆகியோர் தயாரிக்கின்றனர். படத்தின் போஸ்டர்கள் வெளியாகி தொடர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் படத்தில் அரவிந்த் சாமி குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ரித்விகா, அதில் “ அரவிந்த் சாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணிபுரிவது என் வாழ்கையில ரொம்ப பெருமையான விஷயம் ,நடிகராக இல்லாமல் தொழில்நுட்பங்களை சிறப்பாக கையாளும் இயக்குநராக பார்க்கும் பொழுது மிகவும் வியந்தேன். இயக்கத்திற்கான நுணுக்கங்களை சரியாக பயன்படுத்தி அவர் காட்சிகளை வெளிக்கொண்டு வந்த விதம் அபாரமானது, எல்லாவற்றிற்கும் மேலாக அவை சுவாரஸ்யமாகவும் அசாரணமானதாகவும் இருந்தன. காட்சிகள் குறித்து ஆன்லைனில் நடத்தப்பட்ட பயிற்சி பட்டறை வகுப்புகள் எனக்கு அற்புத அனுபவமாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.கோவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் ‘ரௌத்திரம்’ பகுதியில் அன்புக்கரசி என்ற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் ரித்விகா.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















