படுக்கைக்கு அழைத்த ரவி மோகன் பட இயக்குநர்...பிரபல நடிகை லேகா வாசிங்டன் வாக்குமூலம் வைரல்
மறைந்த இயக்குநர் ஜீவா குறித்து பிரபல நடிகை லேகா வாசிங்டன் அளித்த வாக்குமூலம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் இருந்தவர் ஜீவா. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு ரவி மோகன் நடித்த தாம் தும் படத்தை இயக்கிவந்தபோது போது மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது தாம் தும் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இயக்குநர் ஜீவா குறித்த சில தகவல்களும் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் ஜீவா பிரபல நடிகை லேகா வாஷிங்டனை படுக்கை அழைத்ததாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது .
ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ஜீவா. தொடர்ந்து காதலன் , ஆசை , இந்தியன் , குஷி உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டு 12 பி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். லிங்குசாமி இயக்கி தமிழில் பெரிய வெற்றிபெற்ற ரன் படத்தை இந்தியில் இயக்கினார். உள்ளம் கேட்குமே , உன்னாலே உன்னாலே ஆகிய வெற்றிப்ப்படங்களை இயக்கியுள்ளார். இவரது கடைசி படம் ரவி மோகன் நடித்த தாம் தூம். இப்படத்தை இயக்கிவந்த போதே இவர மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பின் இப்படம் திரையரங்கில் வெளியாகி வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. தற்போது இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
படுக்கைக்கு அழைத்த ஜீவா ? லேகா வாஷிங்டன் குற்றசாட்டு!
இப்படம் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சில தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். அதில் தாம் தூம் படத்தின் போது வையாக்ரா ஓவர்டோஸ் ஆனதால் ஜீவா மாரடைப்பில் இறந்ததாகவும் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் முன்னதாக லேகா வாஷிங்டன் நாயகியாக நடிக்க இருந்ததாகவும் ஆனால் இயக்குநர் அவரை படுக்கைக்கு அழைத்து அவர் மறுத்துவிட்டதால் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்றும் மற்றொரு தகவல் பகிரப்பட்டு வருகிறது .
நடிகை லேகா வாஷிங்டன் கூறியதாக பகிரப்பட்டும் கருத்தில் " ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் தனது படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்தார். அவர் என்னை காரில் அழைத்துச் சென்று, "பதிலுக்கு எனக்கு என்ன கிடைக்கும்?" என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். நான் ஒன்றும் தெரியாதது போல் நடித்து, "ஒருவேளை ஒரு நல்ல நடிகர் கிடைக்கலாம்" என்றேன். ஆனால் அவர் விடாப்பிடியாக இருந்தார். இறுதியில், நான் பொறுமையிழந்து, " நான் உங்களுடன் உறவு கொள்ளப் போவதில்லை" என்று சொல்லிவிட்டேன். அவர் மிகவும் திகைத்துப் போனாலும், என்னைச் சம்மதிக்க வைக்க தொடர்ந்து முயற்சி செய்தார். எனக்கு அந்த வேடம் கிடைக்கவில்லை. ஆனால், அவர் ஆரம்பத்திலேயே அதைக் குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பின் போது தொடர்ச்சியான தொல்லைகளைச் சமாளிக்க வேண்டியதில்லை என்பதால், எனக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பின்னர், அவர் அதே படத்தின் கதாநாயகியுடன் வெளிநாட்டில் படப்பிடிப்பிற்குச் சென்றதாகவும், வயாகராவை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் எனக்குத் தெரியவந்தது. அது மிகவும் கச்சிதமாக அமைந்துவிட்டது என்று நான் நினைத்தேன்! இதற்கு பேர்தான் கர்மா"
It jus keeps gettin worse😭Lekha Washington who was initially approached for Lakshmi Raai 's role in the film once said this: https://t.co/yHB9q5Oe0K pic.twitter.com/CS03b3tOVi
— Aryan (@Pokeamole_) March 17, 2026
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















