CM Vijay: விஜய் ஒரு தெய்வப்பிறவி தான்.. விஜயகாந்த் இருந்திருக்கணும்.. நடிகர் தியாகு நெகிழ்ச்சி!
செந்தூரப்பாண்டி ஷூட்டிங்கில் தான் நான் விஜயை முதல்முறையாக பார்த்தேன். அப்போதே அவர் முகத்தில் ஒரு எழுச்சி தெரிந்தது என நடிகர் தியாகு தெரிவித்துள்ளார்.

விஜய் முதலமைச்சரான இந்த தருணத்தில், விஜயகாந்த் உயிரோடு இருந்திருந்தால் முதல் ஆளாக சென்று வாழ்த்து தெரிவித்திருப்பார் என நடிகர் தியாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மலர்ந்து விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தமிழக அரசியலில் மாற்றம் தேவை என்ற நிலையில் மக்களின் அமோக ஆதரவு தவெகவுக்கு கிடைத்துள்ளது. தேர்தல் பரப்புரையில் கூட அன்றைக்கு திமுக, அதிமுகவுக்கு மாற்றாக விஜயகாந்த் வந்தார். அவரை நாம் தேர்வு செய்யாமல் விட்டுவிட்டோம். இந்த முறையும் அப்படி விட்டுவிடக்கூடாது. விஜய்க்கு வாக்களிக்க வேண்டுமென கருத்துகள் முன்வைக்கப்பட்டது. இப்படியான நிலையில் விஜயின் தேர்தல் வெற்றி பற்றி நடிகரும், விஜயகாந்தின் நெருங்கிய நண்பருமான தியாகு சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதாவது, “என்னோட அருமை தம்பி முதலமைச்சர் விஜய்க்கு இந்த தருணத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்குப் பின் என் நண்பன் விஜயகாந்த் முதலமைச்சராக வருவான் என நினைத்தேன். ஆனால் அந்த இடத்தில் விஜய் வந்திருப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது. சீரும் சிறப்புமாக ஆட்சியை நடத்த வேண்டும் என நான் நினைக்கிறேன். லஞ்சம், போதைப்பொருள் இல்லாத பெண்கள் பாதுகாப்பு குறிக்கோளாக கொண்டு ஆட்சி நடத்தப்படும் என சொன்னது என்னை கவர்ந்தது. விஜய் ஆடம்பரம் இல்லாமல் ஆட்சியை நடத்துகிறார். அது பலபேருக்கு பிடிக்கவில்லை.
அமைதியாக, அற்புதமாக ஆட்சியை நடத்துகிறார். தேர்தல் பரப்புரையில் கூட யாருடைய குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்கவில்லை. மக்களின் எழுச்சியைப் பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருந்தது. விஜயை அவரது அம்மா ஷோபா மிகவும் செல்லமாக வளர்த்தார். நான் ஒரு சாய்பாபா பக்தன். குளத்தூரில் விஜய் தன் தாயின் ஆசைக்காக ஒரு சாய்பாபா கோயில் கட்டினார். ஷீரடி கோயிலுக்கும் சென்று வந்தார். திருச்செந்தூர் சென்று வணங்கினார். முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
செந்தூரப்பாண்டி ஷூட்டிங்கில் தான் நான் விஜயை முதல்முறையாக பார்த்தேன். அப்போதே அவர் முகத்தில் ஒரு எழுச்சி தெரிந்தது. விஜயகாந்த் இன்று இருந்திருந்தால் விஜய் முதலமைச்சரானதற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்திருப்பார்.
இதையும் படிங்க: “சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் ஒரு கேரக்டருக்கு நான் ஒப்பந்தமானேன். அப்போது விஜயுடன் நடிக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால் விஜயகாந்த் எனக்கு போன் செய்து நான் தாயகம் படத்தில் நடித்து வருகிறேன். என்னுடன் நீ குலு மணாலி வர வேண்டும். அடுத்த 15 நாட்கள் என்கூட தான் நீ இருக்க வேண்டும் என கறாராக சொல்லி விட்டார். விஜய் உண்மையில் தெய்வ பிறவி தான். எம்ஜிஆரை விட ஆயிரம் மடங்கு மக்கள் ஆதரவு விஜய்க்கு உள்ளது” என நடிகர் தியாகு கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















