Krish & Aish Youtube: “சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
Krish and Aish Youtube Channel: யூடியூபில் தம்பதியாக வீடியோ போட்டு பிரபலமாக உள்ள க்ரிஷ்-ஐஷ்வர்யா மீது, ஆபாசத்தை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளதாகக் கூறி, கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த காலத்தில், சமூக ஊடகங்கள் என்பவை தவிர்க்க முடியாத சக்திகளாகிவிட்டன. அதன் மூலம் ஏற்பட்ட புரட்சியால் தற்போது ஆட்சியே மாறியுள்ளது. யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று பிரபலமாக உள்ள சமூக ஊடகங்களில் பல்வேறு வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு பிரபலமானவர்களும் உள்ளனர். அந்த வகையில், தம்பதியாக வீடியோ போட்டு பிரபலமானவர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா. தற்போது, இவர்கள் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.
யூடியூபில் பிரபலமான கிருஷ் ஐஷ்வர்யா தம்பதி
இணையதளத்தில் பிரபலமாக உள்ள கிருஷ் ஐஷ்வர்யா(Krish and Aishwarya Raghu) தம்பதி, இன்ஸ்டாகிராம், யூடியூப் போன் சமூக வலைதளங்களில் வாழ்க்கை முறை, பொழுதுபோக்கு மற்றும் ஜோடிகளை மையமாகக் கொண்ட வீடியோக்களை வெளியிட்டு, மக்களின் கவனத்தை ஈர்த்தவர்கள். இவர்கள் @krishandaish என்ற இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் தங்கள் வீடியோக்களை பகிர்ந்து, தற்போது பிரபலமாக உள்ளனர். இவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
கோவை சைபர் க்ரைமில் அளிக்கப்பட்ட புகார் என்ன.?
இந்த பிரபலமான யூடியூப் தம்பதி மீது, கோவையை சேர்ந்த வழக்கறிஞர் நவேஷ் ராஜ் என்பவர், கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கிருஷ் மற்றும் ஐஷ்வர்யா தம்பதி, அவர்களது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில், ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டள்ளதாகக் கூறி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
தனது புகார் மனுவில், கிருஷ், ஐஷ்வர்யா தம்பதி, சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றி பிரபலமானவர்கள் என்றும், இவர்கள் சமீபத்தில் நாட்டி அமெரிக்கா(Naughty America) என்ற பெயரில் ஆபாசமான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அவர்களின் வீடியோக்களை 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளும் அதிகளவில் பார்ப்பதாகவும், அவர்களை திசை திருப்பும் வகையில் இவர்களது வீடியோக்களின் செயல்பாடுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு, இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவுவதால், தவறான வழி நடத்துதலாக அமையும் என்றும், இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2000, பிஎன்எஸ் சட்டம் 2023 பிரிவுகளின் கீழ், சிறுவர், சிறுமிகளை மிகவும் பாதிக்கும் என்பதால், தண்டனைக்குரிய குற்றமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால், மேற்கூறிய சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றம், அவர்கள் பதிவேற்றி வீடியோக்களை, யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். அதோடு, அவர்களின் சமூகவலைதள கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளர். மேலும், இதுபோன்ற ஆபாசத்தை தூண்டும் வீடியோக்களை பதிவேற்றுவதன் பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் வழக்கறிஞர் நவேஷ் ராஜ் கேட்டுள்ளார்.
சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கோவை சைபர் க்ரைம் போலீஸார், அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபலமாக உள்ள யூடியூப் தம்பதிகளான கிருஷ் ஐஷ்வர்யா மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















