மேலும் அறிய

Rajinikanth: “எனது அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவர் இவர்தான்” உண்மையை உடைத்துப் பேசிய ரஜினிகாந்த்..!

அரசியலுக்கு வருவதாக தெரிவித்து விட்டு எப்படி பின்வாங்குவது என அந்த நேரத்தில் யோசித்ததாக நடிகர் ரஜினிகாந்த் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

அரசியலுக்கு வருவதாக தெரிவித்து விட்டு எப்படி பின்வாங்குவது என அந்த நேரத்தில் யோசித்ததாக நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

ரஜினி சொன்ன அனுபவம் 

சென்னையில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் வெள்ளி விழா ஒன்றில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ”திறமை ஒருவர் எப்படி பேச வேண்டும் என சொல்லும். அரங்கம் எவ்வளவு பேச வேண்டும் என சொல்லும். அனுபவம் சொல்லும் என்ன பேசணும், பேசக்கூடாது என சொல்லும்” என கூறினார். இந்த அரங்கில் என் அனுபவம் மிகவும் எச்சரிக்கையாக பேச வேண்டும் என சொன்னதாக கூறினார். 

மேலும், ஒரு மருத்துவமனையில் உடலில் முக்கியமாக உள்ள சிறுநீரக பிரச்சனை உட்பட பல பிரச்சினைகளுக்கு சிகிச்சை எடுத்தேன். ஆனால் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அப்போது தான் உலகளவில் சிறந்த மருத்துவராக ரவிச்சந்திரன் அறிமுகம் எனக்கு கிடைத்தது. உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தார். 

அரசியலுக்கு வராதது ஏன்? 

அதேசமயம் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் நான் அரசியலில் எண்ட்ரீ கொடுக்கலாம் என முடிவெடுத்தேன். அப்ப கொரோனா முதல் அலை முடிந்து  2வது அலை வந்து கொண்டிருக்கிறது.  நான் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தேன். ஆக இதிலிருந்து பின்வாங்கவும் முடியாது, உண்மையையும் சொல்ல முடியாது என நான் மருத்துவர் ரவிச்சந்திரனிடம் ஆலோசனை செய்தேன். அப்ப நீங்கள் பிரச்சாரம் செல்வது, மக்களை சந்திப்பது இதெல்லாம் கூடாது என மருத்துவர் அறிவுறுத்தினார். 

பயம்:

ஒருவேளை நீங்கள் மக்களை சந்திக்க வேண்டுமென்றால் 10 அடி தள்ளி தான் இருக்க வேண்டும். பிரச்சாரம் செல்ல வேண்டும் என்றால் மாஸ்க் கழற்றவே கூடாது என எச்சரித்தனர். இதெல்லாம் வாய்ப்பே இல்லை என சொன்னேன். இதை வெளியில் சொன்னால் பயந்துட்டாங்கன்னு சொல்வாங்க. அரசியல் முடிவில் ஒருமுறை பின்னாடி சென்றால் நமக்கு இருக்கும் மதிப்பு என்னாகும் என எனக்கு பயம் இருந்தது. 

உடனே டாக்டர், நீங்க சொல்ல வேண்டாம். ஊடகங்கள், ரசிகர்களை கூப்பிடுங்க நான் சொல்றேன். உடல்நலம் பற்றிய உண்மையை தான் சொல்லப் போகிறோம். அதன்பிறகு தான் நான் அரசியலுக்கு வரவில்லை என தைரியமாக சொன்னேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

ரஜினியின் அரசியல் பயணம் 

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் வருகை குறித்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதியிலேயும் போட்டியிடுவோம் என சொன்னார். அதன்பின்னர் ட்விட்டல் பல சமூக நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்தார். 

அதன்பின்னர் 2020 ஆம் அண்டு ரஜினியின் உடல்நிலை குறித்தும், அரசியல் வருகை குறித்தும் போலியான அறிக்கை வெளியானது. ஆனால் இதில் குறிப்பிட்டப்பட்ட உடல்நிலை குறித்த தகவல் உண்மையானது என ரஜினி தெரிவித்தார். அதன்பின்னர் ஜனவரியில் கட்சியில் தொடக்கம்..டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 

ஆனால் நடுவில் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து டிசம்பர் 29 ஆம் தேதி கட்சி தொடங்கவில்லை  என குறிப்பிட்டு 3 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தேர்தல் பிரசாரத்தின்போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால், என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, எனக்கு மட்டும்தான் தெரியும் என கூறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

தலைப்பு செய்திகள்

கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் மம்மட்டியான் ஸ்டார்ஸ்...விமர்சனம் இதோ
கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் மம்மட்டியான் ஸ்டார்ஸ்...விமர்சனம் இதோ
வந்துட்டே இருக்கேன்...வந்துட்டே இருக்கேன்...விசாரணை அலைச்சலில் கடுப்பான சூரி
வந்துட்டே இருக்கேன்...வந்துட்டே இருக்கேன்...விசாரணை அலைச்சலில் கடுப்பான சூரி
பாலச்சந்தர் முதல் பாக்யராஜ் வரை..முடிவுக்கு வரும் பா வரிசை இயக்குநர்களின் சகாப்தம்
பாலச்சந்தர் முதல் பாக்யராஜ் வரை..முடிவுக்கு வரும் பா வரிசை இயக்குநர்களின் சகாப்தம்
விஜய்க்கு எதிராக பேசியதாக மிரட்டும் தவெக குருப்...விஷ்ணு விஷால் விளக்கம்
விஜய்க்கு எதிராக பேசியதாக மிரட்டும் தவெக குருப்...விஷ்ணு விஷால் விளக்கம்

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
Embed widget