மேலும் அறிய

Ponniyin Selvan 2: கமல் வருவதால் பொன்னியின் செல்வன் விழாவில் ரஜினி பங்கு பெறவில்லையா? உண்மையான காரணம் என்ன?

Ponniyin Selvan 2: மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடை பெறுகிறது.

தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள படம், பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய நாவலைத் தழுவி உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகி சுமார் 450 கோடி வரை வசூலித்தது. இதைத்தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம், வரும் ஏப்ரல் மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘அகநக’ எனும் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. 

இசை வெளியீட்டு விழா:

பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கமல் கலந்து கொள்கிறார். நடிகர் சிம்புவும் இவ்விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இவர்களைத் தவிர, படக்குழுவினர்களான த்ரிஷா, மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். 

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழா, திருவிழா போல கோலாகலமாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியின்போது, சிகப்பு கம்பள வரவேறப்பு, நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களை 360 டிகிரி கேமரா வீடியோ எடுப்பது என பல வித்தியாசமான அம்சங்களும் இடம் பெற்றிருந்தன. இந்நிகழ்ச்சியில், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து காெண்டனர். ஆனால், இன்று நடைபெறவுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி கலந்து கொள்ளவில்லை. இந்த செய்தி, திரையுலக வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பி வந்தது. 


Ponniyin Selvan 2: கமல் வருவதால் பொன்னியின் செல்வன் விழாவில் ரஜினி பங்கு பெறவில்லையா? உண்மையான காரணம் என்ன?

ரஜினி கலந்து கொள்ளாதது ஏன்?

பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரஜினி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள போவதில்லை என்ற செய்தி சமூக வலைதளங்களில் வட்டமடிக்க தொடங்கின. இதையடுத்து, ரஜினியை மணிரத்னம் ஒதுக்குவதாகவும் கமல் ஹாசனுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதால் ரஜினி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என பலரும் சர்ச்சையை கிளப்பி வந்தனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இதன் உண்மையான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 

Also Read|Ponniyin Selvan 2: சிறப்பு விருந்தினராக கமல்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி.. களைகட்டும் பொன்னியின் செல்வன் 2 விழா..!

நடிகர் ரஜினி, லைகா நிறுவனம் தயாரிக்கும் ஜெய்லர் பட ஷூட்டிங்கிள் பிசியாக உள்ளார்.  அது மட்டுமன்றி லைகா  தயாரிக்கும் அடுத்தடுத்த படங்களிலும் ரஜினி நடிக்கவுள்ளார். இதனால்தான் ரஜினியால் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 


Ponniyin Selvan 2: கமல் வருவதால் பொன்னியின் செல்வன் விழாவில் ரஜினி பங்கு பெறவில்லையா? உண்மையான காரணம் என்ன?

“நடிக்க வாய்ப்பு தரவில்லை..”

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த செப்டம்பர் மாதம் நடைப்பெற்றது. அதில், கலந்து கொண்ட ரஜினி படம் குறித்தும் அப்படத்தின் இயக்குனர் குறித்தும் பேசினார். அப்போது, பொன்னியின் செல்வன் கதையின் முக்கியமான கதாப்பாத்திரமான பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்தரத்தில் நடிக்கும் வாய்ப்பை தனக்கு தருமாறு கேட்டதாகவும் ஆனால் மணிரத்னம் தன்னை நடிக்கவைக்க மறுத்து விட்டதாகவும் ரஜினி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டுள்ளோம்" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
"அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்".. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டுள்ளோம்" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
"அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்".. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
TN Rain Updates: இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
Embed widget