மேலும் அறிய

PM Modi Interview: இந்திரா காந்தி ருத்ராட்சம் போட்டாங்க.. காங்கிரஸ், ஏன் திமுக கூட இருக்கு? : நேர்காணலில் பிரதமர் மோடி

PM Modi Interview: சனாதன தர்மம் மற்றும் தேர்தல் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, பிரதமர் மோடி நேர்காணல் ஒன்றில் விரிவாக பேசியுள்ளார்.

PM Modi Interview: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் சூழலில், பிரதமர் மோடி பல்வேறு முக்கிய பிரச்னைகள் தொடர்பாக விரிவாக பேசியுள்ளார்.

பிரதமர் மோடி நேர்காணல்:

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக வரும் 19ம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட மொத்தம் 102 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இந்நிலையில் பிரதமர் மோடி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், தேர்தல் பத்திரங்கள், ரஷ்யா-உக்ரைன் போருக்கு இடையே தனது தலையீடு, ராமர் கோயில் திறப்பு, சனாதன தர்ம பிரச்னை, காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்:

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கேள்விக்கு, “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எங்கள் உறுதி. இந்த திட்டத்திற்காக நாட்டில் பலர் களத்தில் இறங்கி உள்ளனர்.  இதுதொடர்பான குழுவிற்கு பலரும் ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.  மிகவும் சாதகமான மற்றும் புதுமையான ஆலோசனைகள் வந்துள்ளன. அந்த அறிக்கையின் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தினால், நாட்டிற்கு பல்வேறு பலன்கள்கிடைக்கும்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சனாதன சர்ச்சை:

சனாதன தர்மம் தொடர்பான கேள்விக்கு, "இது காங்கிரஸிடம் கேட்கப்பட வேண்டும். ஒரு காலத்தில் இந்த காங்கிரசுடன் தான் மகாத்மா காந்தி தன்னை இணைத்துக் கொண்டார்.  இதே காங்கிரஸைச் சேர்ந்த இந்திரா காந்தி பகிரங்கமாக ருத்ராட்ச மாலைய தனது கழுத்தில் அணிந்திருந்தார். அப்படி இருக்கையில், தற்போது சனாதனத்திற்கு எதிராக இப்படி விஷத்தை கக்கும் நபர்களுடன் உட்கார வேண்டிய கட்டாயம் என்ன என்று காங்கிரஸிடம் கேள்வி கேட்க வேண்டும். திமுக என்பது வெறுப்பு எண்ணத்துடன்தான் பிறந்தது. ஆனால், இங்கு கேள்வி காங்கிரஸை பற்றியது. காங்கிரசுக்கு நிர்ப்பந்தம் என்பது நாட்டுக்கு கவலையளிக்கும் விஷயம்" என பிரதமர் மோடி கூறினார். 

வடக்கு - தெற்கு பிரிவினை:

இந்தியாவை வெவ்வேறு பகுதிகளாக பார்ப்பது,  திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு   இந்தியாவைப் பற்றிய "மனமின்மையை" காட்டுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும்,  "இந்தியாவின் எந்தப் பகுதியில் ராமரின் பெயருடன் அதிக கிராமங்கள் உள்ளன? தமிழ்நாடு.  அதை எப்படி தனி (பகுதி) என்று சொல்லலாம்?. பன்முகத்தன்மைதான் நமது பலம், அதை நாம் கொண்டாட வேண்டும்” என தெரிவித்தார். 

தேர்தல் பத்திரம்:

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கேள்விக்கு, “தேர்தல் பத்திரங்கள் இல்லை என்றால், பணம் எங்கிருந்து வந்தது, எங்கு சென்றது என்பதைக் கண்டுபிடிக்க யாருக்கு அதிகாரம் இருந்திருக்கும்? எனக்கு இருக்கும் கவலை என்னவென்றால், முடிவெடுப்பதில் குறைபாடுகள் இல்லை என்று நான் ஒருபோதும் கூறவில்லை. முடிவெடுப்பதில், நாங்கள் கற்றுக்கொள்கிறோம் மற்றும் மேம்படுத்துகிறோம். தேர்தல் பத்திர விவகாரங்களிலும் அதனை மேம்படுத்துவது மிகவும் சாத்தியம். ஆனால் இன்று நாட்டை முற்றிலும் கறுப்புப் பணத்தை நோக்கித் தள்ளிவிட்டோம். அதனால்தான் அனைவரும் வருந்துவார்கள் என்று நான் கூறுகிறேன்” என பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget