மேலும் அறிய

PM Modi: பரம்பரை சொத்து மீது வாரிசு வரி - காங்கிரஸை விட்டு விளாசிய பிரதமர் மோடி

PM Modi: காங்கிரஸ் இறந்த பிறகும் மக்களை கொள்ளையடிக்கிறது என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

 PM Modi: காங்கிரஸின் ஆபத்தான நோக்கங்கள் வெளிப்பட தொடங்கியுள்ளன என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பயத்தில் உலக சக்திகள் - மோடி

சத்தீஸ்கரின் சர்குஜாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, “சத்தீஸ்கரில் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கொண்டிருப்பதற்கு ஒட்டுமொத்த நாடுமே சாட்சியாக உள்ளது. 'விக்சித் பாரத்' மற்றும் 'விக்சித் சத்திஸ்கர்' ஆகியவற்றிற்காக உங்கள் ஆசிர்வாதத்தைப் பெற நான் இங்கு வந்துள்ளேன்.  விக்சித் பாரத் என்று நான் கூறும்போது, ​​காங்கிரசும், உலகில் அமர்ந்திருக்கும் சில சக்திகளும் கோபமடைகின்றன.  இந்தியா வலுவானதாக மாறினால்  சில சக்திகளின் ஆட்டம் கெட்டுவிடும். இந்தியா சுயசார்பாக மாறினால் சில சக்திகள் தங்களது கடைகளை மூடவேண்டியிருக்கும். அதனால் தான் அவர்கள் காங்கிரஸ் மற்றும் I.N.D.I.A. கூட்டணியின் ஆட்சியை விரும்புகின்றன.

காங்கிரசை சாடிய பிரதமர் மோடி:

காங்கிரஸின் மோசமான நிர்வாகம் மற்றும் அலட்சியமே நாட்டின் அழிவுக்கு காரணம். இன்று பயங்கரவாதம் மற்றும் நக்சலிசத்திற்கு எதிராக பாஜக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வன்முறையை பரப்பும் மக்களை காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது. மேலும் அவர்களை தைரியாமானவர்கள் எனவும் அழைக்கிறது.  இந்த காங்கிரஸின் மிகப்பெரிய தலைவர், தீவிரவாத்கள் கொல்லப்படும்போது கண்ணீர் வடிக்கிறார்.   இதுபோன்ற செயல்களால், நாட்டு மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியானபோது, ​​காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக்கின் முத்திரை இருப்பதாக அன்றே கூறினேன். அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும்போதே, இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என்று பாபா சாகேப் அம்பேத்கர் தலைமையில் முடிவு செய்யப்பட்டது.  பாபா சாகேப் அம்பேத்கரின் வார்த்தைகளையும் பொருட்படுத்தாமல், ஆந்திராவில் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சித்தது. அதனை நாடு முழ்வுவதும் கொண்டு வரவும் திட்டமிட்டது.  எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி ஒதுக்கீட்டின் சில பகுதியை திருடுவதன் மூலம் மதத்தின் அடிப்படையில் சிலருக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயன்றது.

காங்கிரஸின் வாரிசு வரி திட்டம்:

அரச குடும்ப இளவரசரின் ஆலோசகரும், அரச குடும்பத்தின் இளவரசரின் தந்தையின் ஆலோசகரும் நடுத்தர வர்க்கத்தினர் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இப்போது இவர்கள் இதைவிட ஒருபடி மேலே சென்றுவிட்டார்கள். காங்கிரஸ் வாரிசு வரி விதிக்கப் போவதாகச் சொல்கிறது. மேலும் பெற்றோரிடமிருந்து பெற்ற பரம்பரை சொத்துக்கும் வரி விதிக்கப் போகிறது. உங்கள் கடின உழைப்பால் நீங்கள் சேர்த்த சொத்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படாது. அதையும் காங்கிரஸ் உங்களிடமிருந்து பறித்துவிடும். நீங்கள் உயிருடன் இருக்கும் வரை காங்கிரஸ் அதிக வரிகளை விதிக்கும், நீங்கள் உயிருடன் இல்லாத போது அது உங்களுக்கு பரம்பரை வரியை சுமத்திவிடும். காங்கிரஸ் கட்சி முழுவதையும் தங்கள் மூதாதையரின் சொத்தாகக் கருதி, பிள்ளைகளிடம் ஒப்படைத்தவர்கள், இப்போது இந்தியர்கள் தங்கள் சொத்தை தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுப்பதை விரும்பவில்லை” என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

பரம்பரை சொத்துக்களுக்கு வாரிசு வரி விதிப்பது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடஸ் பேசியிருந்தார். ஆனால், அது கட்சியின் கருத்தல்ல என காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
TN By-Election: திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
How Car Airbags Work: இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
Revolt RVX: ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
Embed widget