மேலும் அறிய

Half Yearly Exams: மாணவர்களே… அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு: ஏன்? மீண்டும் எப்போது? விடுமுறை எப்படி?

தேர்வு நடத்தப்படாத மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மாதம் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நடைபெறாத அரையாண்டுத் தேர்வுகள், ஜனவரி மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அரையாண்டுத் தேர்வில் மாற்றம்

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் என அனைத்து விதமான பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கெனவே பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.

இதில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 9ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வந்தது, 23ஆம் தேதி வரையும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. அதேபோல,  1 முதல் 5ஆம் வகுப்புக்கு டிசம்பர் 16ல் தொடங்கி 23ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

பரவலாகப் பெய்யும் கனமழை

இதற்கிடையே வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்து வருவதால் புயலும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும் மாறிமாறி உருவாகி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையானது அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களில் நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை.

இவ்வாறு தேர்வு நடத்தப்படாத மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மாதம் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இவர்களுக்கு ஜனவரி 2 முதல் 10ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. இதே அட்டவணையில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் தேர்வு நடைபெற உள்ளது.

அரையாண்டுத் தேர்வு விடுமுறை எப்படி?

அதே நேரத்தில் அரையாண்டு விடுமுறையில் மாற்றம் இருக்காது. திட்டமிட்டபடி தொடர்ந்து 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் புத்தாண்டான ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

VIT University : ’உலக தர வரிசை பட்டியலில் 597வது இடம்’ சாதனை படைத்த வேலூர் VIT பல்கலைக்கழகம்..!
’உலக தர வரிசை பட்டியலில் 597வது இடம்’ சாதனை படைத்த வேலூர் VIT பல்கலைக்கழகம்..!
Incentives for students : மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை.! இன்று முதல் விண்ணப்பிக்க அரசு அழைப்பு- யார் யாருக்கெல்லாம்.?
மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை.! இன்று முதல் விண்ணப்பிக்க அரசு அழைப்பு- யார் யாருக்கெல்லாம்.?
CBSE: சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தத்தில் என்னதான் குளறுபடி? மென்பொருள் நிறுவனம் விளக்கம்
CBSE: சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தத்தில் என்னதான் குளறுபடி? மென்பொருள் நிறுவனம் விளக்கம்
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Assembly : ”அட்லி பற்றியும் பேசுவோம் சட்னி பற்றியும் பேசுவோம்” பேரவையில் சம்பவம் செய்த திமுக..!
”அட்லி பற்றியும் பேசுவோம் சட்னி பற்றியும் பேசுவோம்” பேரவையில் சம்பவம் செய்த திமுக..!
சட்டமன்றத்தில் இருமுறை தேசியகீதம்.! திமுக- தவெக காரசார விவாதம்- இன்று நடந்தது என்ன.?
சட்டமன்றத்தில் இருமுறை தேசியகீதம்.! திமுக- தவெக காரசார விவாதம்- இன்று நடந்தது என்ன.?
’’அடிப்படையே இல்லாமல் குற்றம்சாட்டுவதா? அப்பட்டமான சந்தர்ப்பவாதம்’’- திமுகவை வெளுத்த மார்க்சிஸ்ட்!
’’அடிப்படையே இல்லாமல் குற்றம்சாட்டுவதா? அப்பட்டமான சந்தர்ப்பவாதம்’’- திமுகவை வெளுத்த மார்க்சிஸ்ட்!
TN Assembly: ’’காவிரில நமக்கே அதிக உரிமை; இப்டியே போனா சொட்டுத்தண்ணி கிடைக்காது’’ பாயிண்ட்டை அடுக்கிய செளமியா அன்புமணி
TN Assembly: ’’காவிரில நமக்கே அதிக உரிமை; இப்டியே போனா சொட்டுத்தண்ணி கிடைக்காது’’ பாயிண்ட்டை அடுக்கிய செளமியா அன்புமணி
MK Stalin greets Rahul : 'உடன்பிறப்பை தவிர்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்’ ராகுல்காந்திக்கு வாழ்த்து..!
'உடன்பிறப்பை தவிர்த்த மு.க.ஸ்டாலின்’ ராகுல்காந்திக்கு வாழ்த்து..!
TN Assembly: கோரிக்கை வைத்த உதயநிதி; உடனே ஓகே சொன்ன முதல்வர் விஜய்- தீர்மானத்தில் மாற்றம்!
TN Assembly: கோரிக்கை வைத்த உதயநிதி; உடனே ஓகே சொன்ன முதல்வர் விஜய்- தீர்மானத்தில் மாற்றம்!
Mojtaba Vs Trump: “ட்ரம்ப் தான் தீவிரம் காட்டினார், தயக்கத்தோடு டீலுக்கு ஒப்புக் கொண்டேன்“: மொஜ்தபா கூறுவது என்ன.?
“ட்ரம்ப் தான் தீவிரம் காட்டினார், தயக்கத்தோடு டீலுக்கு ஒப்புக் கொண்டேன்“: மொஜ்தபா கூறுவது என்ன.?
Land Cruiser LC300: CM விஜய்யின் ப்ரியமான கார்; அரசியல்வாதிகள் விரும்பும் Toyota லேண்ட் க்ரூஸர் LC 300-ல் அப்படி என்ன இருக்கு.?
CM விஜய்யின் ப்ரியமான கார்; அரசியல்வாதிகள் விரும்பும் Toyota லேண்ட் க்ரூஸர் LC 300-ல் அப்படி என்ன இருக்கு.?
Embed widget