மேலும் அறிய

திருவாரூர்: மத்திய பல்கலை., நுழைவு தேர்வில் மொழி மாறி வினாத்தாள்- மீண்டும் நுழைவுத் தேர்வு எழுத தேதி அறிவிப்பு

வினாத்தாள் வேற்று மொழியில் மாறிவந்த மாணவர்கள் மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் ஆகாத மாணவர்கள் தேர்வு ரத்து செய்யப்பட்ட இடங்களில் வருகின்ற ஆகஸ்ட் 12 முதல் 14 வரை மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்

மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மொழி மாறி வினாத்தாள் வந்த விவகாரத்தில், மாணவர்கள் மீண்டும் நுழைவுத் தேர்வு எழுத தேசிய தேர்வு முகமை தேதி அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் நேற்று மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு நாடு முழுவதும் 289 நகரங்களில் 489 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வு திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் கோவிவெண்ணி அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்றது.  திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் நேற்றைய தினம் 657 மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 403 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு 13 மொழிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முதன்முறையாக தமிழ் மொழியும் இடம் பெற்று இருந்தது. 


திருவாரூர்: மத்திய பல்கலை., நுழைவு தேர்வில் மொழி மாறி வினாத்தாள்- மீண்டும் நுழைவுத் தேர்வு எழுத தேதி அறிவிப்பு

இந்த நிலையில் தமிழ் மொழியில் வினாத்தாளை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வினாத்தாள் மாறி வந்தது. மேலும் சர்வர் பிரச்சினை காரணமாக ஹோம் சயின்ஸ் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகளுக்கு வினாத்தாள் பதிவிறக்கம் ஆகவில்லை. இதனால் நேற்று மதியம் 3 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு மாலை 5:30 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. இதில் சர்வர் பிரச்சினை காரணமாக அஞ்சல் அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் வேறு மொழியில் மாறி வந்த மாணவர்கள் மற்றும் சர்வர் பிரச்சனை காரணமாக வினாத்தாள் பதிவிறக்கம் ஆகாத மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் தேர்வு எழுதினர். 


திருவாரூர்: மத்திய பல்கலை., நுழைவு தேர்வில் மொழி மாறி வினாத்தாள்- மீண்டும் நுழைவுத் தேர்வு எழுத தேதி அறிவிப்பு

இந்த நிலையில் தேர்வு எழுதாமல் வெளியில் வந்த மாணவர்கள் தங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை நாங்கள் தமிழில் வினாத்தாள் தேர்ந்தெடுத்திருந்த நிலையில் மாற்று மொழியில் வந்திருந்ததால் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியது. ஆகவே தேர்வு துறை அதிகாரிகள் எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்திருந்தனர். இதுகுறித்த செய்தியை ஏபிபி நாடுவில் நாம் வெளியிட்டிருந்தோம். இதன் காரணமாக வினாத்தாள் வேற்று மொழியில் மாறிவந்த மாணவர்கள் மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் ஆகாத மாணவர்கள் மற்றும் தேர்வு ரத்து செய்யப்பட்ட இடங்களில் வருகின்ற ஆகஸ்ட் 12 முதல் 14 வரை மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த நிலையில் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று  காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெற்ற தேர்வில் 34 மாணவர்கள் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் 18 பேர் தேர்வு எழுதினர். 


திருவாரூர்: மத்திய பல்கலை., நுழைவு தேர்வில் மொழி மாறி வினாத்தாள்- மீண்டும் நுழைவுத் தேர்வு எழுத தேதி அறிவிப்பு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

பகுதிநேர ஆசிரியர்கள் டூ நிரந்தர ஆசிரியர்கள்: 'கொள்கை முடிவு' எடுப்பாரா விஜய்? சட்டமன்றத்தில் எழும் புதிய எதிர்பார்ப்பு!
பகுதிநேர ஆசிரியர்கள் டூ நிரந்தர ஆசிரியர்கள்: 'கொள்கை முடிவு' எடுப்பாரா விஜய்? சட்டமன்றத்தில் எழும் புதிய எதிர்பார்ப்பு!
இலவச சைக்கிள், லேப்டாப், ₹1000 உதவித்தொகை.. நாகை அரசு ITI-ல் சேர அரிய வாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
இலவச சைக்கிள், லேப்டாப், ₹1000 உதவித்தொகை.. நாகை அரசு ITI-ல் சேர அரிய வாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
எம்.டெக், எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகள்: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவிப்பு!
எம்.டெக், எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகள்: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவிப்பு!
இன்ஜினியரிங் படிக்க ஆளே இல்லையா? புதுச்சேரியை அதிரவைத்த சென்டாக் லேட்ரல் என்ட்ரி புள்ளிவிவரங்கள்!
இன்ஜினியரிங் படிக்க ஆளே இல்லையா? புதுச்சேரியை அதிரவைத்த சென்டாக் லேட்ரல் என்ட்ரி புள்ளிவிவரங்கள்!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
TN RAIN ALERT: அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
NEET Re-Exam Issue: நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Embed widget