மேலும் அறிய

யாருடா அந்த பையன்..? மயிலாடுதுறை மாவட்ட அளவில் இவர்தான் முதலிடம்...!

10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் 496 மதிப்பெண்கள் பெற்று மயிலாடுதுறை மாவட்ட அளவில் கொள்ளிடம் தனியார் பள்ளி மாணவர் தவசிமாலை என்ற சிறப்பிடம் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதேபோல் 11 -ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது.10-ம் வகுப்பு தேர்வு முடிகள் மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. 

118 மண்டலங்கள் 

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடந்து முடிந்தது. அதன் பின்னர் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28-ல் தொடங்கியது. இந்த 10-ம் வகுப்பு தேர்வை தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதினார்கள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 15-ம் தேதி முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்களை 118 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

விடைத்தாள்கள் திருத்தம் 

அங்கிருந்து விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு ஏப்ரல் 17-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 21-ம்தேதி முதல் 30-ம் தேதி வரை விடைத்தாள் திருத்துதல் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மேலும் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று முடிவடைந்தது. முன்னதாக தேர்வு அட்டவணை வெளியிட்டபோது, மே மாதம் 19-ந்தேதி (திங்கட்கிழமை) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறையால் கூறப்பட்டது. ஆனால், 12 -ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு மே 9-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு, ஒரு நாள் முன்னதாகவே மே 8-ம் தேதி வெளியிடப்பட்டது. அதேபோல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் முன்கூட்டியே வெளியாகலாம் என பரவலாக பேசப்பட்டது‌. 

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

இந்த நிலையில் தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் முன்கூட்டியே தேர்வு முடிவை வெளியிடுவது பற்றி முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மே 16-ம் தேதியான இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். 11 -ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 16 -ம் தேதியான இன்று பிற்பகலில் வெளியிடப்படும் என்றும் அன்பில் மகேஷ் கூறியிருந்த நிலையில், 10 -ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தொடர்ந்து காலையிலேயே 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை இன்று காலை வெளியிட்டார்.

மயிலாடுதுறை மாவட்ட விபரம் 

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 6037 மாணவர்கள், மாணவிகள் 6112 என 12,149 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 5530 மாணவர்களும், 5878 மாணவிகள் என மொத்தம் 11,408 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.60 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.17 ஆகும். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.90% ஆகும். இது கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55 சதவீதம் பெற்ற நிலையில் இந்தாண்டு 93.90 சதவீதம் எடுத்து 2.35 சதவீதம் அதிகம். மாநில அளவில் 23 வது இடம் பெற்றுள்ளது. 

மாவட்ட அளவில் முதலிடம் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே கொள்ளிடம் சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவர் தவசி மலை 496 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றுள்ளார். இதேபோன்று சீர்காழி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி உமாபார்வதி என்ற மாணவி 495 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், மேலும் மாவட்ட அளவில் 494 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை 5 பேர் பிடித்துள்ளனர். அதிக மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்த மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget