மேலும் அறிய

தற்கொலைக்கு முயன்ற மாணவி... தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அசத்தல்... எப்படி நடந்தது அதிசயம்!

மனம் உடைந்தார் கிரீஸ்மா. நன்றாக படித்தும், திறமை இருந்தும், பணம் காரணமாக தனக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லையே என மனம் நொந்தார். இறுதியாக யாரும் தங்கள் வாழ்நாளில் செய்யக்கூடாத

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற மாணவி, துணை பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்து அசத்தி உள்ளார்.

கர்நாடகா மாநிலம் தும்கூரை மாவட்டத்தை சேர்ந்தவர் கிரீஷ்மா. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் படிப்பில் கில்லாடி. முடிபிடாரேவில் உள்ள ஆல்வாஸ் பள்ளியில் படித்து வந்த கிரீஸ்மா, 9 ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில் 95 சதவீத மதிப்பெண்களை பெற்றவர். கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு படித்து வந்த அவருக்கு பெற்றோரால் பள்ளி கட்டணத்தை செலுத்த இயலவில்லை. கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பள்ளி கட்டணமான ஒரு லட்சம் ரூபாய் கிரீஷ்மாவின் ஏழை குடும்பத்துக்கு பெரும் தொகையாக இருந்தது.

இருந்தாலும் மனம் தளராமல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வந்த கிரீஷ்மாவுக்கு பேரிடியாக அமைந்தது பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கை. நன்றாக படிக்கும் மாணவி என்று தெரிந்து கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்ற ஒரே காணத்துக்காக கிரீஷ்மாவை தேர்வு எழுத பள்ளி அனுமதிக்கவில்லை. இதனை அறிந்த அவரது பெற்றோர் கர்நாடக கல்வித் துறை அமைச்சர் வரை அனுகினர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்கொலைக்கு முயன்ற மாணவி... தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அசத்தல்... எப்படி நடந்தது அதிசயம்!

மனம் உடைந்தார் கிரீஸ்மா. நன்றாக படித்தும், திறமை இருந்தும், பணம் காரணமாக தனக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லையே என மனம் நொந்தார். இறுதியாக யாரும் தங்கள் வாழ்நாளில் நினைத்தே பார்க்கக்கூடாத தவறான முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றார் கிரீஸ்மா. ஆனால், உடனடியாக அவரை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்தால், உயிர் பிழைத்தார்.

இது கர்நாடக ஊடகங்களின் தலைப்புச் செய்தியானது. தகவலறிந்த அம்மாநில அமைச்சர் கிரீஸ்மாவின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான துணை தேர்வுகளில் கிரீஸ்மா பங்கேற்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

கடந்த மாதம் நடந்து முடிந்த துணை பொதுத் தேர்வில் 53,155 பேர் தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 625 மதிப்பெண்களுக்கு 599 மதிப்பெண்களை எடுத்து அசத்தியுள்ளார் கிரீஸ்மா. இது குறித்து பேசியுள்ள அவர், “எனக்காக உதவி செய்த அனைவருக்கும் நன்றி. நான் முன்பு தவறான முடிவை எடுத்தேன். பின்னர் தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றிபெற்றுள்ளேன்.” என்றார்.

ஒரு வினாடியில் எடுக்கப்படும் தற்கொலை முடிவு எவ்வளவு தவறானது என்பதற்கு கிரீஸ்மாவின் இந்த வாழ்க்கை பாடமாக அமைந்துள்ளது.

தற்கொலை எண்ணங்கள், மன அழுத்தங்கள் ஏற்பட்டால் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 104 என்ற உதவி எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள்.

தலைப்பு செய்திகள்

NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்
அரசுப் பள்ளிகளில் 18ஆயிரம்+ காலி இடங்கள்; மாணவர்களின் எதிர்காலத்தில் சமரசமா?
அரசுப் பள்ளிகளில் 18ஆயிரம்+ காலி இடங்கள்; மாணவர்களின் எதிர்காலத்தில் சமரசமா?

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
Skoda Kodiaq RS: பட்டையை கிளப்பும் டர்போ என்ஜின்; ஸ்கோடா கோடியாக் RS முன்பதிவு தொடக்கம்; விலை, அம்சங்கள் என்ன.?
பட்டையை கிளப்பும் டர்போ என்ஜின்; ஸ்கோடா கோடியாக் RS முன்பதிவு தொடக்கம்; விலை, அம்சங்கள் என்ன.?
NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
Embed widget