மேலும் அறிய

‛மாணவர்களின் எதிர்காலம் போல அவர்களின் உயிரும் முக்கியம்’ -அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்களின் எதிர்காலம் போலவே, அவர்களின் பாதுகாப்பும் முக்கியமானது என்று பள்ளி, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு முதல் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் முறையாக இயங்கவில்லை. தமிழகத்திலும் பள்ளிகள், கல்லூரிகள் கடந்தாண்டு டிசம்பர் இறுதி முதல்தான் படிப்படியாக செயல்படத் தொடங்கியது. ஆனால், அதற்குள் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வந்த காரணத்தால் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது.

இதனால், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து, மத்திய கல்வி அமைச்சகத்தினருடன் கடந்த வாரம் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் கட்டாயம் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றார்.


‛மாணவர்களின் எதிர்காலம் போல அவர்களின் உயிரும் முக்கியம்’ -அமைச்சர் அன்பில் மகேஷ்

மேலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கண்டிப்பாக இணையவழியில் நடத்தப்படாது என்றும், நேரடித் தேர்வாகதான் என்றும் உறுதியாக கூறினார். திருச்சியில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

“ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில், கல்வியாண்டு முடிந்துவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்கப்படுகிறது. கொரோனா நோய் நம் அனைவருக்கும் புதியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அரசின் அனைத்து துறையினருக்குமே நடைமுறை சிக்கல் உள்ளது.

மேலும் படிக்க : கன்னியாகுமரிக்கு அருகே கடலுக்குள் நகரம் கட்டும் சீனா : கேள்விக்குறியாகும் இந்தியாவின் பாதுகாப்பு!

கொரோனா காலமாக இருப்பதால் நாம் குறிப்பிட்ட காலம் பொறுமையாக இருக்க வேண்டி உள்ளது. கொரோனா தொற்று பரவல் எவ்வளவு விரைவாக குறைகிறதோ, அதற்கேற்ப விரைவாக பிளஸ் 2 தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில், மாணவர்களின் எதிர்காலம் எப்படி முக்கியமோ அதே அளவுக்கு அவர்களது உடல்நலனும், உயிரும் முக்கியம் என்று கருதுகிறோம்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது எழுந்துள்ள பாலியல் புகார்கள் தொடர்பான விவகாரத்தில் குழுவின் அறிக்கை வந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளை அனைவரும் பார்ப்பீர்கள்.”இவ்வாறு அவர் கூறினார்.


‛மாணவர்களின் எதிர்காலம் போல அவர்களின் உயிரும் முக்கியம்’ -அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் பாதிப்பு தினசரி 27 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. முழு ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், இந்த மாத இறுதிக்குள் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்துவிடுவது சுலபம். ஆனால், அவர்கள் உயர்கல்வியில் சேரும்போது பல்கலைகழகங்களும், நீதிமன்றங்களும் அவர்களது தேர்ச்சி செல்லாது என்று கூறினால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். இதன்காரணமாகவே, 12ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

TNTET Exam Hall Ticket: ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது! ஜூலை 4, 5ல் தேர்வு- பெறுவது எப்படி?
TNTET Exam Hall Ticket: ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது! ஜூலை 4, 5ல் தேர்வு- பெறுவது எப்படி?
VIT University : ’உலக தர வரிசை பட்டியலில் 597வது இடம்’ சாதனை படைத்த வேலூர் VIT பல்கலைக்கழகம்..!
’உலக தர வரிசை பட்டியலில் 597வது இடம்’ சாதனை படைத்த வேலூர் VIT பல்கலைக்கழகம்..!
Incentives for students : மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை.! இன்று முதல் விண்ணப்பிக்க அரசு அழைப்பு- யார் யாருக்கெல்லாம்.?
மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை.! இன்று முதல் விண்ணப்பிக்க அரசு அழைப்பு- யார் யாருக்கெல்லாம்.?
CBSE: சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தத்தில் என்னதான் குளறுபடி? மென்பொருள் நிறுவனம் விளக்கம்
CBSE: சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தத்தில் என்னதான் குளறுபடி? மென்பொருள் நிறுவனம் விளக்கம்

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Issue : ’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
C. Mahendran : ’மோசடிக்கு துணைபோனவர்’ தவெகவில் இணைந்த சி.மகேந்திரன் மீது CPI கடும் தாக்கு…!
C. Mahendran : ’மோசடிக்கு துணைபோனவர்’ தவெகவில் இணைந்த சி.மகேந்திரன் மீது CPI கடும் தாக்கு…!
TNTET Exam Hall Ticket: ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது! ஜூலை 4, 5ல் தேர்வு- பெறுவது எப்படி?
TNTET Exam Hall Ticket: ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது! ஜூலை 4, 5ல் தேர்வு- பெறுவது எப்படி?
Israel Attack Lebanon: அடங்காத இஸ்ரேல்; ஆட்டம் கண்ட அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம்; முடங்கிய பேச்சுவார்த்தை; என்ன நடக்குது.?
அடங்காத இஸ்ரேல்; ஆட்டம் கண்ட அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம்; முடங்கிய பேச்சுவார்த்தை; என்ன நடக்குது.?
கடல் கடந்தும் வீசும் 'விஜய்' அலை: கத்தாரை அதிரவைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் முப்பெரும் விழா!
கடல் கடந்தும் வீசும் 'விஜய்' அலை: கத்தாரை அதிரவைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் முப்பெரும் விழா!
EPFO 3.0 Launch: சம்பளதாரர்களுக்கு குட் நியூஸ்.! இனி UPI, ATM-ல ஈசியா PF பணத்த எடுக்கலாம்; விரைவில் வருது EPFO 3.0
சம்பளதாரர்களுக்கு குட் நியூஸ்.! இனி UPI, ATM-ல ஈசியா PF பணத்த எடுக்கலாம்; விரைவில் வருது EPFO 3.0
சட்டமன்றத்தில் இருமுறை தேசியகீதம்.! திமுக- தவெக காரசார விவாதம்- இன்று நடந்தது என்ன.?
சட்டமன்றத்தில் இருமுறை தேசியகீதம்.! திமுக- தவெக காரசார விவாதம்- இன்று நடந்தது என்ன.?
Embed widget