மேலும் அறிய

சேலத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - நேரில் பார்வையிட்ட ஆட்சியர்

சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சென்று மாணவிகள் தேர்வு எழுதுவதை பார்வையிட்டார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதில் 8 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தை பொருத்தவரை அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் மற்றும் தனித்தேர்வர்கள் உட்பட 18,830 மாணவர்களும், 20,443 மாணவிகளும் எனக்கு மொத்தம் 39,273 பேர் பிளஸ் 2 வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பெற்று 313 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். சேலம் மாவட்டத்தில் பொதுத்தேர்வை சந்திக்கவுள்ளார் பள்ளி மாணவர்களுக்காக 149 மையங்களும், தனித்தேர்வர்களுக்கான ஆறு மையங்களும் என சேலம் மாவட்டம் முழுவதும் 155 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

சேலத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - நேரில் பார்வையிட்ட ஆட்சியர்

மாணவர்களுக்கான இருக்கை, குடிநீர், கழிவறை மற்றும் தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை தயார் நிலையில் வைக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சேலம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக நேற்று சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கான தேர்வு அறை ஒதுக்கீடு, தேர்வு என் ஒட்டுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சேலம் மாவட்டத்தில் துறை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், முதன்மை கண்காணிப்பாளர், வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலர், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு, குழு அலுவலர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பொது தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் தேர்வு கட்டுப்பாட்டு ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

சேலத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - நேரில் பார்வையிட்ட ஆட்சியர்

இந்த நிலையில் சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சென்று மாணவிகள் தேர்வு எழுதுவதை பார்வையிட்டார். மாணவிகளுக்கு முறையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறுகையில்,  பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மனதைரியத்துடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் ஒரு தேர்வு முடித்தபின்னர், எழுதிமுடித்து தேர்வு குறித்து வருத்தமும், மகிழ்ச்சியும் கொள்வதை விட்டுவிட்டு அடுத்த தேர்வுக்கு தயாராக வேண்டும் அனைத்து தேர்வுகளையும் சிறப்பாக எழுத வேண்டும் என்று கூறினார். இதற்கு பெற்றோர்கள் பொதுத்தேர்வு நடைபெறும் நேரங்களில் மாணவர்களை சிரமப்படுத்தும் விதமாக பேசுவது, நடந்து கொள்வது இல்லாமல் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் முறையாக தேர்வுக்கு தயாராக பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயார் செய்யும் போது 10 மற்றும் 11-ம் வகுப்பு பொது தேர்வுக்கான மையங்கள் மற்றும் வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
CBSE: 'நீதித்துறையில் ஊழல்'- சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
CBSE: 'நீதித்துறையில் ஊழல்'- சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!
முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
சிங்கிள் சார்ஜில் 171 கிலோமீட்டர்.. சிட்டியில் சுற்ற PURE EV Etryst 350 - விலை எவ்ளோ?
சிங்கிள் சார்ஜில் 171 கிலோமீட்டர்.. சிட்டியில் சுற்ற PURE EV Etryst 350 - விலை எவ்ளோ?
Karunas: திமுகவில் எனக்கு சீட் கன்பார்ம்.. எந்த தொகுதி தெரியுமா? - கருணாஸ் சொன்ன பதில்!
Karunas: திமுகவில் எனக்கு சீட் கன்பார்ம்.. எந்த தொகுதி தெரியுமா? - கருணாஸ் சொன்ன பதில்!
Embed widget