மேலும் அறிய

"நம்பிக்கையோடு தடைகளை கடந்து வர வேண்டும்" - ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த தென்காசி மாணவி!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தேர்வில் இந்திய அளவில் 108வது இடத்தை பெற்றிருந்த வெற்றி மாணவி, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சண்முகவள்ளி ஐ.ஏ.எஸ் தேர்வில் மூன்றாவது முயற்சியில் தேர்ச்சி.

தென்காசி மதுரை செல்லும் சாலையில் உள்ள அலங்கார் நகரைச்சேர்ந்த ஈஸ்வர ராஜ்-கோமதி இவர்களின் மகள் சண்முகவள்ளி பொறியியல் பட்டதாரியான இவர் 2020 ல் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108 வது இடத்தையும், தமிழக அளவில் 3வது இடத்தையும், பெண்கள் பிரிவில் தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். இவர் தொடக்கப்பள்ளி படிப்பை தென்காசி எம்.கே.வி.கே பள்ளியிலும், குற்றாலம் ஸ்ரீபராசக்தி வித்யாலயாவில் 10ம் வகுப்பையும், உயர்நிலைப் படிப்பை இலஞ்சி பாரத் மாண்டிசோரியில் முடித்தார். பின்னர் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பிஇ படித்த சண்முகவள்ளி கல்லூரியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை வெற்றி புரிந்தவர்.

"கல்லூரியில் படிக்கும்போது தான் சிவில் சர்விஸ் ஆர்வம் வந்தது. தினமும் செய்தித்தாள் வாசிப்பது, செய்திகளை எல்லாம் விரல்நுனியில் வைத்திருப்பது என்று இருந்தேன். இறுதியாண்டு படிப்பு முடிக்கும் நேரம் நிறைய வேலைகள் வந்தது. அப்போது வெளிநாடு போகலாமா இல்லை  இங்கேயே வேலை செய்யலாமா என்று குழப்பம். பின்னர், நிதானமாக யோசித்தபோதுதான் யுபிஎஸ்சி என்று முடிவெடுத்தேன்." என்று சிவில் சர்வில் பாதைக்குள் வந்ததை ஆர்வத்துடன் கூறுகிறார்.

இதற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் குறித்து, "சிறு வயதில் கிரண்பேடி சம்மந்தப்பட்ட செய்திகள் எல்லாம் வாசித்திருக்கிறேன். பிறகு டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் சார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சார் பற்றிய செய்திகள் எல்லாம் உற்சாகம் தந்தது. முதல் இரண்டு முறையும் என்னால் முதல்நிலை தேர்வு தாண்ட முடியவில்லை, விடாமல் முயற்சி செய்தேன். மூன்றாவது முறை மூன்று தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றேன். இதுக்கு என் குடும்பம் நிறைய ஒத்துழைப்பு கொடுத்தார்கள்’’ என்கிறவரைத் தொடர்கிறார் அப்பா ஈஸ்வரராஜ்.‘‘சண்முகவள்ளி படிப்பில் எப்போதும் முதலிடம்தான். பத்தாம் வகுப்பு வரை குற்றாலம் பராசக்தி வித்யாலயா பள்ளியில் சிபிஎஸ்இ வழியில் படித்தாள். அப்போது பத்தாம் வகுப்பில் 500க்கு 500 மார்க் வாங்கி மாநிலத்துல முதலிடம் பிடித்தாள். பின்னர், பாரத் மான்டிசோரி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்தாள். இது மாநில வழிக் கல்வி. 1200க்கு 1184 மார்க் வாங்கி மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் ஐந்தாவது இடமும் பிடித்தாள். அண்ணா பல்கலைக்கழகத்தில் எட்டு செமஸ்டரிலும் எட்டு கோல்டு மெடல் வாங்கியிருக்கிறாள். படிப்பு மட்டுமல்ல. பொதுஅறிவிலும் சிறுவயதில் இருந்தே ஆர்வம் அதிகம். உலக நடப்புகளை உடனடியாக கூறுவாள். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்று கூறிய போது எல்லோருமே உற்சாகப்படுத்தினோம்." என்று பெருமையாக கூறினார்.

‘‘நான் இதற்காக சமூகவியல் பாடத்தை விருப்பப் பாடமா எடுத்து படித்தேன். என்னுடைய எஞ்சினியரிங் பாடம் விருப்பத்தாளில் இல்லை. அதனால, விருப்பப் பாடத்தாளில் பொலிட்டிக்கல் சயின்ஸ், சமூகவியல் உள்ளிட்ட நான்கைந்து பாடங்களை பார்த்தேன். எனக்கு சமூகவியல் மீது நாட்டம் அதிகம். அதனால், அதைத் தேர்ந்தெடுத்து படித்தேன். பொதுவாக, சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொள்ள நாம் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். நமக்கு நிறைய தடைகள் வரும். வேறு வேலைக்கு போகலாம் என்று கூட தோன்றும். சிலர் மாற்றுத்திட்டம் எல்லாம் வைத்திருப்பார்கள்.

ஆனால், நம்பிக்கையோடு எல்லாவற்றையும் கடந்து வர வேண்டும். அப்படி வந்தால் நிச்சயம் நமக்கு வெற்றிதான். நான் இதைவிட்டு போக வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. கொரோனா நேரத்தில் ஒருமுகப்படுத்தி படித்தேன். வெற்றி கிடைத்தது. இந்நேரத்த்தில் எனக்கு பயிற்சி அளித்த எல்லா மையத்தினருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்’’ என்றவர், ‘‘என்னுடைய பணியை திறமையாக செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மக்கள் எளிதாக அணுகக்கூடிய ஒரு ஐஏஎஸ்ஸாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...’’ என  உற்சாகமாகச் சொல்கிறார் சண்முகவள்ளி.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Embed widget