மேலும் அறிய

"நம்பிக்கையோடு தடைகளை கடந்து வர வேண்டும்" - ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த தென்காசி மாணவி!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தேர்வில் இந்திய அளவில் 108வது இடத்தை பெற்றிருந்த வெற்றி மாணவி, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சண்முகவள்ளி ஐ.ஏ.எஸ் தேர்வில் மூன்றாவது முயற்சியில் தேர்ச்சி.

தென்காசி மதுரை செல்லும் சாலையில் உள்ள அலங்கார் நகரைச்சேர்ந்த ஈஸ்வர ராஜ்-கோமதி இவர்களின் மகள் சண்முகவள்ளி பொறியியல் பட்டதாரியான இவர் 2020 ல் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108 வது இடத்தையும், தமிழக அளவில் 3வது இடத்தையும், பெண்கள் பிரிவில் தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். இவர் தொடக்கப்பள்ளி படிப்பை தென்காசி எம்.கே.வி.கே பள்ளியிலும், குற்றாலம் ஸ்ரீபராசக்தி வித்யாலயாவில் 10ம் வகுப்பையும், உயர்நிலைப் படிப்பை இலஞ்சி பாரத் மாண்டிசோரியில் முடித்தார். பின்னர் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பிஇ படித்த சண்முகவள்ளி கல்லூரியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை வெற்றி புரிந்தவர்.

"கல்லூரியில் படிக்கும்போது தான் சிவில் சர்விஸ் ஆர்வம் வந்தது. தினமும் செய்தித்தாள் வாசிப்பது, செய்திகளை எல்லாம் விரல்நுனியில் வைத்திருப்பது என்று இருந்தேன். இறுதியாண்டு படிப்பு முடிக்கும் நேரம் நிறைய வேலைகள் வந்தது. அப்போது வெளிநாடு போகலாமா இல்லை  இங்கேயே வேலை செய்யலாமா என்று குழப்பம். பின்னர், நிதானமாக யோசித்தபோதுதான் யுபிஎஸ்சி என்று முடிவெடுத்தேன்." என்று சிவில் சர்வில் பாதைக்குள் வந்ததை ஆர்வத்துடன் கூறுகிறார்.

இதற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் குறித்து, "சிறு வயதில் கிரண்பேடி சம்மந்தப்பட்ட செய்திகள் எல்லாம் வாசித்திருக்கிறேன். பிறகு டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் சார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சார் பற்றிய செய்திகள் எல்லாம் உற்சாகம் தந்தது. முதல் இரண்டு முறையும் என்னால் முதல்நிலை தேர்வு தாண்ட முடியவில்லை, விடாமல் முயற்சி செய்தேன். மூன்றாவது முறை மூன்று தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றேன். இதுக்கு என் குடும்பம் நிறைய ஒத்துழைப்பு கொடுத்தார்கள்’’ என்கிறவரைத் தொடர்கிறார் அப்பா ஈஸ்வரராஜ்.‘‘சண்முகவள்ளி படிப்பில் எப்போதும் முதலிடம்தான். பத்தாம் வகுப்பு வரை குற்றாலம் பராசக்தி வித்யாலயா பள்ளியில் சிபிஎஸ்இ வழியில் படித்தாள். அப்போது பத்தாம் வகுப்பில் 500க்கு 500 மார்க் வாங்கி மாநிலத்துல முதலிடம் பிடித்தாள். பின்னர், பாரத் மான்டிசோரி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்தாள். இது மாநில வழிக் கல்வி. 1200க்கு 1184 மார்க் வாங்கி மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் ஐந்தாவது இடமும் பிடித்தாள். அண்ணா பல்கலைக்கழகத்தில் எட்டு செமஸ்டரிலும் எட்டு கோல்டு மெடல் வாங்கியிருக்கிறாள். படிப்பு மட்டுமல்ல. பொதுஅறிவிலும் சிறுவயதில் இருந்தே ஆர்வம் அதிகம். உலக நடப்புகளை உடனடியாக கூறுவாள். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்று கூறிய போது எல்லோருமே உற்சாகப்படுத்தினோம்." என்று பெருமையாக கூறினார்.

‘‘நான் இதற்காக சமூகவியல் பாடத்தை விருப்பப் பாடமா எடுத்து படித்தேன். என்னுடைய எஞ்சினியரிங் பாடம் விருப்பத்தாளில் இல்லை. அதனால, விருப்பப் பாடத்தாளில் பொலிட்டிக்கல் சயின்ஸ், சமூகவியல் உள்ளிட்ட நான்கைந்து பாடங்களை பார்த்தேன். எனக்கு சமூகவியல் மீது நாட்டம் அதிகம். அதனால், அதைத் தேர்ந்தெடுத்து படித்தேன். பொதுவாக, சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொள்ள நாம் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். நமக்கு நிறைய தடைகள் வரும். வேறு வேலைக்கு போகலாம் என்று கூட தோன்றும். சிலர் மாற்றுத்திட்டம் எல்லாம் வைத்திருப்பார்கள்.

ஆனால், நம்பிக்கையோடு எல்லாவற்றையும் கடந்து வர வேண்டும். அப்படி வந்தால் நிச்சயம் நமக்கு வெற்றிதான். நான் இதைவிட்டு போக வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. கொரோனா நேரத்தில் ஒருமுகப்படுத்தி படித்தேன். வெற்றி கிடைத்தது. இந்நேரத்த்தில் எனக்கு பயிற்சி அளித்த எல்லா மையத்தினருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்’’ என்றவர், ‘‘என்னுடைய பணியை திறமையாக செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மக்கள் எளிதாக அணுகக்கூடிய ஒரு ஐஏஎஸ்ஸாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...’’ என  உற்சாகமாகச் சொல்கிறார் சண்முகவள்ளி.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்.. குஜராத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்.. குஜராத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்..  ஆடிப்போன எம்.ஆர்.கே
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே
பாமக உட்கட்சி பூசல்.. சுற்றுப்பயணத்தை கையில் எடுத்த அன்புமணி.. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
பாமக உட்கட்சி பூசல்.. சுற்றுப்பயணத்தை கையில் எடுத்த அன்புமணி.. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
பிளே ஆப்க்கு முன்பாக ஆர்.சி.பி அடைக்க வேண்டிய ஓட்டை என்ன ? நிபுனர்கள் கருத்து
பிளே ஆப்க்கு முன்பாக ஆர்.சி.பி அடைக்க வேண்டிய ஓட்டை என்ன ? நிபுனர்கள் கருத்து
IND vs ENG: ஸ்ரேயாஸ் இல்லாம போறீங்களா? மிடில் ஆர்டரில் என்ன செய்யப்போகிறது இந்தியா? ரசிகர்கள் ஆதங்கம்
IND vs ENG: ஸ்ரேயாஸ் இல்லாம போறீங்களா? மிடில் ஆர்டரில் என்ன செய்யப்போகிறது இந்தியா? ரசிகர்கள் ஆதங்கம்
Embed widget