மேலும் அறிய

NEET Leak: 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு? முக்கிய விவரங்கள் லீக் ஆனதால் தேர்வர்கள் அதிர்ச்சி!

NEET PG Leak: நாடு முழுவதும் நுழைவுத் தேர்வுகளும் அதில் நடைபெறுவதாக எழும் முறைகேடு புகார்களுமே அதிகம் பேசுபொருளாக மாறியுள்ளன.

நீட் முதுகலைத் தேர்வு நடைபெறும் விதம், கலந்துகொள்ளும் தேர்வர்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் அடங்கிய சுற்றறிக்கை லீக்கானதை அடுத்து, தேர்வை எழுதும் மருத்துவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் நுழைவுத் தேர்வுகளும் அதில் நடைபெறுவதாக எழும் முறைகேடு புகார்களுமே அதிகம் பேசுபொருளாக மாறியுள்ளன. இந்த நிலையில், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் எம்டி (Doctor of Medicine), எம்எஸ் (Master of Surgery) மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர நீட் முதுகலைத் தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. 

பலகட்டத் தாமதம், மாற்றங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 11ஆம் தேதி நீட் முதுகலைத் தேர்வு நடைபெற உள்ளது. இவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆக.8ஆம் தேதி வெளியாக உள்ளது. தேர்வு மைய ஒதுக்கீடு விவரம் ஜூலை 31ஆம் தேதி வெளியான நிலையில், அதில் வெளி மாநிலங்களில் தேர்வர்களுக்கு மையங்கள் ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக எம்.பி.க்கள் தலையீட்டுக்குப் பிறகு, பெரும்பாலும் சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

2 ஷிஃப்டுகளில் நீட் தேர்வு

இந்த நிலையில், அனைத்து வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் சங்கம் ஒரு சுற்றறிக்கையை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி ’’ஆகஸ்ட் 11ஆம் தேதி இரண்டு ஷிஃப்டுகளாக நீட் முதுகலைத் தேர்வு நடைபெற உள்ளது. காலை 9 முதல் 12.30 மணி வரை முதல் ஷிஃப்ட்டும், 3.30 மணி முதல் 7 மணி வரை 2ஆவது ஷிஃப்ட்டும் நடைபெற உள்ளன. தேர்வுக்கு 2 மணி நேரம் முன்னதாக, குறிப்பாக முதல் ஷிஃப்ட் மாணவர்கள் காலை 7 மணிக்கும் மதிய ஷிஃப்ட் மாணவர்கள் மதியம் 1.30 மணிக்கும் தேர்வு மையத்துக்கு வர வேண்டும்.

அதிக எண்ணிக்கையிலான மருத்துவ மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்முறையில் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நீட் முதுகலைத் தேர்வின் முக்கியமான தன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்காகத் தேர்வை பாதுகாப்பாக மற்றும் தடையின்றி நடத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.28 லட்சம் பேர் எழுதும் தேர்வு

169 நகரங்களில் 376 தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வை, 2,28,542 தேர்வர்கள் எழுத உள்ளனர். கணினி முறையில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தும் லீக் ஆகியுள்ள சூழலில், தேர்வு முறை, வினாத்தாள் ஆகியவற்றின் விவரங்களும் கசியாது என்று என்ன நிச்சயம் என அனைத்து வெளிநாட்டு மருத்துப் பட்டதாரிகள் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Embed widget