மேலும் அறிய

NEET Leak: 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு? முக்கிய விவரங்கள் லீக் ஆனதால் தேர்வர்கள் அதிர்ச்சி!

NEET PG Leak: நாடு முழுவதும் நுழைவுத் தேர்வுகளும் அதில் நடைபெறுவதாக எழும் முறைகேடு புகார்களுமே அதிகம் பேசுபொருளாக மாறியுள்ளன.

நீட் முதுகலைத் தேர்வு நடைபெறும் விதம், கலந்துகொள்ளும் தேர்வர்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் அடங்கிய சுற்றறிக்கை லீக்கானதை அடுத்து, தேர்வை எழுதும் மருத்துவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் நுழைவுத் தேர்வுகளும் அதில் நடைபெறுவதாக எழும் முறைகேடு புகார்களுமே அதிகம் பேசுபொருளாக மாறியுள்ளன. இந்த நிலையில், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் எம்டி (Doctor of Medicine), எம்எஸ் (Master of Surgery) மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர நீட் முதுகலைத் தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. 

பலகட்டத் தாமதம், மாற்றங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 11ஆம் தேதி நீட் முதுகலைத் தேர்வு நடைபெற உள்ளது. இவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆக.8ஆம் தேதி வெளியாக உள்ளது. தேர்வு மைய ஒதுக்கீடு விவரம் ஜூலை 31ஆம் தேதி வெளியான நிலையில், அதில் வெளி மாநிலங்களில் தேர்வர்களுக்கு மையங்கள் ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக எம்.பி.க்கள் தலையீட்டுக்குப் பிறகு, பெரும்பாலும் சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

2 ஷிஃப்டுகளில் நீட் தேர்வு

இந்த நிலையில், அனைத்து வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் சங்கம் ஒரு சுற்றறிக்கையை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி ’’ஆகஸ்ட் 11ஆம் தேதி இரண்டு ஷிஃப்டுகளாக நீட் முதுகலைத் தேர்வு நடைபெற உள்ளது. காலை 9 முதல் 12.30 மணி வரை முதல் ஷிஃப்ட்டும், 3.30 மணி முதல் 7 மணி வரை 2ஆவது ஷிஃப்ட்டும் நடைபெற உள்ளன. தேர்வுக்கு 2 மணி நேரம் முன்னதாக, குறிப்பாக முதல் ஷிஃப்ட் மாணவர்கள் காலை 7 மணிக்கும் மதிய ஷிஃப்ட் மாணவர்கள் மதியம் 1.30 மணிக்கும் தேர்வு மையத்துக்கு வர வேண்டும்.

அதிக எண்ணிக்கையிலான மருத்துவ மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்முறையில் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நீட் முதுகலைத் தேர்வின் முக்கியமான தன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்காகத் தேர்வை பாதுகாப்பாக மற்றும் தடையின்றி நடத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.28 லட்சம் பேர் எழுதும் தேர்வு

169 நகரங்களில் 376 தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வை, 2,28,542 தேர்வர்கள் எழுத உள்ளனர். கணினி முறையில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தும் லீக் ஆகியுள்ள சூழலில், தேர்வு முறை, வினாத்தாள் ஆகியவற்றின் விவரங்களும் கசியாது என்று என்ன நிச்சயம் என அனைத்து வெளிநாட்டு மருத்துப் பட்டதாரிகள் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
“அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
Embed widget