மேலும் அறிய

National Testing Agency : ஒரே பெயரில் மாணவர்களை ஏமாற்றி மோசடி; தேசியத் தேர்வுகள் முகமை எச்சரிக்கை!

"சில நேர்மையற்ற நபர்கள் பல்வேறு இணையதளங்கள் மூலம் என்டிஏ மற்றும் அதன் அதிகாரிகளின் பெயரை தவறாகப் பயன்படுத்துகின்றனர்''.

தேசியத் தேர்வுகள் முகமையின் பெயரில் சிறிது மாற்றம் செய்து, மாணவர்களை ஏமாற்றி சிலர் மோசடி செய்து வருவதாகத் தேசியத் தேர்வுகள் முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ, மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், கலை, அறிவியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான க்யூட், ஆசிரியர் தகுதித் தேர்வான யுஜிசி நெட், சிஎஸ்ஐஆர் நெட் உள்ளிட்ட முக்கியமான நுழைவுத் தேர்வுகளை என்டிஏ என்று அழைக்கப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது.

தேசியத் தேர்வுகள் முகமையின் பெயரைப் பயன்படுத்தி முறைகேடு

இந்த நிலையில் தேசியத் தேர்வுகள் முகமையின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு நபர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, இணைய தள முகவரியில் சிறிய மாற்றம் செய்தோ, என்டிஏ அதிகாரிகள் போன்று வேடமிட்டோ முறைகேட்டில் ஈடுபட்டு, மாணவர்களை ஏமாற்றுவது தெரிய வந்தது.

இதையடுத்து என்டிஏ போலிகளிடம் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "சில நேர்மையற்ற நபர்கள் பல்வேறு இணையதளங்கள் மூலம் என்டிஏ மற்றும் அதன் அதிகாரிகளின் பெயரை தவறாகப் பயன்படுத்துகின்றனர். மேலும் சிலர் என்டிஏ அதிகாரிகள் போல் வேடம் போடுகின்றனர். குறிப்பாக இளநிலை நீட் தேர்வு ஓஎம்ஆர் முறைகேடு அல்லது தேர்வு குறித்த மோசடி அதிகம் நடைபெறுகிறது. எனவே இதுபோன்ற ஆள்மாறாட்டம் அல்லது என்டிஏ மற்றும் அதன் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்துபவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தேர்வுகள், அதன் முடிவுகள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு https://www.nta.ac.in/ மற்றும் https://exams.nta.ac.in/NEET/ ஆகிய இணையதளங்களை மட்டுமே காண வேண்டும் எனவும் என்டிஏ அறிவுறுத்தி உள்ளது.

பொது மக்கள் https://exams.nta.ac.in/NEET/images/public-notice-for-neet-ug-2024-false-cases-of-impersonation-usingname-of-nta-employees.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, என்டிஏ அறிக்கையைக் காணலாம்.

பின்னணி என்ன?

நாடு முழுவதும் மே 5ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில், 13,31,321 மாணவிகளும் 9,96,393 மாணவர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் 17 மூன்றாம் பாலினத்தவரும் தேர்வை எழுதினர். இவர்களுக்கு யாரும் எதிர்பாராத விதமாக நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளான, ஜூன் 4ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. 

இதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். இந்த சாதனை சர்ச்சைக்கும் வழிவகுத்தது. இத்தனை மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றது எப்படி என்று கேள்வி எழுந்தது. 

இதற்கிடையே பிஹார், பாட்னா உள்ளிட்ட நகரங்களில் நீட் முறைகேடு நடந்ததாகவும் ஆள் மாறாட்டம், வினாத்தாள் முன்கூட்டியே கசிவு உள்ளிட்ட மோசடிகள் நடந்ததாகவும் புகார் எழுந்தது. விசாரணையில் சில உறுதியும் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து என்டிஏ இவ்வாறு தெரிவித்துள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை - உதயநிதி, EPS-க்கு பதில் வருமா?
ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை - உதயநிதி, EPS-க்கு பதில் வருமா?
TN Govt: வாகன ஃபேன்சி எண்ணிற்கான கட்டணம் உயர்வு - கட்டட அனுமதிக்கான கட்டணமும் எகிறப்போகுது..!
வாகன ஃபேன்சி எண்ணிற்கான கட்டணம் உயர்வு - கட்டட அனுமதிக்கான கட்டணமும் எகிறப்போகுது..!
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும்? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும்? சென்னை? - வானிலை அறிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
Embed widget